<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730</id><updated>2012-02-18T01:36:07.698+05:30</updated><category term='சிறுகதை'/><category term='விசயகாந்து'/><category term='வருத்தம்'/><category term='பிறந்த நாள் வாழ்த்து கதை'/><category term='அபிஅப்பா'/><category term='அதிமுக அராஜகம்'/><category term='ஜின்னா'/><category term='வினாயகர் சதுர்த்தி'/><category term='சீமான்'/><category term='கலாய்ப்பு'/><category term='மாட்டுக்கறி'/><category term='பதிவு திருட்டு'/><category term='நன்றி'/><category term='2011 சட்டப்பேரவை தேர்தல்'/><category term='ஆசை'/><category term='வினவு'/><category term='திமுக  அதிமுக'/><category term='டிரைலர்'/><category term='மொக்க்கை'/><category term='துளசி டீச்சர்'/><category term='சுஜாதா'/><category term='அறிவிப்பு'/><category term='வியர்டான விஷயம்'/><category term='சமூகம்'/><category term='சாப்பாடு'/><category term='டாக்டர்கள் தினம்'/><category term='அனுபவம்\ சமூகம்'/><category term='இருட்டு'/><category term='டி வீ'/><category term='்ஜூவி'/><category term='ஈழம்'/><category term='திமுகவின் வெற்றி'/><category term='அனுபவம். ஆயில்யன்'/><category term='ச்சீமான்'/><category term='அனுபவம்\திரைப்படம்'/><category term='ஆளுமை'/><category term='சுழல்நிதி'/><category term='ஜனாதிபதி'/><category term='தானே புயல்'/><category term='சமச்சீர் கல்வி'/><category term='அரசியல்'/><category term='நகைச்சுவை மாதிரி'/><category term='காதல் கலாட்டா'/><category term='ஹோட்டல்'/><category term='அழகு'/><category term='தமிழக மின்வெட்டு'/><category term='சந்திப்பு'/><category term='வலைப்பதிவர் சந்திப்பு'/><category term='ட்ரையல்'/><category term='பிரச்சாரம்'/><category term='ச்சும்மா'/><category term='தேர்தல்'/><category term='நட்ராஜ்'/><category term='அன்னையர் தினம்'/><category term='பா.க.ச'/><category term='முடிவு'/><category term='அனுபவம்/ நகைச்சுவை மாதிரி'/><category term='வாழ்த்து பதிவு'/><category term='கவுஜ'/><category term='அபி'/><category term='அகங்காரம்'/><category term='நகைச்சுவைமாதிரி\அனுபவம்'/><category term='நகைச்சுவை'/><category term='மொக்கை மெயில்ஸ் குரூப்'/><category term='விவாதம்'/><category term='கிரீமிலேயர்'/><category term='அம்மா'/><category term='நக்கீரன்'/><category term='ஆத்திரம்'/><category term='நட்சத்திர பதிவு'/><category term='தொடர்கதை'/><category term='100'/><category term='புதிய தலைமை செயலகம்'/><category term='ஜெயா'/><category term='கொசுவத்தி'/><category term='அனுபவம்\சோகம்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='வாத்தியார்'/><category term='திமுக பன்னீர்'/><category term='தனுஷ்'/><category term='விமர்சனம்'/><category term='ஆடுகளம்'/><category term='காங்கிரஸ்'/><category term='tag'/><category term='உமாசங்கர்'/><category term='கும்மி'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='இளைஞர் காங்கிரஸ்'/><category term='சோம்பல்'/><category term='ஆசிரியர் தினம்'/><category term='பொங்கல்'/><category term='சங்கிலி பதிவு'/><category term='வி.வி.கிரி'/><category term='சும்மா'/><category term='குறுந்தொடர்'/><category term='சைவம்'/><category term='காதலர் தினம்'/><category term='அனுபவம்'/><category term='நெகிழ்வு'/><category term='கவிதை மாதிரி'/><category term='வெற்றிமாறன்'/><category term='சமச்சீர்கல்வி'/><category term='மொக்கு'/><category term='நகைச்சுவைமாதிரி'/><category term='கலைஞர்'/><category term='வெந்த அனுபவம்'/><category term='அபி பிறந்த நாள்'/><category term='மயிலாடுதுறை'/><category term='மூவர் தூக்கு'/><category term='திருமணம்'/><category term='போட்டி'/><category term='தற்பெருமை'/><category term='புனைவு'/><category term='கூட்டனி'/><category term='பேருந்து நிலையம்'/><category term='சத்தியம்'/><category term='கோவில்'/><category term='திமுக'/><category term='ஈரோடு சங்கமம்'/><category term='காவிரி \அனுபவம்'/><category term='சோகம்'/><category term='சந்தேகம்'/><category term='ஆனந்த விகடன்'/><category term='மொக்கை பதிவு'/><category term='pathivar vattam'/><category term='நகைச்சுவை மாதிரி\அனுபவம்'/><category term='வாழ்த்து'/><category term='ஸ்டாலின்'/><category term='சுயபுலம்பல்'/><category term='நலியும் தொழில்கள்'/><category term='திறமை'/><category term='ராகுல்'/><category term='இங்க என்ன எழுதனும்'/><category term='நட்ராஜ் ஸ்கூல் அனுபவம்'/><category term='அரசியல் காமடி'/><category term='நியாயமான கோவம்'/><category term='கையாலாகாத நிலை'/><category term='பாட்டு'/><category term='நட்சத்திரம்'/><category term='குதிரை'/><category term='சிறை'/><category term='தளபதி'/><category term='அதிமுக பன்னீர்'/><category term='கவிதை அல்ல'/><category term='திருமா'/><category term='கோவை பயணம் 1'/><category term='nahaicuvai maathiri'/><title type='text'>அபி அப்பா</title><subtitle type='html'>ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>341</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2538302620541271381</id><published>2012-02-17T10:21:00.007+05:30</published><updated>2012-02-17T15:35:40.265+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக மின்வெட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கையாலாகாத நிலை'/><title type='text'>தமிழக மின்வெட்டு நிலையும் மானம்கெட்ட நமது அரசின் கையாலாகாத தன்மையும்!!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-KwCYs5d___U/Tz3jUy0LLPI/AAAAAAAABXE/wxlHBr-8DAc/s1600/electricity.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 274px;" src="http://2.bp.blogspot.com/-KwCYs5d___U/Tz3jUy0LLPI/AAAAAAAABXE/wxlHBr-8DAc/s400/electricity.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5709969848953154802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; தமிழகத்தின் ஒரு சாராதரண நகரம் மயிலாடுதுறை. அதன்  இன்றைய மின்வெட்டு நிலவரம் என்பது காலை 6 முதல் 9 வரை, மதியம் 12 முதல் 3 வரை, மாலை 6.30 முதல் 7.30 வரை, இரவு 9 முதல் 10 வரை. ஆக அறிவிக்கப்பட்ட மின்வெட்டு எட்டு மணி நேரம் கணக்கு சரியாகிவிட்டது. ஆனால் அதன் பின்னர் நடப்பதை கூட எந்த பத்திரிக்கையும் எழுதுவதில்லை. யாரும் அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. அதை இதோ சொல்கிறேன். இரவு 10 மணிக்கு வரும் மின்சாரம் 11 மணிக்கு போய்விடும். இது எந்த கணக்கில் வரும். மேலே சொல்கிறேன் கேட்கவும். இரவு 11 முதல் 12 வரை இருக்காது. பின்னர் 12. 30 முதல் 1 மணி வரை, பின்னர் 2 முதல் விடியல்காலை 3 வரை, பின்னர் 4 முதல் 5 வரை இருக்காது. ஆக இரவில் மூன்றரை மணி நேரம். ஆக மொத்தம் 11.30 மணி நேரம். இது தவிர போனஸ் நேரமாக அப்பப்போ பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை. அது ஒரு முப்பது நிமிடம். ஆக ஒரு முழு நாளில் இருக்கும் 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. இல்லாத மின்சாரத்துக்கு மாதம் ஒரு முறை முழு மின்வெட்டு. அது பராமரிப்புக்காகவாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எந்த காலத்தில் இருக்கின்றோம்? கிட்டத்தட்ட எல்லோருமே மின்சார வாழ்கைக்கு பழகியாகிவிட்டது. இன்வர்டர் வைத்து கொள்ளும் வசதி இந்த தமிழகத்தின் ஒன்னரை முதல் இரண்டு கோடி குடும்பத்தில் எத்தனை ஆயிரம் பேரிடம் இருக்மும்? சுமாராக பத்தாயிரம் முதல் இருபத்தி ஐந்து ஆயிரம் குடும்பங்கள்?  வேண்டாம் ... நாம் அது ஒரு பத்து லட்சம் குடும்பங்களிடம்  இருப்பதாகவே கொள்வோம். சரி அப்படியே இன்வர்டர் வைத்து கொண்டாலும் ஒரு லைட், ஒரு ஃபேன் என ஒட்டு மொத்த குடும்பமே அதில் தான் உழண்டு கிடக்க வேண்டும். இதிலே படிக்கும் மாணவர்களுக்கு அந்த ஒரு லைட் வசதியை கொடுப்பதா? அல்லது குடும்ப தலைவிக்கு சமைக்க வெளிச்சம் கொடுப்பதா? அப்படி பார்த்தாலும் இன்வர்டர்களுக்கு ஃபீடிங் அதாவது அது வாழ தேவையான மின்சாரம் மீதி நேரம் கிடைக்கின்றதா என்றால் அதும் இல்லை.சரி இன்வர்டர் வைத்து கொள்பவர்களின் நிலை இது என்றால் இல்லாத மீதி ஒன்னேமுக்கால் கோடி குடும்பத்தின் நிலை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே எங்கள் பகுதியில் முக்கிய வாழ்வாதாரமே விவசாயம் மட்டுமே. இங்கே முப்போகம் விளைந்தால் மட்டுமே தமிழகம் முழுவதும் , ஏன் தமிழகம் தாண்டியும் சுபிட்சம் இருக்கும். முப்போகம் விளைய நாங்கள் காவிரியை மட்டும் நம்பி இருக்க முடியாது. போர்செட் இல்லாமல் எதுவும் நடக்காது. 24 மணி நேரம் மின்சாரம் கண்டிப்பாக வேண்டும். இப்போது என்ன நடக்கின்றது? விவசாயம் நசிந்து விட்டது. விவசாயிகள் நடுத்தெருவில் நிற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அடுத்த ஆறு மாதத்தில் இவன் விளைவிக்காமல் போன நெல்லால் அரிசி பஞ்சம் வருமே, அரிசி விலை ஏறுமே அது எந்த கணக்கில் வரும். இவன் விளைவிக்காமல் போன கரும்பு காரணமாக ஜீனி கிடைக்காதே, அப்படியெனில் வரும்காலம் கருப்பட்டி காப்பி தானா தமிழகத்தில். நான் மீண்டும் பழங்காலம் நோக்கி பயனிக்கட்தான் வேண்டுமா? இது தான் ஒரு ஆளும் கட்சி ஆளும் அரசு தனக்காக ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் நன்றியா?&lt;br /&gt;&lt;br /&gt;நசவுத்தொழில் அந்த காலம் போல காலை கையை ஆட்டி தறி போடுவது என்பது எல்லாம் போயே போச். இப்போது எல்லாமே மின் மோட்டார் சகிதம் தான், எல்லாமே விசைத்தறி தான். கூறைநாடு, திருபுவனம், கும்பகோணம் இங்கெல்லாம் பட்டு தொழிலை நம்பி இருக்கும் மக்கள் வயிற்றில் மண். அதே போல துகிலி, கஞ்சனூர் எல்லாம் கைத்தறி நசவாளர்கள் கோவிந்தா கோவிந்தா. சிறு மற்றும் குறுந்தொழில்கள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை ஏன்? மீன்பிடி தொழில்..... எங்கள் மாவட்டத்தை எடுத்து கொண்டால் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பித்து பூம்புகார், சின்னங்குடி, தரங்கம்பாடி, பொறையாறு பின்னே காரைக்காலை விடுத்து அடுத்து அக்கரைப்பேட்டை, நாகை, வேதாரண்யம், பின்னர் அடுத்த மாவட்ட பகுதிகள் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் எல்லாம் மீன் பிடித்தொழில் மட்டுமே பிரதானம். மீன் பிடிக்க மின்சாரம் எதுக்கு எனகேட்கும் மக்களே, மீனை பிடித்து கொண்டு வந்து எங்கே கொட்டுவாங்க. நான் மேலே சொன்ன எல்லா ஊர்களிலும் ஐஸ் பேக்டரி... அது இயங்காவிட்டால்... மீன் கரைக்கு வந்து என்ன பிரயோசனம்? ஐஸ் தயாரிக்க 12 மணி நேர மின்சாரம் பத்தாது. பத்தவே பத்தாது. ஜெனரேட்டர் வைத்து கொள்ளும் வசதி படைத்த ஐஸ் கம்பனிகள் மட்டும் ஐஸ் உற்பத்தி செய்கின்றது. ஆக சின்ன சின்ன ஐஸ் கம்பனிகள் அவுட். அந்த பெரிய கம்பனிகள் வைத்தது தான் விலை. அதை வாங்கும் மீனவர்கள் அந்த விலை ஏற்றத்தை மீன் தலையில் வைக்க ஒட்டு மொத்த மீன் விலையும் கொடிகட்டி பறக்கின்றது. அப்படியே ஆகினும் அந்த கம்பனிகளால் ஓரளவுக்கு மேல் ஐஸ் சப்ளை செய்ய இயலவில்லை. அதனால் மீன் பிடிக்க போகும் முன்னே ஐஸ்க்கு பதிவு செய்து கொண்டு போனவர்களுக்கு மட்டும் தான் ஐஸ். எனவே மற்ற மீனவர்கள் கடலுக்கு போவதில்லை. அவர்கள் வயிற்றில் ஈரத்துணி.மீன் வரத்து குறைந்து போய் அவர்களும் தாங்கள் பிடித்த மத்தி மீன்களை கேரளத்துக்கு மட்டும் அனுப்பி விட்டு இங்கே அசைவ ஹோட்டல்கள் எல்லாம் அதீத விலையேற்றம். அனுபவித்து பார்தவர்களுக்கு வலி புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக விவசாயம், நசவு, மீன்பிடி, சிறு மற்றும் குறுந்தொழில் எல்லாம் போயாச்சு. சரி கடைத்தெரு என எடுத்து கொண்டால் ஒரு ஜெராக்ஸ் (போட்டோகாப்பி) கடை, டைலர் கடை,அச்சகம்,  ஜூஸ்கடை என எதை தொட்டாலும் மின்சாரம் தேவைப்படுது. அவர்கள் வாழ்கை தொலைந்து போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி மாணவர்கள் நிலை? யாரும் படிக்க இயலவில்லை. +2 படிப்பவன் அவன் பெற்றோர் எல்லாம் இப்போது என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருக்க, அதை விட கொடுமை இப்போது செய்முறை தேர்வும் நடந்து கொண்டிருக்க இயற்பியல், வேதியல், கம்பியூட்டர் சயின்ஸ் என எதை தொட்டாலும் மின்சாரம் தேவை. அவர்கள் பழகி பார்க்க மின் தட்டுப்பாடு காரணமாக நேரிடையாக தேர்வுக்கு சென்று ..... இந்த கஷ்டம் எல்லாம் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அதிலே படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் தான். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்த காரணத்தால் அங்கே ஜெனெரேட்டர் வசதி இருக்கு. (அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது) . ஆக இந்த மே மாதம் ரிசல்ட் பார்த்தால் கிராமப்புற மாணவர்கள் நகர மாணவர்களின் தேர்சி சதத்தைவிட குறைவாக இருப்பர். பத்தாவது மாணவர்கள் கதி அதோகதி ஆகிவிட்டது. ஏற்கனவே அவர்களுக்கு மூன்று மாதம் புத்தகம் இல்லாமல் செய்துவிட்டது இந்த அரசு. இப்போது இந்த கொடுமையும் சேர்ந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போகட்டும், அரசு மருத்துவமனை எல்லாம் என்ன லட்சனத்தில் இருக்கின்றது? மெழுகுவத்தி வைத்து கொண்டு குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெறுவதாக பத்திரிக்கை செய்தி.பகலிலேயே பசுமாடு தெரியாது. இதிலே இருட்டிலே எப்படி  எருமை மாடு தெரியும்? விளங்கிடும்.... எதை நறுக்கி தொலைக்க போகின்றனரோ?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் போகட்டும்.... எல்லாம் போகட்டும்..... இந்த கட்டுரையில் என் கேள்வி என்பதே இங்கே தான் தொடங்குகின்றது. இப்படி தமிழகத்தில் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை  காணடிக்க செய்யும் அளவு பூதாகரமாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது. மின்சாரம் தயாரிப்பது என்பது மத்திரத்தில் மாங்காய் காய்க்க வைக்கும் நிகழ்வு அல்ல. ஆனால் நம் தமிழகத்தின் ஒட்டு மொத்த மின் தேவை என்பது எத்தனை மெகாவாட் ஒரு மாதத்துக்கு? தற்போதைய உற்பத்தி எத்தனை மெகாவாட்?பற்றாக்குறை எவ்வளவு? அதை சரி கட்ட என்ன செய்தோம்,அல்லது மின்சிக்கனம் செய்ய என்ன செய்யக்கூடாது? என்றெல்லாம் இந்த தமிழக அரசு யோசித்து பார்த்ததா என்றால் ஒரே பதில் இல்லை என்பது மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமரவைக்க நினைத்த பத்திரிக்கைகள் தேர்தலின் போது ஒட்டு மொத்தமாக கூப்பாடு போட்டது மின்வெட்டு  பிரச்சனைக்காக தான். அப்போது தமிழகத்தில் மின்வெட்டு என்பது மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே. அதும் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரே நேரத்தில் போகாது. மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் அறிவிப்பு செய்துவிட்டு நிறுத்தம் செய்யப்பட்டது. தவிர சென்னைக்கு மின்வெட்டு கிடையாது. கிடையாது என்றால் கிடையவே கிடையாது. ஏப்ரல் 13ம் தேதி 2011 அன்று தேர்தல் முடியும் வரை சென்னைக்கு மின்வெட்டு இல்லை. அதன் பின்னர் தேர்தல் முடிவு வெளியான மே 13 2011 வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே சென்னைக்கு மின்வெட்டு. சென்னைக்கு மட்டும் ஏன் மின்வெட்டு இல்லை என காரணம் கேட்ட போது "தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசின் மற்ற மற்ற பிரிவுகளின் தலைமையகமும் இங்கே தான் இருக்கின்றது. தவிர தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கே மின்வெட்டால் பாதிக்க கூடாது" என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் ஊடகங்கள் "தமிழக மந்திரிகள் எல்லோரும் சென்னையில் இருப்பதால் மின்வெட்டு இல்லை" என கூவின.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது... தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்பது எட்டு மணி நேரம். அறிவிக்காமல் ஒரு நான்கு மணி நேரம். சென்னையில் இன்றுவரை ஒரு மணி நேரம். நாளை முதல் அதை அதிகப்படுத்தப்போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பத்திரிக்கையும் இது பற்றி வாயை திறந்தது போல தெரியவில்லை. மாறாக வாய்கூசாமல் திமுக ஆட்சியில் மின்சார உற்பத்திக்கு எதும் செய்யவில்லை என கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மை நிலவரம் என்ன என்று பார்த்தால் 2001 முதல் 2006  வரை ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சிகாலத்தில் எவ்வித மின் உற்பத்தி திட்டமும் ஆரம்பிக்கவில்லை. ஒரு சிறு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. ஆனால் 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதாவது 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் வருங்கால மின் தேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை பார்ப்போம்.&lt;div&gt;&lt;br /&gt;1) எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு முலமாக 600 மெகவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று 8-12-2006 யில் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் தொடங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;2) மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3 ஆயிரத்து 100 கோடி மதிப்பீட்டில், 600மெகவாட் மின்சாரம் தயாரிக்ககூடிய ஒரு திட்டம் 2-5-2007ல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் இயக்கத்திற்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;3) வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகவாட் மின்சாரம் தயாரிக்ககூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007 ல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் நடைமுறைக்கு வரும்&lt;br /&gt;&lt;br /&gt;4) உடன்குடியில் பி எச் ஈ எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ்; ஒவ்வொன்றும் 800 மெகவாட் மின் உற்பத்தி செய்யகூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007 ல் 8 ஆயிரத்து 362 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. இதில் ஓர் அலகு 2013 ஆம் ஆண்டு மார்ச் திங்களிலும்; மற்றொரு அலகு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடைமுறைக்கு வந்து உற்பத்தியை தொடங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;5) வடசென்னை அனல் மின் நிலையத்திலேயே மேலும் 600மெகவாட் மின்சாரம் தயாரிக்க கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி மதிப்பீட்டில் 14-7-2008 ல் தொடங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;6) ஆயிரத்து 126 கோடி செலவில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆளைகளில்ருந்து 183 மெகவாட் இணை மின்சாரம் தயாரிக்ககூடிய திட்டம், 14-12-2009 ல் தொடங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;7) மொத்தம் 4183 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி மு கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;8) 2006 யில் தி மு கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்கால தேவையை கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக&lt;br /&gt;&lt;br /&gt;2010-2011யில் 1400 மெகவாட் மின்சாரமும்&lt;br /&gt;2011-2012யில் 3316 மெகவாட் மின்சாரமும்&lt;br /&gt;2012-2013யில் 1222 மெகவாட் மின்சாரமும்&lt;br /&gt;2013-2014யில் 1860 மெகவாட் மின்சாரமும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் 7798 மெகவாட் மின்சாரமும் பல்வேறு மின் திட்டங்களின் முலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.&lt;br /&gt;ஆக இதை எல்லாம் மூடி மறைத்து ஊடகங்கள் திமுக ஆட்சியை கீழே தள்ள வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக  மின்வெட்டு என்பதை ஊதிப்பெரிதாக்கி அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தது. இலவச வண்ண தொலைக்காட்சியால் மின்சாரம் எல்லாம் போய்விட்டது என சொன்ன அதே பத்திரிக்கைகள் இன்று மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவைகள் என்னவோ சூரியசக்தியில் இயங்குவதாக நினைத்து கொண்டு வாய்மூடி கிடக்கின்றன.இது தான் பத்திரிக்கை தர்மமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசோ, தமிழகத்தின் எதிர்கால மின் தேவைகளுக்காக இன்றைய தேதி வரை எத்தனை மின் திட்டங்கள் கொண்டு வந்தன என்பதை பட்டியலிட முடியுமா? போகட்டும் 2001 - 2006 வரை எதும் செய்யவில்லை. போகட்டும். ஆனால் 2011 சட்டமற்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கிய பிரச்சாரமாக மின்வெட்டு பிரச்சனையை பயன் படுத்திக்கொண்டதே அந்த நன்றிக்காகவாவது இந்த எட்டு மாதத்தில் ஒரே ஒரு மின் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததா என்றால் அதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஊடகங்களோ அதிமுக ஆட்சிக்கு வந்ததும் "குஜராத்தில் இருந்து குதித்து வரும் மின்சாரம்" என தலைப்பிட்டு தன் அதிமுக பாசத்தை அறிவித்து கொண்டன. இன்றளவும் அந்த புழுகுமூட்டை பத்திரிக்கைகள் அதிமுக அரசின் மின் வெட்டு பிரச்சனை பற்றி வாயை திறந்தது உண்டா? இல்லை. அவர்களுக்கு தேவை திமுக அரசு வீட்டுக்கு போக வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளேயன்றி மக்களுக்காக அரசிடம் இடித்துரைத்து திட்டங்கள் பெற்றுக்கொடுப்பது இல்லை  என்பது வெட்ட வெளிச்சம் ஆகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக அரசுக்கு நிர்வாக திறன் என்பது ஒரு சதம் கூட இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் எனினும் இங்கே சிலவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனவில் இப்போது சில அடிமட்ட அதிமுக பேச்சாளர்களும், அவர்களுக்கான பிரச்சார ஊடகங்களும் "திமுக ஆட்சியில் எல்லோருக்கும் தொலைக்காட்சி பெட்டி கொடுத்து எல்லாரும் அதை பயன்படுத்தி மின்சாரம் விரயமாகி போய்விட்டது" என்று வழக்கம் போல பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே போல அந்த பத்திரிக்கைகள் அப்போது திமுக ஆட்சியில் இலவசங்கள் அதிகம் கொடுத்து கொடுத்து பணம் இல்லாமல் செய்து விட்டனர். அதனால் தனியாரிடம் இருந்து கூட மின்சாரம் வாங்க காசு இல்லை" என சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக ஆட்சியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கான திட்ட மதிப்பீட்டு தொகை 4500 கோடி ரூபாய். அதும் நன்கு திட்டமிடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் பகிர்ந்து ஐந்தாம் ஆண்டு முடிவில் எல்லோருக்கும் தொலைக்கட்சி பெட்டி போய் சேரும் அளவிலான திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி வருடம் 900 கோடி மட்டுமே அதற்கான செலவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதிமுக ஆட்சியில், ஒன்றரை வருடங்களில் 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மூன்றும் தர வேண்டும். இதற்கான தேவை 9880 கோடி ரூபாய். வருடத்திற்கு 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மடிக்கணினி இலவசமாக வழங்க வேண்டும், ஒரு ரூபாய் அரிசியை இலவசமாக தருவதால் ஏற்பட்ட கூடுதல் செலவாக  மட்டும் 6000 கோடி ரூபாய்கள். அதாவது இதுவரை அறிவித்துள்ள புதிய இலவச திட்டங்களுக்காகவே இந்த வருடம் கிட்டத்தட்ட 17500 கோடி ரூபாய்கள் வரையிலும் துண்டுவிழும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன கணக்கு? அதாவது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கொடுக்கவேண்டுமாம். என்னே ஒரு கரிசனம் தமிழக மக்கள் மீது! தேர்தல் வெற்றிக்காக மட்டுமே ஆட்சி இங்கே. ஆனால் அங்கே 4500 கோடி ரூபாய்க்கான இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கு வருடத்துக்கு ஆகும் செலவே 900 கோடி மட்டுமே. இப்போது போல விலையில்லா அரிசி இல்லை. கிலோ ஒரு ரூபாய். அதனால் அப்போது அரசுக்கு அதிக இழப்பு இல்லாமல் போனது .அதாவது மாதம் 500 கோடி , வருடத்துக்கு 6000 கோடி ரூபாய்.  எதை வேண்டுமானாலும் விலை இல்லாமல் கொடுக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவன் சாப்பிடும் அரிசியை விலையில்லாமல் கொடுத்தால் அது அவன் வயிற்றுக்கு சோறு போடும் பிச்சை. அந்த அளவு மாதம் 20 இந்திய ரூபாய் சம்பாதிக்க வக்கில்லாதவன் அல்ல நம் நாட்டு மக்கள் என்பதை திமுக அரசு உணர்ந்தது. அதனால் ஒரு ரூபாய் விலை என நிர்ணயம் செய்தது. அதனால் இப்போது தமிழக அரசுக்கு மாதம் தோறும் ஏற்படும் 500 கோடி இழப்பு அப்போது திமுக அரசுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக ஒரு இலவச திட்டம் அறிவித்தால் கூட அதை ஐந்து வருடத்துக்குமாக பேலன்ஸ் செய்து கைப்பிடிப்பு இல்லாமல் பட்ஜெட் போட்டு செலவு செய்து , மின்சாரம் தனியாரிடம் விலைக்கு வாங்கி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர மின்வெட்டு என்கிற நிலையில் வைத்து இருந்த திமுக அரசு நிர்வாக திறமை வாய்ந்த அரசா அல்லது மேலே இருக்கும் பாராவில் இருப்பது போல தான்தோன்றித்தனமாக செயல்படும் அதிமுக அரசு நிர்வாகத்தில் சிறந்த அரசா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒரு புதுக்கதை விட்டுக்கொண்டு இருக்கின்றனர் அதிமுகவினரும் அவர்களின் அச்சு ஊடகங்களும். அது என்ன தெரியுமா? கூடங்குளம் மின் திட்டம் செயல்பட்டால் ஒட்டு மொத்த நமது மின் தேவையும் தீர்த்து விடுமாம். அதை அந்த பகுதி மக்கள் செயல்படுத்த விடாமையால் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமாம். இது என்ன கூத்து என்று தெரியவில்லை. அப்படியே கூடங்குளம் திட்டத்தால் கிடைக்கும் மின்சாரம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கே என மத்திய அரசு கூறினால் கூட இப்போது இருக்கும் 12 மணி நேரம் மின்வெட்டு என்பது 11.30 மணி நேரமாக மட்டுமே ஆகும் என்பதை யாராவது அதிமுக அரசுக்கு காதில் போடுவார்களா? ஆனால் மத்திய அரசு முழு மின்சாரத்தையும் தமிழகத்துக்கு மட்டுமே கொடுக்கவே கொடுக்காது. மத்திய அரசோடு ஒத்து போகும் திமுக அரசு இருந்தால் ஒருவேளை இது சாத்தியம். ஆனால் அதிமுக அரசு என்பது எல்லோரிடமும் சண்டைக்கோழி. அதன் தலைமைக்கு விட்டுக்கொடுக்கும் தன்மை என்பது எப்போதும் கிடையவே கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அந்த மக்கள் அங்கே கூடங்குளம் மின் திட்டம் செயல்படுவதில் பயம் கொள்கின்றனர் என்பது தானே அங்கே பிரச்சனை. உடனே தமிழக அரசு என்ன செய்து இருக்க வேண்டும். தன் நிலைப்பாட்டை சொல்லி இருக்க வேண்டும். "கூடங்குளம் வேண்டும் அல்லது வேண்டாம்" இதை சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இதில் மத்திய அரசு மாத்திரம் மக்களுடன் போராடி கொண்டு இருக்கும் போது நீங்கள் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு காலம் தாழ்த்திக்கொண்டு இருப்பது ஏன்? கூடங்குளம் மின்சாரம் மட்டும் வந்தால் பிரச்சனை எல்லாம் தீரும் என நீங்கள் சொல்லும் போது கூடம்குளம் மின் திட்டம் வருவதில் உங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று தானே பொருள். அப்படி என்றால் நீங்கள் என்ன செய்து இருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மக்களின் பிரச்சனையை அதாவது பயத்தை நீக்கும் பொருட்டு "தமிழக சட்டமன்றம் இனி குளிர்கால கூட்ட்த்தொடர் அங்கே ஒரு கட்டிடம் கட்டி அதிலே நடத்தப்படும். அந்த காலங்களில் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் அங்கேயே தங்கி பணிபுரிவர், இனி தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள் எல்லாருக்கும் ஒரு பத்து நாட்கள் தங்குவது போல இருந்தால் கூடங்குளம் பகுதியில் தமிழக அரசு  விருந்தினர் மாளிகை கட்டி அங்கே தங்க வைக்கப்படுவர், தமிழக அளவிலான மாநில விளையாட்டுப்போட்டிகள் கூடங்குளத்தில் நடத்தப்படும், அத்தனை ஏன் தமிழக முதல்வர் இனி ஓய்வெடுக்க கொடநாட்டுக்கு போகாமல் கூடங்குளம் மட்டுமெ போவார்" என சொல்லிப்பாருங்கள். அந்த மக்கள் தெளிவடைந்து உங்களுக்கு மின்சாரம் உற்பத்திக்கு வழி விடுகின்றார்களா என பார்ப்போம். அதை செய்ய தமிழக அரசு தயாரா?&lt;br /&gt;இதே நேரத்தில் இந்த கட்டுரை மின்சார தட்டுப்பாடு என்பதால் மத்திய அரசுக்கும் அதே வேண்டுகோள் தான் விடுக்கின்றோம். மக்களுக்கு அவேர்னஸ் கொடுக்கின்றோம் என்கிற பெயரில் கோடி ரூபாய் கொட்டி  தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுப்பதற்கு பதிலாக இப்படி சொல்லிப் பாருங்களேன்,&lt;br /&gt;1. ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு இனி அரசாங்க சார்பாக கொடுக்கப்படும் வீடுகள் இனி கூடங்குளம் பகுதியில் கொடுக்கப்படும். அதற்கு முன்னோடியாக நாளை முதல் திரு அப்துல்கலாம் அங்கே வசிக்க ஆரம்பிப்பார்.&lt;div&gt;&lt;br /&gt;2. இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் மேட்சுகள் குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போட்டிகள் கூடங்குளத்தில் ஒரு அருமையான மைதானம் கட்டி அதிலே நடத்தப்படும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;3. குடியரசு தின , சுதந்திர தின வெளிநாட்டு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி கூடங்குளத்தில் விருந்தளிப்பார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;4. வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க வரும் தொழிலதிபர்கள் சந்திப்புகள் இனி கூடங்குளத்தில் மட்டுமே நடைபெறும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;5. கூடங்குளம் பிரச்சனைக்காக உழைத்த மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும், முன்னாள் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கும் கூடங்குளம் மின் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தின் உள்ளேயே அருமையாக நட்சத்திர அந்தஸ்து கூடிய வீடு ஒதுக்கப்படும்....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;6.ஊட்டியில், கொடைக்கானலில் நம் தமிழக ஆளுனருக்கு "ராஜ்பவன்" இருப்பது போல ஆளுனருக்கும் கூடங்குளத்தில் ஆளுனர் மாளிகை கட்டப்படும். அதில் அவர் வருடத்துக்கு 3 மாதமாவது தங்கி தன் பணிகளை கவனிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாம் சொல்லிப்பாருங்கள். அந்த பகுதி மக்களை சமாதானம் செய்துவிட்டு விரைவில் உற்பத்தி செய்யுங்கள். நீங்கள் சொன்னது போல ஒட்டு மொத்த தமிழக மின் தேவைகளை கூடங்குளம் தீர்த்துவிடுகின்றதா என பார்ப்போம். எங்களுக்கு தேவை மின்சாரம் மட்டுமே.....&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வசித்து கொண்டு எங்களை எல்லாம் எல்லா தேவைக்கும் மின்சாரத்துக்கு பழக்கிவிட்டு இப்போது பாதி நேரம் மின்சாரம் இல்லை என்று சொல்ல அரசே உங்களுக்கு வெட்கம் இல்லையா? அதற்கு துணை போகும் அதிமுக அரசின் ஆதரவு பத்திரிக்கைகளே இந்த பிழைப்பு தேவையா உங்களுக்கு?????&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-2538302620541271381?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/2538302620541271381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/2538302620541271381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/2538302620541271381'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/02/blog-post.html' title='தமிழக மின்வெட்டு நிலையும் மானம்கெட்ட நமது அரசின் கையாலாகாத தன்மையும்!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-KwCYs5d___U/Tz3jUy0LLPI/AAAAAAAABXE/wxlHBr-8DAc/s72-c/electricity.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8716905647524741365</id><published>2012-01-23T13:13:00.004+05:30</published><updated>2012-01-23T13:37:16.771+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாப்பாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இதை எல்லாம் "ஜொள்ளி"த்தான் புரிய வைக்கனும்!!!</title><content type='html'>&lt;div&gt;முன்குறிப்பு:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு இன்னிக்கு என்னவோ ரவாதோசையை தேடித்தேடி வருது மனசு. ஏற்கனவே நான் ரவாதோசைக்காக நாத்திகனா ஆக இருந்த கதை கூட சொல்லியிருக்கேன். &lt;a href="http://abiappa.blogspot.com/2009/01/blog-post.html"&gt;அதை படிக்க இங்க அமுக்குங்க.&lt;/a&gt; சமீபத்திலே மாயவரத்தான் ஒரு பதிவு போட அதிலே நான் போட்ட ஒரு பின்னூட்டமே இந்த பதிவு. பின்ன பத்து நாள் முன்ன கூட நண்பர் பெனாத்தலார் ரவாதோசையை ரொம்பவும் சிலாகிக்க இந்த பதிவை வார்ப்பதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்:-))&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;*************&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ரவா தோசை இருக்கே ரவா தோசை, இதை பொதுவா வீட்டில் வார்ப்பது மிகவும் அரிது. ஹோட்டலில் தான் கிடைக்கும். இப்போது எல்லாம் ரவாதோசை மிக்ஸ் கிடைக்கின்றது எனினும் அப்போதெல்லாம் 80 களில் அதல்லாம் கிடையாது. ரவா தோசை கிடைக்கும் கடைகளில் சிலது மாத்திரம் ஸ்பெஷல். அதில் ஒன்று தான் மாயவரத்தில் இருக்கும் மயூராலாட்ஜ் ஹோட்டல். இரண்டு கடைகள். அதிலே ஒன்று ரயில்வே ஜங்ஷனில் இருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் மற்றும் ஒன்று மாயவரம் கடைத்தெருவில் ஏ ஆர் சி ஜுவல்லரிகள் எதிரே ராமூர்த்தி அய்யர் இரும்பு கடைக்கு பக்கத்தில் இருக்கும். இரண்டுமே பிரமாதம் தான் ரவாதோசைக்கு. செங்கோட்டை பாசஞ்சரோ, போட்மெயிலோ மாயவரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமா நிற்குதே என்ன காரணம் என கேட்டா மயூரா ரவா தான் காரணம். ரயிலை நிப்பாட்டி விட்டு ஓடி வந்து பார்சல் வாங்கி போகும் இஞ்சின் டிரைவர்களும் டி டிக்களும் அனேகம் பேர். அத்தனை ஒரு பேர் அந்த ரவாதோசைக்கு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ரவாதேசைக்கு உலகிலேயே ஒரு சிறப்பு என்னான்னா, மாவு தோசை மாதிரி ஒரே நேரத்தில் கரைத்து பக்குவமா வைக்க முடியாது. மாவு தோசை முதல் தோசை நல்லா இருந்துச்சுன்னா கடைசி தோசை வரை நல்லா இருக்கும். முதல் தோசை என்ன ருசியோ அதே தான் கடைசி தோசை வரைக்கும். ஆனால் இந்த ரவா தோசை இருக்கே அது ஒரு ஒரு நான்கு அல்லது ஐந்து பேருக்கும் அதாவது அப்போது டேபிளில் இருக்கும் ஆர்டர் எத்தனையோ அத்தனைக்கு உண்டான மாவு மாத்திரம் அவ்வப்போது கரைக்கப்படும். அதனால் சாதா மாவு தோசை போல முதலில் கரைக்கும் போது மட்டும் கேர்புல்லா இருந்துட்டு பின்னே மாஸ்டர் பார்துப்பாருன்னு விட முடியாது. ஒரே நேரத்தில் முதல் டேபிளில் சாப்பிடும் ரவாதோசைக்கும் கடைசி டேபிளில் சாப்பிட்டு கொண்டிருக்கும் தோசைக்குமே சுவை மாறித்தொலையும் அபாயம் உண்டு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் மயூரா ரவா தோசை அப்படி இல்லை. ஒரே டேஸ்ட் அன்றைக்கு முழுவதும் இருக்கும். இது மயூரா ரவாதோசையின் சிறப்பு. ரவா தோசை சிலருக்கு முறுகலா பிடிக்கும், சிலருக்கு பதமா பிடிக்கும். ஆனால் என்னைப்போல வித்யாசமான சிலருக்கு ரெண்டு விதமாகவும் பிடித்து தொலைக்கும். அதனால் மயூராவில் எனைப்போல கிறுக்கன்களுக்கு என பிரத்யோக பார்முலா உண்டு. தோசையை வார்த்த பின்னே தனியே கொஞ்சம் மாவெடுத்து நட்ட நடுவே அதன் மேல் ஊற்ற வேண்டும். அந்த இடம் பதமாகவும் ஓரத்தில் முறுகலாகவும் இருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதிலேயும் ஒரு குழப்பம். ரவா தோசையை ரவுண்டாக வார்க்க முடியாது. இந்தியா மேப் போல வரும். இலங்கை போல வரும், அவ்வளவு ஏன், எண்பதுகளில் அமரிக்க விசாவுக்கு அப்ளை செஞ்சுட்டு கால் கடுக்க நின்று அது ரிஜக்ட் ஆன விரக்தியில் செங்கோட்டை பாசஞ்சரில் வரும் நபர்களுக்கு அமரிக்கா மேப் போலவும் வரும். எம்பசியில் கிடைக்காத அமரிக்கா எங்கூர்ல கிடைக்கும். அதிலே எங்கே "நடு செண்டர்" பார்த்து மொத்தமாக்குவது? அதையும் செய்வாரு அந்த மாஸ்டர்:-))&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதிலே சிலருக்கு நெய் ஊற்றினால் பிடிக்கும். ஆனால் மிதமிஞ்சி இருக்கவும் கூடாது. திகட்டி விடும் அபாயம் உண்டு. அதையும் பதமா ஊற்ற வேண்டும். வார்த்து முடித்து அதற்குண்டான நேரத்தில் அதை புரட்டி போட்டு தோசை திருப்பியால் அதை பாசமுடன் வருடிக்கொடுத்து தோசைக்கல் மேலேயே அதை குடும்பக்கட்டுப்பாடு சின்னமாக்கி அதை வாழையிலையில் வைத்து அந்த வாழையிலையை ஒரு எவர்சில்வர் தட்டில் வைத்து நம் டேபிள்க்கு கொண்டு வந்து ஒரு சுத்து சுத்திவிட்டு சர்வர் நம்மை பெருமையாக பார்க்கும் போது நமக்கு எச்சில் ஊறி தாவங்கட்டை வலிக்கும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதன் ஜோடியாக சின்ன வெங்காயம் போட்ட சாம்பார்  வாளியை தூக்கி வந்து டேபிளில் வைக்கும் போது அந்த இந்தியாவுக்கோ, அமரிக்காவுக்கோ எல்லைப்பிரச்சனை எதும் இல்லாதபடி முறுகல் எல்லாம் பிய்த்து விழுங்கி இருப்போம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அது என்ன அந்த சாம்பாரில் சின்ன வெங்காயத்தை முதலில் வேக வைத்து போட்டீங்களா சார், பார்க்கும் போது முழுசா இருக்கு தொட்டால் கரைந்து போகுது" என சர்வரை கேட்கும் போது அவர் முகம் வெட்கத்தால் சிவக்கும். ரவாதோசையின் சீரகமும், கருவேப்பில்லையும் என்னவோ ஒத்துமையான புருஷன் பொண்டாட்டி மாதிரி அத்தனை ஒரு ஒட்டுதல். கூடவே சின்ன வெங்காய சாம்பாரும் பக்குவமா இருந்திட்டா ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கூட வரும் கெட்டி சட்னி (தேங்காய் சட்னி)யும் ,  தக்காளி கார சட்னியும் சரியான பக்கவாத்தியம்... இல்லை இல்லை பக்கா வாத்தியம் போங்க... சார் சிலதை சொல்லி புரியவைக்கலாம். ஆனால் மயூரா ரவாவை "ஜொள்ளி"த் தான் புரிய வைக்க வேண்டும்!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-8716905647524741365?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/8716905647524741365/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_23.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/8716905647524741365'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/8716905647524741365'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_23.html' title='இதை எல்லாம் &quot;ஜொள்ளி&quot;த்தான் புரிய வைக்கனும்!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6372907140092434942</id><published>2012-01-14T11:28:00.002+05:30</published><updated>2012-01-14T11:45:05.635+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இட்லி, நெய் ஜீனி - போகி ஸ்பெஷல்... 14.01.2012</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-4yRIVgb62sQ/TxEc2WKGQDI/AAAAAAAABU4/LOU7RzifeBQ/s1600/Image107.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-4yRIVgb62sQ/TxEc2WKGQDI/AAAAAAAABU4/LOU7RzifeBQ/s400/Image107.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697366723586834482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;" தம்பி என்னடா பண்ணிகிட்டு இருக்க?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அப்பா, வெயிட்டிங் ஃபார் குளிச்சிங்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;@ " ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன் இங்கிலிபிஸ் &lt;/div&gt;&lt;div&gt;       பேசுறான் எனக்கேட்ட டேடி"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;=================================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படம் ஆரம்பிச்ச உடனே ஒரு ஜெயிலை காட்டுறாங்க. அதிலே தாடிவச்ச ஒரு கெட்டத்தனமான குற்றவாளி. அவன் நல்லா மொழு மொழுன்னு பச்சையா ஷேவ் செஞ்ச நம்ம ஹீரோ பரத் என்னும் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு அனியாயமாக ஜெயிலில் இருக்கும்(அப்படித்தானே?) அப்பாவி கிட்டே வீணா வம்பு செஞ்சு அடிக்கிறான். நம்ம ஹீரோ எவ்வளவோ அமைதியா இருந்தும் நாம் எல்லாம் சீட்டு முனைக்கு வந்து "திருப்பி அடி திருப்பி அடி"ன்னு கத்துவதை காதில் வாங்கி திருப்பி அடிக்கிறார். செம அடி. கெட்டவன்  ஒரு கம்பி பந்தை எடுத்து பரத் மேல அடிக்க அந்த கம்பி பந்து பரத் கண்கிட்டே வரும் போது நாம எல்லாம் பயந்து போய் அழ ஆரம்பிக்க அதை ஒரே உதையா உதைச்சு அது ஒரு தென்ன மரம் உயரத்துக்கு பறந்து போய் எலக்ட்ரிக் கம்பத்திலே பட்டு ஜெயில்ல ஒரே தீப்பொறி பறக்குது. கெட்டவன் தோத்துட்டான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடனே பாட்டு பாடுறாங்க. ஹீரோவை சுத்தி சுத்தி எல்லா நல்ல குற்றவாளிகளும் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஒரு கட்டத்திலே ஜெயிலர் கூட தன்னை மறந்து ஆடிகிட்டு இருக்காரு. பிறகு அவர் "தான் ஒரு ஜெயிலர்" என்பதை நினைவு கொண்டு நாக்கை கடித்து கொண்டு ஆட்டத்தை நிப்பாட்டிகிறார். இங்க தான் டைரக்டர் நிக்கிராரு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;@ ஆண்டவா, சன் டிவியிலே இப்பதான் அந்த படம் ஓடிகிட்டு இருக்கு. இன்னிக்கு பொழுது ரொம்ப பிரமாதமா இருக்கும் போலிருக்கே எனக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;=========================================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மார்கழி ஆரம்பிச்ச முதல் நாள் முதலே வாசலில் இருக்கும் புல் எல்லாம் செதுக்கி தர சொல்லி அபிஅம்மா அழாத குறை தான். எனக்கு தான் இணைய சண்டை போடவே நேரம் சரியா இருக்கு. இதிலே எங்க புல் எல்லாம் வெட்டுவது? அப்படியே புல் செதுக்கி கொடுத்தாலும் காபிபொடியை காயவைத்து அதான் பிரவுன் கலர், செங்கல் நுனுக்கி அதான் செங்காமட்டை கலர், அப்பா வேட்டிக்கு போடும் நீலத்தை எடுத்து கோலமாவுடன் கலந்து அதான் நீலகலர் என என் அக்காக்கள் சின்ன வயசிலே  கோலம் போடுவது போல போடவா போறாங்க.  போன வருஷம் ஒரு கோலம் போட்டாங்க. அதன் கீழே வெல்கம் என எழுதியும் வச்சிருந்தாங்க. "அடடே வாத்து நல்லா வருதே உனக்கு" என பாராட்டியது தப்பா? அதிலிருந்து படம் கோலம் எல்லாம் இல்லை, ஒன்லி புள்ளி கோலம் தான் என தீவிர முடிவுக்கு வந்துட்டாங்க. மயிலை பார்த்து வாத்து என சொன்ன என் தவறான புரிதலுக்காக என்னை பார்த்து பதிலுக்கு  "வாத்து" என திட்டுவதை என்னால் சகிச்சுக்க முடியலை. அதனால் தான் இந்த வருஷம் புல் செதுக்கி தரவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;======================================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இருந்தாலும் மனசு வரலை. போனால் போகுதுன்னு இன்று காலை மண்வெட்டி எல்லாம் எடுத்து புல் செதுக்க ஆரம்பித்தேன். வியர்த்து போனது. பின்னர் ஒரு டீ போட சொல்லி குடித்து விட்டு செதுக்க ஆரம்பித்தேன். அப்பவும் வியர்த்தது. கை எல்லாம் குடைந்தது. பின்னர் ஒரு காம்பிளான் போட சொல்லி குடித்தேன். திரும்பவும் செதுக்கிய போது நெஞ்சு எல்லாம் லைட்டா வலிப்பது போன்ற பிரம்மை. என் சிக்ஸ் பேக்குடன் நிமிர்ந்து என் நெற்றி வியர்வையை வழித்து நிலத்தில் போட்டேன். ஹாலில் ஏதோ லோக்கல் சேனலில் படையப்பா ஓடியது. "வயசானாலும் உன் ஸ்டைலும் இளமையும் இன்னும் அப்படியே தான் இருக்கு" என அப்பாஸ் சொல்லிகிட்டு இருந்தார். ஊக்கும்.... "நீ புடுங்கினது போதும்" என மண்வெட்டியை தூக்கி போட்டு விட்டு எங்கயாவது இணைய சண்டை இருக்கான்னு பார்க்க வந்துட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;==================================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிரிக்கெட் பார்க்கலாம் என நினைத்து  ஸ்டாருக்கு போனேன். எப்போதும் போல இந்தியா அருமையாக போராடிக்கொண்டு இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் டெண்டுல்கர் வந்து 100 வது சதம் அடிக்க போகின்றார் என எப்போதும் போல 100 கோடி பேரும் எதிர்பார்க்க போறாங்க.  மதியம் எல்லா டி வியிலும் நாளை எல்லா பேப்பரிலும் "டெண்டுல்கர் ரசிகர்களை ஏமாற்றினார்" என்றே வரும். எனக்கு அதிலே புரியாத விஷயம் இதான். ஏன் ஒருவருமே "டெண்டுல்கர் ஏமாந்தார்"ன்னு மட்டும் எழுத மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்கன்னு தான் தெரியலை. என்னவோ அவருக்கு மட்டும் ஏமாற்றம் இல்லை என்பது போலவும் என்னவோ ரசிகர்களை அவர் வேண்டுமென்றே ஏமாற்றி கொண்டு இருப்பது போலவும் ......&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;========================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல்வர் அம்மா இலவச வேட்டிசேலை எல்லாம் பொங்கல் முதல் கொடுக்க ஆரம்பித்து தமிழ் புத்தாண்டுக்குள் கொடுத்து முடிக்கப்படும் என அறிவித்து இருக்காங்க. ஆக நாளை காலை முதல் மாலைக்குள் ஒரே நாளில் கொடுத்து முடிப்பாங்க போலிருக்கு. செம சுறு சுறு தான். இதே சசிகலா கூட இருந்த போது இத்தனை ஒரு சுறுசுறுப்பு அம்மாவிடம் இல்லை. சோ வந்தவுடன் தான் ஆட்சி களைகட்டுது. வாழ்க "சோ" வளர்க அவர் புகழ். இன்னிக்கு துக்ளக் ஆண்டு விழா நடக்க போகுதாம். வழக்கம் போல "டோண்டு"சார் முதல் ஆளா போய் உட்காந்து வந்து பதிவு போடுவார். அவருடைய பதிவுக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில் "காண்டு"கஜேந்திரன் பதிவுக்கு அதிபயங்கர எதிர்பார்ப்பும் இணைய உலகில் இருக்கு. இருவரும் மனசு வச்சு நல்ல பதிவா தரனும். பார்ப்போம்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;=========================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லோரும் வீட்டை போகியின் காரணமாக சுத்தம் செஞ்சுகிட்டு இருக்கும் போது நட்ராஜ் மட்டும் கருமமே கண்ணாயினாராக தன் சைக்கிள், தன் விளையாட்டு பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்தது பார்க்க சந்தோஷமாக இருந்தது. அவன் அம்மா "உன்னுது மட்டும் தான் சுத்தம் செய்வியா மத்த பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்ய மாட்டியா" என கேட்டு தொலையாமல் இருந்திருக்கலாமோ. அபிஅம்மாவின் செல் போனையும் கழுவி காயவைத்து விட்டான். தேவையா இது? ஆனால் நான் சூப்பர். அதிகமாக தொல்லை கொடுக்காமல் தரையை துடைக்கும் போது காலை தூக்கி நாற்காலி மேல் வைத்துப்பதும், ஃபேனை துடைக்கும் போது ஸ்விட்ச் எல்லாம் போடாமலும், வெற்றிலை போட்டு சீவலை தரையில் கொட்டாமலும் ரொம்ப சமத்தா இருந்தேன். ஏன் என்னை போல இருக்க தெரியலை நட்ராஜுக்கு? இன்னும் சின்ன குழந்தையாவே இருந்தா என்ன அர்த்தம்? என்னை பார்த்து திருந்துடா மொவனே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;=============================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பொங்கலுக்கு "நண்பன்" பார்த்துடலாம்னு இருந்தேன். ஆனா இணையம் முழுக்க "படம் நல்லா இருக்கு"ன்னு படம் காட்டுவதை பார்த்தா பயந்து வருது. இவங்க எல்லாம் படம் நல்லா இருக்குன்னு சொன்னா அந்த படம் "பப்படம்" ஆவதும் "உவ்வே"ன்னு சொன்னா படம் நல்லா இருந்து தொலைப்பதும் இஸ்ட்ரியாகிப்போச்சு. என்ன செய்வது இவங்க ராசி அப்படி. இப்படித்தான் ஓரிருவர் தவிர மௌனகுருவை அதிலும் கதாநாயகன் நடிப்பை சொதப்பல் என எழுதியதை பார்த்து மிரண்டு போய் இருந்தேன். ஆனால் படம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அந்த கேரக்டர் அதுக்கு போல என்ன மௌனராகம் கார்திக் மாதிரியா நடிக்க முடியும். நல்ல அழுத்தமான நடிப்பு. அவர் மு க தமிழரசு பையன் என்பதல் சத்தியமாக இப்படி சொல்லலை. நிஜமாவே நல்லா இருந்துச்சு படமும், பையன் நடிப்பும். அதனால் தான் நண்பன் பார்க்க பயந்து வருது. விதி வலியது... பார்க்கத்தான் போகிறேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;=================================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அப்பா மாட்டுப்பொங்கலுக்கு மாடு வாங்கனும்ப்பா" - இது நட்ராஜ்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அப்பா பொங்கல் அன்னிக்கு 'நண்பன்" படம் போலாம்ப்பா - இது அபி&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"பொங்கல் வேட்டி சேலை எப்போ தருவாங்கன்னு தெரியலையே... இட்லி பானைக்கு துணி மாத்தனும், தலகாணிக்கு கவர் போடனும், ஜன்னல் ஸ்க்ரீன் போடனும் - அஃப்கோர்ஸ் அபிஅம்மா&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"மாட்டு பொங்கலுக்கு வீட்டு தெய்வத்துக்கு படைக்கனும்" - இது நான் நானே தான். ஏன்னா அதிலே ஒரு விஷயம் இருக்கே:-))&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவரவர் கவலை அவரவர்களுக்கு!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு, பொங்கல், உழவர் தின ,திருவள்ளுவர் தின  மற்றும் "விடுமுறை தின" வாழ்த்துக்கள். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-6372907140092434942?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/6372907140092434942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/14012012.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/6372907140092434942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/6372907140092434942'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/14012012.html' title='இட்லி, நெய் ஜீனி - போகி ஸ்பெஷல்... 14.01.2012'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-4yRIVgb62sQ/TxEc2WKGQDI/AAAAAAAABU4/LOU7RzifeBQ/s72-c/Image107.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2739651321973342759</id><published>2012-01-08T17:59:00.011+05:30</published><updated>2012-01-09T07:52:17.220+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்\ சமூகம்'/><title type='text'>பெரியாரிஸ்டுகள் ஜாக்கிரதை!!!</title><content type='html'>&lt;div&gt;ஒரு நாள் என் சுசுகி மேக்ஸ் 100 வண்டியை ஓட்டிக்கொண்டே போகும் போது தான் திடீரென கவனித்தேன். முன்பக்கம் செறுகி இருந்த சாவியை காணும். வண்டி ஆடிய ஆட்டத்தில் அது எங்கயோ துள்ளி குதித்து விட்டது. என் வண்டியில் பிரேக் இல்லை, இண்டிகேட்டர் இல்லை, ஸ்பீடாமீட்டர் இல்லை, டயரில் காத்து இல்லை என்பன போன்ற இல்லைகளுடன் சாவி இல்லை என்னும் புது இல்லையும் சேர்ந்து கொண்டது என நினைத்து கொண்டேன். பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை. பூட்டு சாவி இல்லையெனில் எனக்கு பெரிய பாதிப்பு எதும் வந்துவிடாது. ஏனனில் அதை எவனும் "மெனக்கெட்டு" திருட போவதில்லை. ஒரு திருடனுக்கு எத்தனை எத்தனை ரிஸ்க் தெரியுமா? மாட்டிகிட்டா என்ன அவஸ்தை படனும்? ரிஸ்க் எடுத்து திருடும் ஒருத்தன் இதை திருட மாட்டான். எவனாவது வெங்கலப்பூட்டை உடைச்சி வெளக்குமாத்தை திருடுவானா என நினைத்து அதைப்பற்றி கவலைப்படவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் நான் போகும் இடம் வந்த பின்னர் தான் தெரிந்தது அதை ஆஃப் செய்ய சாவி வேண்டும் என்று. சாவி இல்லாமல் எப்படியும் என் வண்டியை ஆஃப் செய்ய முடியாது. அதுவா நினைச்சா நான் வேகமாக போக வேண்டி ஆக்சிலேட்டர் குடுக்கும் போது தானாக ஆஃப் ஆனாலும் ஆகுமே தவிர நான் என் இஷ்டத்துக்கு எல்லாம் அதை ஆஃப் செய்ய அது ஒத்துக்காது. சரி வேற வழியில்லை புதியதாக சாவி போட வேண்டியது தான் என நினைத்து டி வி எஸ் கம்பனி பக்கம் போய் ட்யூப்ளிகேட் சாவி கிடைக்குமா? போட முடியுமா? என கேட்டேன். என்னை  ஒரு மாதிரியாக கேவலமாக பார்த்து விட்டு அவன் "சார் டைட்டானிக் கப்பலுக்கு கூட ட்யூப்ளிகேட் போட்டுடலாம், ஆனா எங்க டி வி எஸ் கம்பனி வண்டிக்கு எல்லாம் எதும் முடியாது. வேண்டுமானா புது லாக் செட் வாங்கி போட்டுகுங்க, என்னூறு ரூபாய் ஆகும்" என சொன்னான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி போகட்டும், அது என்ன டைட்டானிக் கப்பல் உதாரணம்? அதாவது  அவன் கம்பனி டி வி எஸ்சை மிகப்பெரிசா கம்பேர் செய்கிறானாமாம். கஷ்டம்டா சாமீ!  போடலாம், என்னூறு ரூபாய் கொடுத்து லாக்செட் போடலாம். அப்படி போட்டா என் வண்டியில் அதிகபட்ச விலை உயர்ந்த ஐட்டமாக அது மட்டுமே இருக்கும். பூட்டுக்கு ஆசைப்பட்டு எவனாவது திருடிகிட்டு போக வேண்டி ஆகலாம். ரைட்... நம்ம வண்டி 108 ஆம்புலன்ஸ் மாதிரி  24 மணி நேரமும் அலர்ட் ஆறுமுகமா  ஓடிகிட்டே இருக்கட்டும் என விட்டுவிட்டேன். அப்படியே போகும் வழியில் ஒரு நண்பனை பார்த்தேன். அவன் என் வண்டியின் நிலையை கண்டுவிட்டு கண்டுகாணாம போகாம "நாம சின்ன வயசா இருக்கும் போது லாகடம் பூட்டுகடை தங்கராசுன்னு ஒருத்தர் இருந்தாரே, அவர்  கடையிலே போய் கேட்டுப்பாறேன். அவரு கைய வைச்சா திறக்காத பூட்டே இல்லை. பூட்டாத பூட்டே இல்லை" என உசுப்பேத்த என் வண்டி அங்கே போய் நின்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த இடத்தில் இப்போது பூட்டுகடை சுவடே இல்லாமல் வாழை இல்லை நறுக்கி விற்று கொண்டிருக்க அவரிடம் நான் பூட்டுகடை தங்கராசு பற்றி கேட்க அவரோ "அவருக்கு வயசாகிப்போச்சுங்க. அவரு பையன் ஒருத்தர் தான் அமெச்சூரா செஞ்சுகிட்டு இருக்காரு. அவரு வூடு லால்பகதூர் நகர்ல இருக்கு. அவரு வீட்டுக்கு போய் அவர் பையன் வீடு எங்கன்னு விசாரிச்சு பாருங்க" என சொன்னார். சரின்னு நானும் வண்டியை லால்பகதூர் நகர் பக்கம் வண்டியை விட்டேன். அங்கே ஒரு சைக்கிள் கம்பனி, விறகு கடை எல்லாம் இருந்த இடத்தில் பேப்பர் படிச்சுகிட்டு இருந்த ஒருத்தர் கிட்டே "சார் பூட்டுக்கடை தங்கராசு அண்ணன் வீடு எங்க இருக்கு?" என கேட்ட போது "இதோ இந்த சந்திலே போங்க, இரண்டாவது கட்டிங்ல கடைசி வீடு" என சொல்ல நான் அங்கே போனேன். அவங்க வீட்டிலே அவங்க பையன் வீடு எங்கன்னு கேட்டதுக்கு " அப்படியே வந்த வழில ஒரு மெயின்ரோட்டிலே சைக்கிள் கம்பனி, விறகு கடை எல்லாம் இருக்குமே அதுக்கு நேர் எதிரே ஒரு ரோடு போகும் பாருங்க. அதிலே போய் ஒரு 5 வீடு தள்ளி ஒரு காம்ப்ளக்ஸ் இருக்கும் அதிலே முதல் மாடில இருக்காரு" ன்னு சொல்ல நான் திரும்பவும் வந்து அதே பேப்பர் படிப்பவரிடம் "சார் இந்த எதிர் ரோட்டிலே பூட்டுகடை தங்கராசு பையன் வீடு இருப்பதா சொன்னாங்க. அது எது?"ன்னு கேட்டேன். அவரும் அந்த காம்ப்ளக்சை காட்டினார். அங்க போனேன். அவன் மனைவி "ஆமாங்க இதான் அவரு வீடு. அவரு அந்த சைக்கிள் கடையிலே பேப்பர் படிச்சுகிட்டு இருப்பாரு அங்க போய் பாருங்க" என சொன்ன போது எனக்கு கிட்ட தட்ட மயக்கமே வந்துடும் போலிருந்தது. அவர் பேர் என்னங்க என கேட்டதுக்கு அவங்க "அமுதன்"ன்னு சொன்னாங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் திரும்பவும் அந்த கடைக்கு வந்து அதே பேப்பர்படிப்பவரிடம் "சார் அமுதன் யார் சார்?" என கேட்க அவர் "நான் தான் என்ன விஷயம்?" என்றார். எனக்கு செம கோவம். அடக்கி கொண்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"பின்ன ஏன் சார் அலையவிட்டீங்க?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நான் எப்ப அலையவிட்டேன்?" - அவர்&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நான் தான் முதல்லயே பூட்டுகடை தங்கராசு வீடு எதுன்னு கேட்டனே?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ஆமாம். நான் தான் சரியா பதில் சொன்னனே"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ம்.. அது சரி பின்ன வந்து பூட்டுகடை தங்கராசு பையன் வீடு எங்கன்னு உங்க கிட்ட தானே கேட்டேன்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ஆமாம். அதுக்கும் சரியா தானே பதில் சொன்னேன்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு என்ன பதில் சொல்வதுன்னு தெரியலை. ஒருவேளை நான் தான் தப்பு பண்ணிட்டனோ என நினைத்து கொண்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவரே மெதுவாக "தம்பி, எனக்குன்னு ஒரு சுயமரியாதை இருக்கு. என் பேரை சொல்லி கேட்டா நான் தான் அதுன்னு சொல்லியிருப்பனே. எங்கப்பாவுக்கு வயசு 85 ஆச்சு. எனக்கோ 50க்கு மேல ஆச்சு. இன்னும் என்னை அப்பா பிள்ளையாக மட்டுமே அறிப்பட்டு இருக்கேன் என நினைத்த போது கொஞ்சம் சுயமரியாதையை இழந்த மாதிரி ஒரு பீலிங். இப்ப சொல்லுங்க என்ன வேண்டும்"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உஷ்.... அப்பாடா... முடியல.. என்னால முடியல... "சார் என் வண்டி சாவி காணாம போச்சு. ட்யூப்ளிகேட் போடனும்" என்றேன். அதுக்கு அவர் "இல்லீங்க நான் சாவி போடுவதில்லை"ன்னு சொன்னார். எனக்கு இன்னும் கோவம் அதிகமாச்சு. இதுக்கு தான் நான் இத்தனை அலைந்தேனா என்று எனக்கு என் மேலயே கோவம். நான் அவரிடம் "சார் அப்பவே அந்த டி வி எஸ் கம்பனி காரன் சொன்னான். டைட்டானிக் கப்பல்க்கு கூட மாத்து சாவி போடலாம் ஆனா எங்க கம்பனிக்கு போட முடியாதுன்னு சொன்னான். அது உண்மை தான் போலிருக்கு" என சொல்லிவிட்டு கியரை போட்டு வண்டியை சர்ன்னு கிளப்பினேன். அந்த தெரு முனைக்கு போய் தான் யூ டேர்ன் அடித்து திரும்பி வரனும். நான் போய் திரும்பி அவரை கிராஸ் செய்து போகும் போது "தம்பி கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க" என குரல் கேட்டு நிப்பாட்டினேன். வண்டி கிட்ட வந்து ஒரு சாவியை போட்டு வண்டிய ஆஃப் செய்ய அது குழந்தை போல ஆஃப் ஆகியது. "இப்ப ஸ்டார்ட் பண்ணுங்க" என சொன்னார். செய்தேன். அழகா ஸ்டார்ட் ஆகியது. அடடே என நினைத்து கொண்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"தம்பி, பொதுவா நான் இது போல ஜுஜுபி கம்பனி வண்டி சாவி எல்லாம் போடுவதில்லை. இதல்லாம் எனக்கு 60 நொடி வேலை தான். நீங்க யூ டேர்ன் எடுத்து திரும்புவதுக்குள்ள என் வண்டி சாவியை இதே ரோட்டிலே கீழே போட்டு தேய்த்து உங்க வண்டிக்கு போட்டுட முடியும். ஆனா பாருங்க உங்களுக்கு மாத்து சாவி கிடைச்சிடும், ஆனா எனக்கு தான் ஜாப் சேட்டிஸ்ஃபேக்ஷன் கிடைக்காது" என சொன்னார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு இப்போ அந்த டைட்டானிக் உதாரணம் சொன்னவன் மீது கோபம் திரும்பியது. நான் அவரிடம் "உங்க சார்ஜ் எத்தனை சார்" என கேட்டேன். அவர் முப்பத்தி ஏழு ரூபாய் தேவைப்படுது. ஆனா நீங்க நாற்பது கொடுங்க. ஏன்னா சில்லரை இருக்காது என் கிட்ட" என சொன்ன போது எனக்கு மேலும் ஆச்சர்யம். "இது என்னங்க கணக்கு முப்பத்தி ஏழு?" என்றேன். அதற்கு அவர் "எனக்கு இப்போது அவ்வளவு தான் தேவைப்படுது" என சொன்னார். மேலும் பேசினா அதுக்கு எதுனா வியாக்யானம் பேசுவாரோ என நினைத்து நாற்பது கொடுத்து விட்டு கிளம்பி வந்து விட்டேன். திரும்ப வரும் போது அவர் "தம்பி இனிமே இது போல வண்டிக்கு சாவி போடல்லாம் கேட்டு வராதீங்க. ரொம்ப ஒஸ்தியான யாராலும் திறக்க முடியாத பூட்டு கோத்ரெஜ் போல சவாலான வேலைன்னா மட்டும் வாங்க" என சொல்லி நம்பர் கொடுத்தார். எதுக்கும் இருக்கட்டும் என அதை என் போனில் சேவ் செய்து கொண்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிற்க... இதல்லாம் ஒரு வருஷ முந்தின கதை. பின்னர் இப்போ ஒரு மூன்று மாதம் முன்னே நான், என் மனைவி, அபி, நட்ராஜ் எல்லாரும் என் தம்பி வீடு கட்டும் இடத்தில் இருந்து விட்டு மாலை ஒரு 5.30க்கு வீட்டுக்கு  திரும்பி கதவை திறந்தால்... ஒரே அடம்.. திறக்க மாட்டேங்குது. என்ன என்னவோ செய்தும் அது திறக்கவில்லை. எல்லோரும் வெளியே நிற்கின்றோம். எனக்கு வியர்த்து விட்டது. கதவை உடக்கவும் முடியாது. நல்ல பர்மா தேக்கு கதவு. பூட்டும் சாதாரண பூட்டு இல்லை. இரண்டு பூட்டுகள். இரண்டும் 7000 மதிப்புள்ள கோத்ரெஜ் நவீன பூட்டுகள். அதில் ஒன்று மட்டுமே பூட்டி விட்டு போனோம். அது தான் மக்கார் செய்யுது. அந்த பூட்டு வாங்கியது என் நண்பனின் தம்பி கடை தான். அதை வாங்கும் போதே "அண்ணே, இதான் இப்போதைக்கு கோத்ரெஜ்ல லேட்டஸ்ட் மாடல். இது வாங்கினா அவங்களே ப்ஃரீ இன்சூரன்ஸ் 50000 ரூபாய்க்கு தருவாங்க. பூட்டை மாத்துசாவி போட்டு திறந்து திருட்டு நடந்தா போலீஸ் எஃப் ஐ ஆர் காமிச்சா இன்சூரன்ஸ் பணம் கிடைச்சிடும்" என்றெல்லாம் சொன்னதால் அதை வாங்கி போட்டோம். ஆனா அது இப்படி மக்கர் செய்யும் என யாரும் எதிர்பார்கலை. அவனுக்கு போன் செய்து திட்டினேன். "என்ன பாபு, இப்புடி ஆகிடுச்சு. பொதுவா இந்த பூட்டிலே ரிப்பேர் வராது ஒருலட்சம் பூட்டிலே ஒன்னுக்கு தான் இதே போல பிரச்சனை வரும்னு சொன்னியே" என கேட்டேன். அதுக்கு அவன் "அண்ணே அந்த லட்சத்தில் ஒரு பூட்டு தான் இது போலிருக்கு" என சொன்னான். இதுக்கு மேல என்ன செய்ய முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்ப தான் அந்த அமுதன் நியாபகம் வந்தது. அமுதன் சாருக்கு போன் பண்ணினேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"அண்ணே, வீட்டிலே பூட்டு திறக்க மாட்டேங்குது. நீங்க கேட்டபடி சவாலான கேஸ் இது. கோத்ரெஜ் லேட்டஸ்ட் மாடல். வந்து திறந்து தர முடியுமா?" - இது நான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ம்.. அப்படியா? வீட்டின் உள்ளே யாரும் குழந்தைகள் மாட்டி இருக்காங்கலா?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"இல்லை"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"சரி எதுனா முதியவர், பெண்கள்?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;" முதியவர்ன்னா நான் தான், நானும் வெளியே தான் இருக்கேன். பெண்கள், குழந்தைகள் எல்லாம் வெளியே தான் இருக்காங்க. இண்டர்வியூ பண்ணும் நேரமா இது, உடனே வர முடியுமா?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"இல்லை தம்பி, மணி இப்போ ஆறு ஆச்சு, நான் இரவு ஒரு எட்டு மணிக்கு வர்ரேன்" என சொல்லிவிட்டு போனை வச்சுட்டாரு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு  ஆத்திரம் உச்சத்தை தொட்டது என்றாலும் வேறு வழி இல்லை. நம்ம பசங்களுக்கு தான் நேரம் காலம் தெரியாதே. "அப்பா பசிக்குது" என நட்ராஜ் சொல்ல... ஹோட்டலில் போய் வரலாம் என நினைத்தால் கூட பணம் கூட உள்ளே தான் இருக்கு. அப்படியே ஒரு ரெண்டு மணி நேரம் ஓடியது. நான் போன் செய்யலாம் என நினைத்த போது அவரே அவருடைய டி வி எஸ் 50ல் வந்தார். வரும் போது கையில் ஒரு "போஸ்க்" பெட்டியில் கொஞ்சம் டூல்ஸ். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வந்து பூட்டின் சாவியை பார்த்தார். நாங்க அதை நெளிச்சு வச்சிருந்தோம். சாவியில் பால்ரெஸ் வந்து உட்காருவது போல குழி குழியா இருக்கும். அதை தட்டி நெளித்து அந்த குழியில் இரண்டு குழியை கொஞ்சம் ஆழப்படுத்தினார். மொத்தம் இரண்டு நிமிஷம். பூட்டு "ப்ளக்" என திறந்து கொண்டது. எனக்கு மீண்டும் ஆச்சர்யம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உள்ளே கூப்பிட்டேன். வந்தார். எத்தனை சார்ஜ் என கேட்டேன். "இருநூறு ரூபாய் தேவைப்படுது" என சொன்னார். இப்பவும் கேட்டேன். அது என்ன கணக்கு தேவைப்படுவது மட்டுமே தான் கேட்பீங்களா? என்றேன். "ஆமாம்" என்றார். கொடுத்தேன். மேசை மேல் இருந்த "ஏ தாழ்ந்த தமிழகமே" என்ற அண்ணாவின் அண்ணாமலை பேச்சு புத்தகம் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தார். நான் அதற்கு "அது அண்ணாவின் புத்தகம்" என சொன்னேன். "அப்படியா" என கேட்டார். நான் அவரிடம் "ஆமா வேலை செஞ்சது இரண்டு நிமிஷம் தான். அதுக்கு ஏன் இரண்டு மணி நேரம் கழிச்சு தவிக்க விட்டு வரனும். அதிலே என்ன உங்களுக்கு ஒரு சேடிஸ்ட் மனோபாவம். இதிலே வேற குழந்தைகள் உள்ள இருக்காங்களா, முதியவர், பெண்கள் இருக்காங்கலா என்றெல்லாம் வேற கேள்விகள்" என நேரிடையாக கேட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர் என்னை  கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து " எனக்கு சேடிஸ மனோபாவம் எதும் இல்லை. நீங்க போன் செஞ்ச பத்து நிமிஷம் முன்ன தான் என் அப்பா இறந்து போனாரு. அதான் தகவல் சொல்லிகிட்டு இருந்தேன் எல்லாருக்கும். ஆசிரியர் வீரமணி அய்யா "நான் நாளை கண்டிப்பா வர்ரேன்னு சொன்னாரு. அதனால ஃப்ரீசர் பாக்ஸ் வாங்கி வச்சிடலாம்னு நினைச்சு தான் அதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகுமேன்னு  எட்டு மணிக்கு வர்ரதா சொன்னேன்" என அமைதியாக சொன்னார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் உண்மையாகவே அதிர்ந்து விட்டேன். அட என்ன மனுசன்யா இவருன்னு நினைச்சுகிட்டேன். பின்னர் நான் கேட்டேன் "சரி பின்ன ஏன் உள்ளே குழந்தைகள் மாட்டி இருக்காங்கலா, பெண்கள், முதியவர்ன்னு எல்லாம் கேட்டீங்க" என்றேன். அதுக்கு அவர் "அப்படி யாராவது மாட்டி இருந்தா நான் உடனே வந்திருப்பேன். அப்போ அங்கே இறந்து கிடப்பது என் அப்பா என்பதை விட நாளை அழுக போகும் ஒரு விஜிடபிள் அது என மனசிலே நினைச்சுகிட்டு இங்க வந்திருப்பேன். ச்அப்படி எதும் பிரச்சனை இல்லை என்கிற போது நீங்க ஒரு ரெண்டு மணி நேரம் காத்திருப்பதால் எந்த பிரச்சனையும் வந்துடாது என்றே நினைத்து ஃப்ரீசர் பாக்ஸ் வாங்க போயிட்டேன்" &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் கொஞ்ச நேரம் எதும் பேசவில்லை. அவர் கிளம்பி போய்விட்டார்.  நான் அடுத்த நாளே அந்த பூட்டை கொண்டு போய் அதே கடையில் கொடுத்தேன். அதை கோத்ரெஜ் கம்பனிக்கு அனுப்பி விட்டு ஒரு மாதம் கழித்து "இது ரிப்பேர் செய்ய இயலாது, கேரண்டி பீரியட்ம் முடிஞ்சு போச்சு, மன்னிக்கவும்" என கடித்தத்துடன் திரும்பி வந்து விட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் அதை எடுத்து கொண்டு அமுதன் அண்ணன் வீட்டுக்கு போனேன். வாங்கி பார்த்தார்.அந்த கோத்ரெஜ் அனுப்பிய கடித்தத்தையும் பார்த்தார். அவருக்கு மனசு திருப்தி. நான் அவர் வீட்டை பார்த்தேன். அத்தனை ஒரு பொருளாதார நிலையில் மிகப்பெரிய நிலையிலும் அவர் இல்லை. வீடும் வாடகைக்கு தான் இருக்கார். ஆனால் வீடு நிறைய புத்தகங்கள். திராவிட, கம்யூனிச புத்தகங்கள். நான் பார்த்ததே கிட்ட தட்ட ஒரு ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். அவரின் அப்பா பற்றி கேட்டேன். திராவிட கழகத்தின் முக்கிய தூண் அவர். ஆசிரியர் வீரமணி  ஆகியோர்களுக்கு இந்த குடும்பமே நல்ல பழக்கம் என தெரிந்து கொண்டேன். மயிலாடுதுறை நகராட்சியில் அவங்க அம்மா ரெட்டை தொகுதியா இருக்கும் போதே அந்த காலத்தில் 1950களில் கவுன்சிலர். பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்து அவங்க அப்பா அப்போ அவங்க அம்மாவுக்கு தைரியமூட்டி அரசியலில் கொண்டு வந்தாராம். இப்போது போல அப்போது பெண்கள் தொகுதின்னு எல்லாம் இல்லாத காலம் அது என்பதையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும்.  அப்படிப்பட்ட அவருக்கே நான் அண்ணாவின் புத்தகம் பற்றி சொல்லியிருக்கேனே என நினைத்து வெட்கமாக இருந்தது. அவரிடம் அண்ணாவின் பேச்சுகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகமே பார்த்தேன். கிட்ட தட்ட அண்ணாவின் முக்கிய பேச்சுகள் அடங்கிய புத்தகம்.  நான் அந்த புத்தகம் எல்லாம் பிரித்து பார்த்து பிரம்மித்து கொண்டே இருக்கும் போது அவர் "தம்பி வேலை முடிஞ்சுது" என கொடுத்தார். வழக்கம் போல என்ன சார்ஜ் என கேட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"160 ரூபாய் தேவைப்படுது. அது தவிர இந்த கோத்ரெஜ் கம்பனி காரனுக்கு 'உன்னான செய்ய முடியாததை ஒரு தமிழன்  பத்து நிமிஷத்தில் செஞ்சு முடிச்சுட்டான்' என ஒரு கடித்தமும் நீங்க போடனும் இதான் சார்ஜ்" என சொன்னார். நான் அவரிடம் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து கொண்டு "சரி உங்களுக்கு இப்போ ஆயிரம் ரூவாய் தேவைப்பட்டா இந்த வேலைக்கு என்னிடம் எத்தனை கேட்டிருப்பீங்க?" என மடக்கினேன்.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;அவர் சொன்னார்&lt;b&gt; "ஆயிரம் ரூபாய்"&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு பெரியார் படத்தின் ஒரு காட்சி தான் ஞாபகம் வந்தது. இந்த பெரியாரிஸ்டுகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாதான்பா பழகனும்:-)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-2739651321973342759?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/2739651321973342759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_08.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/2739651321973342759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/2739651321973342759'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_08.html' title='பெரியாரிஸ்டுகள் ஜாக்கிரதை!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1650447385157169029</id><published>2012-01-07T23:41:00.002+05:30</published><updated>2012-01-07T23:50:40.357+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாட்டுக்கறி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கீரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதிமுக அராஜகம்'/><title type='text'>இவ்விடம் மாட்டுக்கறி  பிரியாணி கிடைக்கும்!!!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-uBtFHENJ8uo/TwiMrLbCDYI/AAAAAAAABUs/quktEPWo4Yc/s1600/jaya-nakkeeran-1.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 303px;" src="http://1.bp.blogspot.com/-uBtFHENJ8uo/TwiMrLbCDYI/AAAAAAAABUs/quktEPWo4Yc/s400/jaya-nakkeeran-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694956402238426498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்று காலை வெளிவந்த நக்கீரனில் (எங்கே வெளிவந்தது, அதான் காலை ஆறு மணிக்கு எல்லாம் எல்லா ஊர் அதிமுகவினருக்கும் மேலிடத்தில் இருந்து போன் வந்து அவர்கள் கத்தை கத்தையாக பிடுங்கி எரித்து விட்டனரே) ஜெயா மாட்டுகறி சாப்பிடுவார் என்னும் விஷயம் பற்றி அவர்கள் எழுதப்போக இப்போது பிரச்சனை நக்கீரனை அடித்தது சரியா தவறா என்பது போய்  மாட்டுக்கறி சாப்பிடுவது சரியா தவறா என்னும்  "கொள்கை" பிரச்சனைக்கு தாவி விட்டு நக்கீரனை அடித்தது மறைந்து போய்விட்டது. சபாஷ்! நம்ம மக்கள் பலவீனமே அது தானே! சில சமயம் பிரச்சனை திசை திருப்பப்படும். சில சமயம் பிரச்சனைகள் தானாகவே ட்ராக் மாறி போய் வேகமெடுக்கும். இப்பவும் இப்படித்தான் நக்கீரனை அடித்தது அதிமுக அரசின் அராஜகம் என்பதை மக்கள் மறந்து போய் மாட்டுக்கறி பிரியாணிக்கு வந்து கெக்கேபிக்கேன்னு சிரிக்க ஆரம்பித்து விட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு பத்திரிக்கை தவறாக எழுதுகின்றது என நினைக்கும் பட்சத்தில் அதை கூண்டில் ஏற்றுங்கள். அதைவிடுத்து அராஜகம் கையில் எடுப்பது தவறு என பொதுவான குரல் எழும்பிய போது  அப்படி குரல் எழுப்பியவன்  நடுநிலைவாதியாக இருந்தாலும் கூட அவன் திமுககாரனாக சித்தரித்து "நீங்க மட்டும் தினகரனை தாக்கவில்லையா" என அரைவேக்காடு கும்பல் பிதற்ற ஆரம்பித்தது. தம்பி அப்துல்லா அதற்கு அழகாய் "நக்கீரன் அலுவலக தாக்குதலுக்கு கண்டனம் சொன்னா உடனே ஏன் நீங்க மட்டும் தினகரனைத் தாக்கலையோன்னு பதிலுக்கு கூவுறானுங்க. அடகூமுட்டைகளா, தினகரன் திமுக பத்திரிக்கை, தாக்கினவனும் திமுககாரன். ஆட்சியை விமர்சிச்சு செய்தி வந்ததுக்காகவும் தாக்கலை. அது உட்கட்சி பூசல்தொடர்புடையது. ஒரு வீட்டுக்குள்ள இருந்துகிட்டே கிர்மினல் பண்றானேன்னு அண்ணங்காரன் தம்பியை ரெண்டு அறை அறையிறதில்லையா அது மாதிரி விசயம் திமுககாரன் தினகரனை எரிச்சது. ஏன்டா நீ அடுத்த வீட்டுக்காரனை அடிச்சன்னு கேட்டா நீ ஏன்டா உன் வீட்டுக்குள்ளயே அடுச்சிகிறனு கேக்குறானுங்க அறிவாளிங்க!'' என அழகாய் பதில் சொல்லியும் கேட்பார் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சில நடுநிலைவாதிகள் என்னும் போர்வை போத்தியவர்கள் 'அவா செஞ்சதும் தப்பு, இவா செஞ்சதும் தப்பு" என அருமையான விளக்கம் கொடுத்து விட்டு கடையை கல்லா கட்டிவிட்டு கிளம்பிவிட்டனர்.   ஒரிஜினல் அக்மார்க் அதிமுகவினரோ "அம்மாவைப்போய் மாட்டுக்கறி சாப்பிடுவாங்கன்னு சொல்லும் அந்த அயோக்கியன் கோபாலை கொன்னு போடனும்" என திருவாய் மலர்ந்துள்ளனர். அதற்கு தம்பி அப்துல்லாவோ "ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பர் என்று எழுதியது பெரிய தவறாம். அதனால் தாக்குதல் நடத்துவது சரியாம். அதிலும் இன்னும் சிலர் எழுதிய ஆளைச் சரியாக கண்டுபிடித்து உதைக்க வேண்டும் என்று கூப்பாடு வேறு. ஆமாம் மாட்டுக்கறி உண்பது என்பது என்ன அவ்வளவு கேவலமா? மலத்தை உண்பதுதான் நான் அறிந்தவரையில் கேவலம். மற்ற எதுவும் அவரவர் சுயவிருப்பம். அதில் எந்தப் பெருமையும் இல்லை சிறுமையும் இல்லை. இந்த நாட்டின் கோடான கோடி தாழ்தப்பட்ட மக்களின் புலால் ஆசைக்கு ஒரே தீர்வாக இருப்பது இன்றும் மாட்டுக்கறி உணவுதான். நான் அறிந்தவரையில் செல்வி.ஜெயலலிதா அவர்கள் திரைப்படங்க்களில் நடித்த காலத்தில் எந்த ஒளிவுமறைவுமின்றி ஷூட்டிங்களில் புலால் உணவை உண்டவர். அதைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் இன்றும் ஆயிரம்பேர் உண்டு. அந்த அம்மாவே சும்மா இருக்க அல்லக்கை அடிவருடிகளின் ஆட்டம் ஓவர்'' என காட்டமாக பதில் சொல்லி இருக்கின்றார்.  நல்ல பதில் தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதிமுகவினர் மற்றும் நடுநிலைவாதிகள் போர்வை போத்திய சிலர் "அம்மா மாட்டுக்கறி சாப்பிட்டாங்கன்னு அவதூறு கிளப்பிய நக்கீரன் செயல் மன்னிக்க முடியாத குற்றம்" என வாதிட அதற்கு  தோழர் ஜே பி பிரகாஷ் அருமையாக ஒரு "டங் புல்லிங்" கேள்வி கேட்கிறார். "மாட்டுக்கறி தின்னும் மாமி என்று எழுதிய நக்கீரனை தாக்கியது சரி என்றால், கருணாநிதி குடும்பத்தை பற்றியும் , கனிமொழி , ராசா போன்றவர்களை குறித்து &lt;/div&gt;&lt;div&gt;இல்லாததை பொல்லாததை , ஆபாசமாக, விரசமாக தொடர்ந்து எழுத்தும் பூணுல் பத்திரிகைகளுக்கு என்ன தண்டனை...." .... சரியாகத்தான் இருக்கு இதும். நல்ல கேள்வி தான். ஆனால் பதில் வந்தபாடில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதற்கிடையே முன்னாள் அமைச்சர் அதிமுகவை சேர்ந்த பொன்னையன் ஒரு அதிரடி அறிக்கை வெளியிடுகின்றார். அது என்னான்னா "ஜெயலலிதா, அவரது வீட்டிலேயே கொள்கை ரீதியாக ஒருகாலத்திலும் இதை (Beef) அனுமதிப்பதே இல்லை'' அடடே அருமையான அறிக்கையாக இருக்கே, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது அதிமுகவின் கொள்கையா அல்லது ஜெயா அம்மையாரின் வீட்டு கொள்கையா என புரியவில்லை. ஆனால் அதற்கு தோழர்  ஜே பி பிரகாஷ் ஒரு சூடான பதில் கொடுக்கின்றார். அது என்னான்னா "இதுல என்ன கொள்கை சம்மந்தபட்டது ???? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நேரு பிரதமராய் இருந்தபோது நாடு முழுவதும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவர கோரி பார்பன சனாதனிகள் போராட்டம் நடத்தினர்...காமராஜர் இருந்த டெல்லி வீட்டையும் கொளுத்தினர்..அப்போது இந்த போராட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் இருந்து மட்டும்தான் எதிர்ப்பு குரல் எழுந்தது....அந்த குரல் திராவிட இயக்க பிதாமகன் தந்தை பெரியாருடையது....அப்போது அவர் அறிவித்த போராட்டம் தான் "மாட்டு கறி உண்ணும்" போராட்டம்....அனைத்து இடங்களிலும் மாட்டுக்கறி பிரியாணியும், மாட்டுக்கறி சூப்பும், பொது இடங்களில் சமைத்து வேண்டுவோர்க்கு அளிக்கப்பட்டது...அந்த போராட்டத்தின் எதிரொலியாக, வட நாட்டு சனாதனிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது....அனால் பொன்னையன் போன்றோர் இப்போது "வேறு" ஒரு கொள்கையை பேசுகின்றனர்"" இப்படியாக தோழர் பிரகாஷ் போட்டு கிழிச்சு எடுக்கின்றார். பொன்னையன் வாயை மூடிகிட்டு பேசாம இருந்து தொலைச்சு இருக்கலாமோ?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதன் நடுவே நக்கீரனை தாக்கிய விஷயத்தை அம்போன்னு விட்டு விட்டு பிரச்சனை முழுவதுமாக மாட்டுக்கறிக்கு வந்து விடுகின்றது. விந்தைமனிதன் ராஜாராமன் என்னும் தோழர் மாட்டுக்கறியின் ஜாதகம் எல்லாம் தூசி தட்டி கட்டம் எல்லாம் போட்டு சோழி உருட்டி விளையாடிவிட்டார். அது என்னான்னா \\ பிராமணர்கள் மாட்டுக்கறி உண்பது இழிவான செயல் என்ற கருத்துருவாக்கம் எப்போதிருந்து வந்தது தெரியுமா?வேதகாலத்தில் மாட்டுக்கறி உண்பது இயல்பாகவும், மதிக்கத் தக்க ஒன்றாகவுமே இருந்து வந்திருக்கின்றது. சமைக்க உகந்த மாடு எத்தனை பற்கள், எத்தனை சுழிகளோடு இருக்க வேண்டும்.. மாட்டை எப்படி அறுத்துப் பங்கு வைக்கவேண்டும், அக்னிதேவன் உள்ளிட்ட அதிதேவதைகளுக்கு எந்தப் பாகத்தில் இருந்து கறியெடுத்து அவிர்ப்பாகம் கொடுக்கப்படவேண்டும், அவிர்ப்பாகம் கொடுக்கும்போது எந்தெந்த மந்திரங்களையெல்லாம் உச்சாடனம் செய்யவேண்டும் என்றெல்லாம் மிகத்தெளிவாக எழுதிவைத்து, மாட்டுக்கறி உண்பதை சனாதனத்தினர் கொண்டாட்டமாகவே செய்திருக்கின்றனர். பின்னர் உயிர்க்கொல்லாமையை வலியுறுத்தி வளர்ந்த சமண, பௌத்த மதங்களின் போட்டியைச் சமாளித்துத் தாக்குப்பிடிக்கவே சனாதன இந்து மதமும் உயிர்க்கொல்லாமைத் தத்துவத்தினைக் கடைப்பிடிக்கத் துவங்கியது \\  சபாஷ்!  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது தான் தோழர் வினி ஷர்பனா ஒரு புது கோணத்தில் இந்த பிரச்சனையை அனுகுகின்றார். அது என்னான்னா  ஜெயா அசைவம் சாப்பிடுபவர் என நக்கீரன் சொல்லியிருந்தா கோவிச்சுகிட்டு இருக்க மாட்டார், ஆனா பொதுவாக விலை குறைவு என்னும் காரணத்தால் ஏழ்மை நிலையில் இருக்கும் தாழத்தப்பட்டவர்கள் சாப்பிடும் ஒரு உணவை தான் உண்டதாக சொல்லி தன்னை அவமானம் செய்ததாக ஜெயா நினைத்து இப்படி காண்டு ஆகி நக்கீரனை அடிச்சு துவைக்க சொல்லிட்டார்" என அதிரடியாய் போட்டு தாக்க... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ப்யூர் இந்துத்வாவாதிகள் "அது ஒரு தெய்வம் அதை கொல்லலாமா"என கேட்க "அப்படின்னா முருகன் தமிழ்கடவுள் கையில் இருக்கும் சேவல் கோழியை கொல்லலாமா? என மடக்க ஒரே அதகளம் இன்றைக்கு நம் இணையம் பக்கம் முழுக்க முழுக்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நிற்க..... ஒரு விஷயம் மட்டும் தெளிவு. அம்மையார் நக்கீரனை அடிச்சது என்பது போய் பிரச்சனை மாட்டுக்கறிக்கு வந்து நிற்கின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதிமுகவினரோ, ஆதிக்க சக்திகளோ பத்திரிக்கை தணிக்கை வேண்டும் என்ற குரல் மட்டும் எழுப்பவே இல்லை. ஏன்னா திமுக, ஸ்பெக்ர்டம், 2ஜி, கனிமொழி, ராசா என அவர்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போட முடியாமல் போய்விடும் அபாயம் அவர்களுக்கு இதனால் ஏற்படுமே என்கிற பயம் தான். அப்படி அவர்கள் போட்ட ஆட்டத்தினால் தான் இன்று அதிமுக ஆட்சிகட்டிலில் பப்பரக்கான்னு படுத்து கிடக்கு. அதை இழக்க விரும்ப மாட்டார்கள் அவர்கள். அதே போல மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என கோஷமிடும் இந்துத்வாக்கள் "மனித கறி" சாப்பிட்ட மோடிகளை மறந்தும் கூட இந்த விவாதத்துக்கு கொண்டு வரவில்லை. ஏன்னா மட்டுக்கறி மட்டும் கூடாது ஆனால், சிறுபான்மையினர் கறி என்பது அவர்கள் உயிர் வாழ தேவையான உணவு. அப்படித்தானே? என்ன நடக்குது இந்த நாட்டில்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் இந்த விவாதங்களில் எல்லோருமே ஒன்றை மட்டும் மறைக்க விரும்பவில்லை. அதிமுக தான் இந்த அராஜகத்தை நடத்தியது. அதும் தலைமை சொல்லித்தான் இது நடந்தது என்பதை எல்லோரும் ஒத்துகொள்கின்றனர். இதற்கு உண்மையான நடுநிலைவாதிகள் பதில் என்ன? நிலை என்ன? எப்போதும் போல வாய் மூடி மௌனகுருவாக இருக்க போகின்றார்களா? எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்  ஓட்டு பட்டனை அழுத்தி பதில் சொல்ல போகின்றார்களா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-1650447385157169029?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/1650447385157169029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_1610.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/1650447385157169029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/1650447385157169029'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_1610.html' title='இவ்விடம் மாட்டுக்கறி  பிரியாணி கிடைக்கும்!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-uBtFHENJ8uo/TwiMrLbCDYI/AAAAAAAABUs/quktEPWo4Yc/s72-c/jaya-nakkeeran-1.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4109497003766684790</id><published>2012-01-07T01:37:00.001+05:30</published><updated>2012-01-07T01:48:52.739+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அறிஞர் அண்ணாவும் அசன்முகமது ஜின்னாவும்!</title><content type='html'>&lt;div&gt;அது 1963ம் ஆண்டு.  சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு சிறப்பு மாநாடு. நம் அண்ணா பேசுகின்றார். 'நான் 1938ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவன்" என்கிற ரீதியில் பேச்சை ஆரம்பித்து "அரசியல் சட்டத்தின் 17 வது விதியை அதாவது மொழி பிரிவினையை எதிர்த்து அதை கொளுத்தும் போராட்டம். 1963ல் நவம்பர் 17 அன்று நான் கொளுத்த போகின்றேன்" என சொல்லிவிட்டார். ஆனால் நவம்பர் 16ம் தேதி அவர் காஞ்சியில் இருந்துன்சென்னை புறப்படும் முன்னர் கைது செய்யப்பட்டார்.  அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை சென்னை மத்திய சிறையில்..... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பல முறை அவர் சிறையில் இருந்தார். ஆனாலும் இந்த முறை அவரை வளர்த்த அவரால் "தொத்தா" என அழைக்கப்பட்ட அம்மையார் இறந்துவிட்டார். அண்ணா சிறையில் இருக்கும் போதே! ஆனால் அதை விட அதிகம் அவரை வாட்டிய செய்தி எது தெரியுமா தோழர்களே! உடன்பிறப்புகளே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது "மெயில்" என்று ஒரு ஆங்கில தினசரி. அதை பற்றி அண்ணா அந்த ஆறு மாதகாலத்தில் எழுதுகின்றார்.. ... அப்படியே தருகின்றேன்! கேளுங்கள்.......படியுங்கள்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;\\ இன்று மெயில் என்று ஒரு பத்திரிக்கை பார்த்து ஒரு கணம் பதறிப்போனேன். இந்தி எதிர்ப்பு அறப்போரினை நான் வெளியே வந்ததும்  நிறுத்திவிட எண்ணுவதாகவும், என்னை சிறையில் வந்து பார்த்த முக்கிய நண்பர்கள் சிலரிடம் நான் இதை சொல்லி அனுப்பியது போலவும் மெயிலில் செய்தி வெளியிட்டு இருக்கின்றனர்.  நான் நினைத்து கூட பார்க்காத ஒன்றினை இப்படி மெயில் துணிந்து வெளியிட்டு இருப்பது நான் பதறிப்போனேன். இவ்விதமான பத்திரிக்கை தாக்குதல்களிடமிருந்து நாம் தப்பி பிழைத்து இந்த அளவு வளர்ந்து இருக்கிறோம் என எண்ணிப்பார்க்கும் போது பெருமிதம் எழத்தான் செய்கின்றது!"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதற்கு அவருடன் சிறை சென்ற அரக்கோணம் ராமசாமி " அண்ணா! இந்த பத்திரிக்கையில் வெளியாவதை எல்லாம் நம் தோழர்கள் நம்ப மாட்டார்கள். நீங்கள் தான் ஏற்கனவே சொல்லிவிட்டீங்களே, இந்திஎதிர்ப்பு அறப்போர் சம்மந்தமாக நம்நாடு, முரசொலி ஆகியவை தவிர எந்த செய்தி எதில் வந்தாலும் நம்ப வேண்டாம் என" ---- இப்படி சொல்கின்றார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது அன்று அண்ணா தன் நாட்குறிப்பில் எழுதுகின்றார்! \\ அவர் சொன்னது போலவே நமது தோழர்கள் பத்திரிக்கைகள் இட்டுகட்டு எழுதுவதை நம்ப மாட்டார்கள் என்ற உறுதி எனக்கு இருக்கின்றது என்றாலும்பத்திரிக்கைகள் இப்படிப்பட்ட செய்திகள் வெளிப்படுத்துவது ஜனநாயக முறையை குந்தகப்படுத்துகின்ரனறோ என்கிற அச்சம் வர செய்கின்றது. இனி நாட்டிலே ஒரே கட்சி, ஒரே ஆட்சி, என அறிவித்துவிட்டு போகலாமே!ஜனநாயகம், எதிர்கட்சி, பொதுத்தேர்தல், பேச்சுரிமை என்று உதட்டளவில் மட்டும் செயல்படுவதற்கு இது மேல் தானே" \\&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக நம் அண்ணா அன்று மனம் புண்பட்டார். இன்று குமுதம் என்னும் விஷ பத்திரிக்கை வெளியிட்ட செய்தி ....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;\\ நெருங்கியே இருப்பவர்கள் திடீ ரென பிரிந்துவிடுவதும், முட்டி மோதிக்கொள்பவர்கள் ஒரேநாளில் இணைவதும், நிழல்கள் நிஜமாவதும், நிஜம் நிழலாகிப் போவதும் அரசியலில் அடிக்கடி காணக் கிடைக்கிற காட்சிகள்தான். இப்போது ஜெ.-சசி பிரிவுக்கு இணையாக தமிழக அரசியலில் மற்றொரு பிரிவுக் காட்சியும் தி.மு.க.வில் நிகழ்ந்துள்ளது. ஸ்டாலினுக்கும் அவரது நண்ப ரான அசன் முகமது ஜின்னாவுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மௌன மோதல்தான் அது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடந்த சட்டசபைத் தேர்தல் வரை தி.மு.க. வினரால் அரசல் புரசலாக அறியப்பட்டிருந்த ஜின்னா, தேர்தலின் போதுதான் பிரபலமடைந்தார். காரணம், அதுவரை ஸ்டாலின் போட்டியிட்டு வந்த ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் ஜின்னாவே போட்டியிட்டார். இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த அந்த நட்புதான் இப்போது பிளவாகியிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘தி.மு.க.வில் வட்டச் செயலாளர் பதவிக்காக போராடியே வாழ்க்கையைக் கடந்துவிட்டவர்கள் பலர். ஆனால், திடீரென வந்த ஜின்னாவுக்கு மாநில அளவில் இளைஞரணி துணைச் செயலாளர் பதவி, எம்.எல்.ஏ. சீட் என ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்ததால்தான் அவருக்குப் பிடிக்காதவர்கள் இந்த விரிசலுக்கு வழிவகுத்திருக்கிறார்கள்..’ என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்போ, ‘ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தை ஜின்னா பயன்படுத்தி கட்சியிலும், ஸ்டாலின் குடும்பத்திலும்கூட பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினார். இதனால்தான் தளபதி அவரை வெளியேற்றிவிட்டார்’ என்கிறது.\\&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக அன்று நம் அண்ணா! இன்று நம் ஜின்னா! ஊடகங்கள் அன்று அண்ணாவின் இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிர்த்து தோல்வி கண்டதை போல இன்றும் தோல்வி காணும்! இன்று காலை கூட நான் தோழர் ஜின்னாவிடம் பேசினேன். மிகுந்த ஆர்வமுடம் புதிய இரத்தம் காணப்போகும் திமுக இளைஞர் அணி பற்றி பேசினார். தளபதியுடன் அவர் நேற்று திருவள்ளூர் கூட்டம் கலந்து கொண்டதை அழகாய் பேசினார்! அது பற்றி நான் கட்டுரை எழுத போவதை சொன்னேன். " அதற்கான என் டிப்ஸ் என்ன வேண்டுமோ கேளுங்க" என சொன்னார்! இது தான் ஜின்னா! தளபதி உடல்நிலை பற்றி கேட்டேன்! அதற்கு அவர் அதை நாங்க இருக்கோம் பார்த்துப்போம். நீங்க எல்லாரும் கட்சி வேலை பாருங்க என சொன்னார்! இதான் ஜின்னா!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-4109497003766684790?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/4109497003766684790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_07.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/4109497003766684790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/4109497003766684790'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_07.html' title='அறிஞர் அண்ணாவும் அசன்முகமது ஜின்னாவும்!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1344204244102842749</id><published>2012-01-05T16:31:00.003+05:30</published><updated>2012-01-05T16:42:42.557+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><title type='text'>கலைஞரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பொதுவா எங்க ஊர்ல இருக்கும் திமுகவினருக்கு கலைஞர் எங்க ஊர் பக்கம் வரும் நாள் எல்லாமே தீபாவளி போல, பொங்கல் போல... காலை முதலே "ரெஸ்ட்லெஸ்" ஆக இருப்பாங்க. சின்ன பசங்க தீபாவளியை எதிர்பார்த்து காத்து கிடந்து தீபாவளி அன்று காலை 11 மணிக்கு அந்த பசங்க கிட்டே பெரியவங்க வந்து "தீபாளி போய்டிச்சா" என கேட்கும் போது "ம் .. அது கும்மோணம் தாண்டி போச்சுது. இனி அடுத்தோர்ஷம் தான் வரும்" என சோகமாக சொல்வாங்களே அதே போல கலைஞர் எங்களை கடந்து போனதும் திரும்பி வீட்டுக்கு வரும் போது நடை தளர்ந்து வருவோம். ஆனாலும் அவரை பார்த்த அந்த "பூஸ்ட்" அடுத்த முறை அவர் வரும் வரை மனதில் இனிக்கும் அளவு அவர் நினைவுகள் மலர்ந்து கிடக்கும். இதான் எங்கள் தலைவர் கலைஞர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த முறை அவர் வருவதோ பிய்ந்து போன பலரின் வாழ்வை வசந்தமாக்க. தானே புயல் தாக்கியவர்களை தாங்கிப்பிடிக்க. கடலூர் தாண்டி எங்கள் ஊர்  நகர் பக்கம் அத்தனை ஒரு சேதம் இல்லை என்றாலும் விவசாய பயிர் சேதம் அதிகம். அதனால் டவுன் பக்கம் அத்தனை ஒரு தாக்கம் இல்லை நகர்புர மக்களிடம். ஆனாலும் தலைவரை காண வேண்டும் என்கிற ஆர்வம் மிக மிக அதிகமாக இருந்தது. நான் இன்று தலைவரை பார்த்த போது ஒரு மூன்று விஷயங்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அது என்ன மூன்று விஷயம்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மயிலாடுதுறையில் கால்டெக்ஸ் பெட்ரோல் பங்க் இடத்தில், மணிக்கூண்டு அருகில் மற்றும் நகராட்சி வாசலில் ஆகிய மூன்று இடங்களில் தலைவர் மக்களை சந்திக்க இருக்கின்றார் என்பது தான் திட்டமிடல். ஆனால் கூட்டம் கூடியதோ மயிலாடுதுறை எல்லை ஆரம்பம் முதல் முடிவு வரை. நான் நின்ற இடம் நகராட்சி வாசலில். அங்கே தான் நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் முதல் நகராட்சி சேர்பர்சன் திருமதி பவானி சீனிவாசன், வக்கீல் சீனிவாசன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் இருந்தனர். தவிர என் வீட்டுக்கு அருகில் இருக்கும் இடம் அது என்பதால் நான் அங்கு நின்றேன். நான் அங்கே போகும் போது மாலை மணி நான்கு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாருக்கும் அவர் எப்போது வருவார் என சரியாக தெரியவில்லை. ஆனாலும் எல்லோரும் "அவர் சிதம்பரம் தாண்டி விட்டார், வைத்தீஸ்வரன்கோவில் வந்து விட்டார் இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என யூகமாக சொல்லிகொண்டே இருக்க நேரம் கடக்க கடக்க கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. நான் சப்ஜெயில் பக்கத்தில் தாலுக்கா ஆபீஸ் வாசலில் நின்றேன். எனக்கு பின்னால் ஒரு வருவாய் ஊழியர் சங்க கொடிக்கம்பம். அதன் மேடையில் ஒரு பைத்தியம் அழுக்கான கிழிந்த உடை. பரட்டை தலை, கோர முகம். அந்த சின்ன கொடி மேடையின் மீது சுருண்டு கிடந்தது. கூட்டம் கூட கூட அதுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. எங்கோ வெறித்து பார்த்தது. பின்னர் கண் மூடி சுருண்டு கொண்டது. அதை விடுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் பக்கத்தில் ரொம்ப டீசண்டாக ஒருவர். அவர் மீது யாரும் படாமல் ஜாக்கிரதையாக நின்று கொண்டு இருந்தார். கவுன்சிலர் அசோக் என்னருகே வந்து ஒரு பொட்டலம் சூடான கடலையுடன் வந்து எனக்கும் கொடுத்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது நகர செயலர் குண்டாமணி எங்கள் அருகில். அவருக்கு போன் வரும் போதெல்லாம் எல்லோரும் "தலைவர் எது கிட்ட வர்ராரு" என கேட்டுக்கொண்டே இருக்க... குண்டாமணி ஒருவரை அழைத்து காதில் ஏதோ கிசுகிசுக்க ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு நான்கு ஒளிவிளக்குகள், ஜெனரேட்டர் எல்லாம் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. அப்போதே எனக்க்கு தெரிந்து விட்டது. தலைவர் வர மணி கண்டிப்பாக 7.30 ஆகும் என்று.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாரோ ஒருவர் என்னிடம் அந்த் பைத்தியத்தை பார்த்து "ஹூம் இந்த இடம் இத்தனை பரபரப்பா இருக்கே, இதுக்கு அது பத்தி எதுனா கவலை இருக்கா? அதுக்கு கலைஞரை தெரிய போகுதா? மன்மோகன் சிங் வந்தா தெரிய போகுதா" என அங்கலாய்த்தார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ரங்கன், ஜெய்லாபாய் போன்ற பழம் ஆட்கள் எல்லாம் சலவை  வேட்டி சட்டையுடன் வந்ததோடு கையில் அழுகிப்போன வாழைத்தார், நெற் செடிகள் கொண்டு வந்திருந்தனர். சீனியர் என்றால் சீனியர் தான். தலைவர் வரும் நோக்கம் புயலை பார்வையிட. அதனால் ஆஸ் பர் புரொசிஜர் அவங்க அதை எடுத்து வந்தனர். (திமுககாரனை அசைச்சுக்க முடியாதுப்பா.... சின்ன பசங்க எல்லாம் கத்துக்கனும்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதே போன தடவை திருவாரூர் பிரச்சாரம் வரும் போது தலைவர் அதே நகராட்சி பக்கம் வரும் போது ஒரு 200 போலீஸ். திமுக தொண்டர்களை கிட்டே நெருங்காமல் கயிறு கட்டி எல்லாம்.... ச்சே... ஆனால் இப்போ அதல்லாம் இல்லை. கடமைக்கு என 5 போலீஸ். ஆனால் சில தொண்டர்களை கொண்டு நகரசெயலரே களத்தில் இறங்கி கூட்டம் ஒழுங்கு செய்ய .... கிட்ட தட்ட தலைவர் வந்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்படி முதலில் ஒரு அம்பாசிட்டர் ஹார்ன் அடித்து கொண்டே வந்தது. அடுத்து இரண்டு கார். அதிலே எல்லாம்யார் யார் இருந்தாங்கன்னு தெரியலை. அடுத்த ஒரு பொலீரோ. அதிலே எங்க மாவட்டம் (அண்ணன் ஏ கே எஸ்) வந்தது. உடனே கூட்டம் அந்த காரை மறித்து நிற்க அவர் உள்ளே இருந்து கத்தி கொண்டே "ஓரமா போங்கப்பா" என குதிக்க... அடுத்த காரில் வந்தார் கலைஞர். காரின் நம்பர்  TN 27 - BD 2728.&lt;/div&gt;&lt;div&gt;காரில் அவர் தகதகத்தாய சூரியனாய் மின்ன, அவருக்கு பக்கத்து சீட்டில் அண்ணன் துரைமுருகன் , இவர்களுக்கு பின் சீட்டில் அண்ணன் பொன்முடி, நடுவே அண்ணன் எம் ஆர் கே பன்னீர் செல்வம், அடுத்து அண்ணன் எ. வ வேலு. அண்ணன் மர் நால்வரும் ரோஜாப்பூவாய் கசங்கி இருக்க என் தலைவனோ சுட்டெரிக்கும் சூரியனாய், அன்பொழுகும் தென்றலாய், அமைதியான ஆறாய், சீறும் அருவியாய், ஆர்பரிக்கும் கடலாய், புன்னகை முகமாய், இன்று பிறந்த குழந்தையாய், சிரிக்கும் ரோஜாவாய், வாசனையான மல்லிகையாய், அன்பு அம்மாவாய், கண்டிப்பான தகப்பனாய் .... எல்லாமுமாய் கலந்த ஒரு கலவையாய் கை அசைத்தார். யாரோ ஒரு பையன் கல்லூரி பையன் என் பக்கம் இருந்து அண்ணன் துரைமுருகனை பார்த்து "அண்ணே ஹிண்டுல கலக்கிட்டீங்க" என சொல்ல அவர் முகத்தில் அந்த களைப்பிலும் ஒரு சுகம் தெரிந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தலைவர் கார் நின்ற பின் என் அருகே நின்றாரே அந்த டீசண்ட் ஆசாமி வெறி கொண்டவர் மாதிரி "அன்னை அஞ்சுகம் பெற்ற என் தங்கம் வாழ்க, என் தலைவர் கலைஞர் வாழ்க" என கோஷம் போட அதுவரை அவர் சீவி சிங்காரித்து வைத்த தலை முடி எல்லாம் கலைந்து சட்டை பட்டன்கள் பிய்ந்து போனது. கொஞ்ச நேரம் முன்னர் யாரும் தன் மீது படக்கூடாமல் ஜாக்கிரதையாக இருந்த ஆசாமியா இவர் என நினைத்து கொண்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தலைவர் காரின் கண்ணாடி இறக்கி சால்வைகள் வாங்கி கொண்டார். அப்போது ஒரு திமுக உடன்பிறப்பு தலைவரின் காரை தொட வர இசட் பிரிவு வீரர் அவரை தள்ளி விட அந்த தொண்டர்  தன் சட்டையை கழட்டி அவரிடம் காண்பித்து "சுடு சுடு என் தலைவர் காரை நான் தொடுவதை நீ தடுத்து மீறி நீ சுட்டா சுடு" என சட்டை பிரித்து காண்பிக்க அந்த வீரருக்கு நம் உடன்பிறப்பு சொல்லும் மொழி புரியாவிட்டாலும் உணர்ச்சி புரிந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தலைவர் வாழ்க என்ற கோஷம் வானை பிளக்க தலைவரின் கார் மெல்ல எங்களை கடந்து போனது. நான் அந்த பைத்தியம் இருந்த கொடிக்கம்பம் கீழே என் வண்டியை நிப்பாட்டி இருந்தேன். அதை எடுக்க போன போது அந்த பைத்தியம் நம் தலைவர் கார் போகும் திசை நோக்கி கும்பிட்டு கொண்டு இருந்தது. நான் ஒரு கனம் அதிர்ந்தேன். என்னால் இப்போதும் யோசித்து யோசித்து பார்க்கிறேன். அதுக்கு எதும் தெரியாது. ஆனாலும் என்னவோ நம் தலைவர் ஒரு ரிஷி போல, ஒரு சித்தர் போல, ஒரு யோகி போல தெரிந்து இருப்பாரோ என்னவோ என நினைத்து கொண்டேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் ஒரு மூன்று விஷயங்கள் என் மனதில் ஓடியது என சொன்னேனே. அந்த பைத்தியம் முதல் விஷயம். அடுத்து..... இதே அண்ணன் துரைமுருகன், அண்ணன் எம் ஆர் கே, அண்ணன் வேலு, அண்ணன் பொன்முடி... இவர்கள் கொடுத்து வைத்தவ்ர்கள்.... இதே போலத்தானே பரிதி இளம்வழுதியையும் வைத்து இருந்தார் தலைவர். அதை கெடுத்து கொண்டாரே பரிதி:-(  இனி பரிதி நினைத்தாலும் அந்த உயரத்தை தொட இயலுமா? ஏன் மனிதர்கள் புத்தி இப்படி போகின்றது? இது இரண்டாவது விஷயம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூன்றாவது விஷயம்.... கலைஞரின் சொத்து பட்டியல் என கொஞ்ச நாள் முன்னர் ஒரு  மெயில் எல்லோருக்கும் பரப்பப்பட்டதே? அதிலே கோபாலபுரம் வீடு மதிப்பு 5 கோடின்னு இருந்துச்சு. அடப்பாவிகளா!  கலைஞரின் காரை தொடவே நம் தொண்டன் தன் மார்பை பிளந்துகொள் என காட்டுகின்றான். அந்த வீடு கலைஞர் மூச்சு காற்றால் நிரம்பிய வீடு. அதை எந்த அம்பானியாவது ஆயிரம் கோடி கொடுத்து வாங்கி டிக்கெட் போட்டு தினமும்  பார்க்க அனுமத்தித்தால் திமுக தொண்டன் அத்தனை பேரும் பிளாக்ல வாங்கி போய் அந்த இடத்தை தரிசித்து விட்டு வருவாங்களே. அம்பானி போட்ட காசை ஒரு வருஷத்தில் எடுத்துடுவானே. அவருடைய வீட்டுக்கு மதிப்பு 5 கோடின்னு போட்ட படுபாவிங்களே கலைஞரின் சொத்து மதிப்பு போட நீங்கள் யாரடா?  போடத்தான் முடியுமா உங்களால்??????&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாழ்க கலைஞர்! வெல்க திமுக! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-1344204244102842749?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/1344204244102842749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_05.html#comment-form' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/1344204244102842749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/1344204244102842749'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_05.html' title='கலைஞரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5888310915322255822</id><published>2012-01-04T21:27:00.001+05:30</published><updated>2012-01-04T21:32:08.527+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தானே புயல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயா'/><title type='text'>அடுத்தாத்து அம்புஜத்தை பார்தேளா?</title><content type='html'>தமிழகத்தில் "தானே" புயல் கடலூர் தலையெழுத்தை  புரட்டி மாற்றி எழுதி 5 நாட்கள் ஆகின்றது. அங்கே மின்சாரம் இல்லை,குடிதண்ணீர் இல்லை, டி வி இல்லை, செய்திகள் இல்லை, செல்போன் இல்லை, தினசரி செய்திதாள் கிடையாது, அழும் குழந்தைக்கு பால் இல்லை என்பது மட்டுமல்ல , புயலால் செத்தவனுக்கு அடுத்த நாள் ஊத்தக்கூட பால் இல்லை, ரோட்டில் நடந்து போக இயலாது. மரங்கள் தற்கொலை செய்து கொண்டன. சுவற் உண்டு கூரை இல்லை, கூரை மட்டும் உண்டு சுவர் இல்லை என சமதர்மம் நிலவும் தெருக்கள். அரசாங்கம் என்பது எங்கே இருக்கு என யாருக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;வழக்கம் போல மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எதிர்கட்சிகள் சத்தம் ஆளும் கட்சி  அம்மையாரின் நித்திரையை எழுப்பவில்லை. முதல்வருக்கு  அவர் தோழி போட்ட தடுப்புச்சுவற்றால் உளவுத்துறை தரும்  தகவல் போவதில்லை. போயிருந்தா மட்டும் அம்மையார் மட்டைக்கு ரெண்டு கீத்தா பிளந்து போட்டிருப்பாங்க என சப்பைகட்டு கட்டின பத்திரிக்கைகள் ஒன்று சேர்ந்து ஒரு வழியாய் அந்த தோழிக்கு சமாதி கட்டி அனுப்பி விட்ட பின்னர் தான் தானே புயல் போட்டு தாக்கியது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சு ஐந்து நாள். தோழி இருந்த போதாவது இரண்டொரு நாட்களில் அம்மையார் "மூட்"  அறிந்து காதில் போட்டிருப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் ஆலோசகர்களுக்கு கடலூர் பற்றி எந்த கவலையும் இல்லை போலிருக்கு. எதும் சொல்லவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கலைஞர் விட்ட ஒரு அறிக்கை.... அம்மையாருக்கான சங்கு. ஆம் ஓங்கி ஒலித்தது அந்த சங்கு. அறிவாலயத்தில் இருந்து போயஸ் தோட்டம் வரை அந்த சத்தம் கேட்டது. அம்மையார் செவியை கிழித்தது. .. தலைவர் கலைஞர் விட்ட அந்த அறிக்கை " நானே கடலூருக்கு போகின்றேன்,  பாண்டி மக்களை பார்க்கிறேன், நாகை, திருவாரூர் மக்களை கண்டு வருகிறேன் " . அந்த அஸ்திரம் அம்மையாரின் காதை கிழித்தது. " சரி அப்படின்னா, நானும் வானத்தில் இருந்து குனிந்து பார்க்கிறேன்" என திருவாய் மலர ஏதோ கடலூருக்கு வெளிச்சம் வரும் வழி கொஞ்சம் தெரிந்தது. கடலூரை புயல் புரட்டிப்போட்டால் என்ன? எனக்கு எது பற்றியும் கவலை இல்லை என இருந்த அம்மையார், தலைவர் கலைஞர் "நான் போகிறேன்" என சொன்னதும்  " அப்படின்னா நானும் போகிறேன்" என சொல்வது,என்னவோ அடுத்த வீட்டுக்காரி பட்டுப்புடவை வாங்கினால் தானும் வாங்க வேண்டும்  என நினைப்பது போல இருக்கின்றது. இந்த அம்மையார் ஆட்சி நடத்துகின்றாரா அல்லது அடுக்களை பெண்ணா என சந்தேகம் வருகின்றது.இது தான் ஆலோசனை சொல்லும் "துக்ளக்" லட்சனம் போலிருக்கு. தூரத்தில் இருந்து விமர்சிக்க மட்டுமே சிலருக்கு கைகூடும். ஆனால் ஆட்சி நடத்த தேவையான ஆலோசனை சொல்ல அந்த துக்ளக்கிற்கு மண்டையில் சரக்கு பத்தாது என்பது தெளிந்து போனது. அடுத்தவன் குடியை கெடுக்க மட்டும் ஆலோசனை சொல்பவர்கள் மக்கள் நலனில் எங்கே கவனம் செலுத்த போகின்றனர்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழகம் அதன் நலம் என நினைப்பது கலைஞர் மட்டுமே. ஆனாலும் நம் தமிழ் இணையம் மட்டும் கலைஞரை வசை பாடுவதை நிறுத்தப்போவதில்லை. இந்த வார தமிழ்மண நட்சத்திரம் திரு. அமுதவன் எழுதியது போல கலைஞரை திட்டி தீர்த்து ஜெயாவை ஆட்சியில் உட்கார வைக்க பெரும் முயற்சி எடுத்த வலையுலகினர் இன்று கைபிசைந்து நிற்கின்றனர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-5888310915322255822?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/5888310915322255822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_04.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/5888310915322255822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/5888310915322255822'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post_04.html' title='அடுத்தாத்து அம்புஜத்தை பார்தேளா?'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2462189716965872089</id><published>2012-01-02T23:31:00.005+05:30</published><updated>2012-01-03T00:06:02.051+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈரோடு சங்கமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அடடே இந்த பதிவை இப்படி கூட எழுதலாம்!  ஈரோடு பதிவர் சங்கமம் - சில சங்கடங்கள்....</title><content type='html'>&lt;div&gt;!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் ஈரோடு சங்கமம் சென்று வந்தேன். எனக்கு அங்கே பிடித்தது மிக்க மகிழ்வான உணவு. நான்  ஈரோடு வந்தது முதல் விடைபெறும் வரை அருமையான உபசரிப்பு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்படியாக கூட எழுதலாம். ஆனால் நான் போன வருடம் கடைசியில் எழுதிய பதிவு... ம் ம் ம் கொஞ்சம் காரம் தான் போலிருக்கு. சரி வேற மாதிரி கூட எழுத முயற்சிக்கிறேனே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஈரோடு பதிவர் சங்கமம்! சில சங்கடங்கள் பார்ட் 2&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாங்கள் போய் வந்தோம். மிகவும் அருமையான ஒரு நிகழ்வு. நானும் கூட அது பற்றி ஒரு பதிவு எழுதினேன். நீண்ட நாட்கள் பின்னர் நான் பதிவு எழுதுவதாலோ அல்லது இந்த சங்கமம் பற்றிய பல நிகழ்வுகள் எழுதியதாலோ நிறைய பின்னூட்டம் வந்தது. மிக்க மனம் மகிழ்வு. "இது போல எழுதி தொலைச்சால் என்ன? " என்று மும்பை அனுஜன்யா குறைபட்டுக்கொள்ளும் அளவு கூட இருந்து தொலைச்சுது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதன் பிறகு என்னிடம் நான் அங்கு வந்தமைக்காக சில ஈரோடு குழும பதிவர்கள் நன்றி சொல்லி பேசிய போது கிட்டதட்ட  கொல்லிமலை செந்தில்குமார் பதிவு வந்திருந்தது. அதில் நான் படித்த போது கூட எனக்கு எதும் "ரைட்டா" தெரியவில்லை எனும் போதிலும் "தப்பா"வும் எதும் தெரியலை. ஏன்னா நான் பதிவுலகில் மிகவும் கருத்து வேறுபாடு கொண்ட ஜோதிடர் ஆர் கே சதீஷ்குமார் அது தவிர வக்கீல் நாண்டு நொரண்டு ஆகியோர் வரவில்லை என தெரிந்த போது கூட  நான் " அட ஒரு வீட்டு கல்யாணம்னா சில சித்தப்பா பெரியப்பா 'எனக்கு நேரில் வந்து சொல்லலை"ன்னு கோவிப்பாங்களே அது போல இருக்கும்" என கூட கருத்து சொன்னேன் தொலைபேசியில்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர் அங்கே விருது வாங்கின உண்மை தமிழன் பதிவை படிக்கும் போது எங்கோ என் மனசில் ஓடிய ஒரு நெருடல் என்னை இடிக்க ஆரம்பித்தது. உண்மைதமிழன் சரவணன் " நீ ஏன் வரவில்லை?" என சஞ்சய் கிட்டே கேட்க " எனக்கு ஏன் தரவில்லை" என்ற சஞ்சய் கேள்வி மிக்க சரி தான் என எனக்கு பட்டது. ஆமாம் அப்போது தான் நான் எனக்கே கேட்டுக்கொண்டேன். " எனக்கு ஏன் தரவில்லை?"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழ்மணம் விருது கொடுக்குறாங்கன்னா அது ஓட்டு போடுதல், பின்ன மீண்டும் ஓட்டு போடுதல், பின்ன பதிவர்கள் சிலரை வச்சு நடுவர்... அதன் பின்னே அபிஅப்பாவை நிராகரித்தல் என இந்த 3 வருஷமா போய்கிட்டே இருக்கும் போது... இங்கயுமா அந்த மாதிரி என்னும் எரிச்சல்... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மீண்டும் மீண்டும் நான் பேசிய போதெல்லாம் இது ஒரு குழு எடுத்த முடிவல்ல. ஒரு தனி நபர் எடுத்த ஒரு முடிவு என்றும் புரிந்தது. இதே இதற்கு முன்னர் எழுதிய பதிவில் பரிசல் பெயரை கூட தவறாக குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும். அதற்கும் பரிசலுக்கும் சம்மந்தம் இல்லை. அது வெண்பூ பின்னூட்டம் பார்த்த பின்னர் தான் தெரிந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் நான்கு நாட்கள் முன்னர் இந்த பதிவு போட்ட பின்னர் கதிர் கிட்டே சொல்லிட்டு அவர் இட்ட பின்னூட்டம் இட்டு விட்டு தான் வெளியூர் போனேன். இன்று மதியம் வரும் போது பார்த்தேன். எல்லா கூத்துகளும். நான் பதிவு போட்டவுடன் அத்திவெட்டி ஜோதிபாரதி எப்போதும் போல வம்புக்காக அலைந்து கொண்டிருந்தார்:-)) ( சிரிப்பான் போட்டிருக்கேன் அவெஜோபா)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதனால் அவருக்கு அந்த லிங் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அதே போல கதிர்க்கு கூட "இதை தமிழ்மணத்திலே சேர்க்க முடியலை சேர்க்க முடியுமா?" என கேட்ட போது அவர் கோவமாக சொன்ன பதில் எனக்கு சிரிப்பை தான் கொடுத்தது. ஏன்னா நான் அப்படித்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் மீண்டும் சொல்கிறேன். ஈரோடு சங்கமம் முதல் வருடம் அங்கே போய் வந்தவர்களால் பாராட்டப்பட்டது. எப்படி? "அங்கே உணவு நன்றாக இருந்தது" என. இரண்டாவது வருடம் "பரிசல் போன்றவர்கள் அருமையாக நிகழ்சி நடத்தினர், அத்தோடு உணவும் அருமை" ஆனால் மூன்றாவது வருடம்... விருது 15 பேருக்கு சிறந்த வலையுலக ஜாம்பவான்களுக்கு  கொடுக்க போகின்றோம் என அறிவிக்கப்படவில்லை. கலந்துரையாடல் என சொன்னாலும் அது பிரதானப்படுத்தப்படவில்லை. உணவு எப்போதும் போல பிரதானப்படுத்தப்பட்டது. அப்படிபட்ட சூழலில் வருபவன் அதுக்கு தகுந்த "பிரிப்பரேஷன்"ல தான் வந்து தொலைவான் என்பது எல்லாருக்கும் பிரிந்ததே. இதை நீங்க பிரமாதப்படுத்த எதும் இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இங்கே இணையத்தில் இருப்பவன் எவனுமே அன்னாடம்காய்ச்சி இல்லை. அவன் மற்றவர்களை தொடர்புகொள்ளவே கூட மாதம் 500 முதல் 1000 வரை செலவு செய்யும் ஆள் தான்.(நெட் செலவை சொல்கிறேன்) அவனுக்கு கறி சோறு ஒரு பொருட்டு இல்லை. இல்லவே இல்லை. அவனவன் வந்த தூரத்தை கணக்கிட்டு பாருங்கள். அவன் போக்குவரத்துக்கு செய்த செலவிலே இதை விட அருமையாக அதே கறி சோறு சாப்பிட முடியும். ஆனால் அங்க வந்த ஒரே காரணம்.. அங்கே கிடைக்கும் அன்பு, மரியாதை, அரவணைப்பு, பதிவர்களை ஒரு சேர பார்க்கும் பாக்கியம்.... இங்கே இவனுக்கு என்ன தேவை? ஒரு கலந்துரையாடல். அவன் என்ன கருத்து எழுதினாலும் அவன் ஒரு படைப்பாளி என்னும் அங்கீகாரம் கொடுத்த தன்மை. ஆனால்.... 3ம் வருட சங்கமத்தில் அது மிஸ்ஸிங்....... &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர் கே சதீஷ்குமார் பிடிக்காது. ஆனால் அவருடைய பதிவுகள் படிக்கும். என்னை எரிச்சல் அடைய செய்யும் அளவு ஒரு படைப்பாளி படைக்கும் அந்த எழுத்துக்கு நான் அடிமை. கிட்ட தட்ட நான் அந்த விஷயத்தில் ஒரு  மாசோகிஸ்ட் போல. அதை தேடி தேடி படிப்பேன். எரிச்சல் அடைவேன். அங்கேதான்  அந்த எழுத்தாளனின் திறமை இருக்கு. அந்த எழுத்தாளன் அதே ஊரை சேர்ந்தவரை கூப்பிடலை என நினைக்கும் போது.... என்னவா இருக்கும் அதன் உள்ளே இருக்கும் அரசியல் என நினைத்து பார்க்க தோன்றியது. தட்ஸ் ஆல்....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதே தருமி சார், நான்  உமாசங்கர் என்னும் ஐ ஏ எஸ் ஆபீசர் பற்றி ஒரு அரசாங்கம் எடுத்த ஒரு அஃபீசியல் முடிவு பற்றி பொங்கி எழுந்த போது நான் மட்டும் சொன்னேன்.... "சார் இது ஒரு அரசாங்கம் எடுக்கும் ஒரு சாதாரண முடிவு. இதுகெல்லாம் உணர்சி வசப்பட்டு முடிவெடுக்க கூடாது"ன்னு. அவர் சொன்ன வார்த்தைக்காக ஒரு 40 பதிவர்கள் ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக பதிவிட நான் மட்டுமே அதற்கு எதிராக பதிவிட்டவன். அதன் காரணமாக முதன் முதலாக 40 மைனஸ் ஓட்டுகள் கூட பெற்றவன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்றைக்கு நானே என் முந்தைய பதிவில் தருமி சாருக்கு விருது கொடுக்கலாம் என சொன்னேன். ஏன்? அவருடைய திறமை! ஒரு சேர 40 பதிவர்களை திரட்டி அரசாங்கத்தை எதிர்க்கும் திறமை யாருக்கு வரும்? அதனால் அவருக்கு விருது கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இது தவறா? அதே நேரம் ஒரு பதிவு போட்டு அந்த 40 பேரையும் நான் எதிர்த்தேன். தகுந்த காரணங்கள் கொண்டு. அதனால் எனக்கு விருது கொடுத்து இருக்க வேண்டும். நான் கேட்பதில் என்ன தவறு? இதோ அந்த நான் போட்ட பதிவின் லிங் &lt;a href="http://www.abiappa.blogspot.com/2010/08/ias.html"&gt;http://www.abiappa.blogspot.com/2010/08/ias.html&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது காமடிபீஸ் மொக்கைன்னா இப்படிப்பட்ட காமடிபீஸ் மொக்கை பதிவு போட நான் எப்போதும் தயார். இதோ... சென்ஷி... என் மீது எப்போதும் விழுந்து பிறாண்டும்.. (அதே கதிர் வார்த்தைகள்.... சென்ஷி... இதே போல ஒரு காமடிபீஸ் மொக்கை இது வரை போட்டதுண்டா? சொன்னால் நான் மொட்டை போட்டு கிட்டு வீதியூர்வளம் வரத்தயார். இல்லை எனில் நான் இது வரை போட்ட 350 பதிவிலே ஒரு 100 பதிவாவது சென்ஷி பின்னூட்டம் போட்ட பதிவை எடுத்து இங்க லிங் கொடுக்கவா? நான் மரண மொக்கை போட்டா அதுக்கு எதுக்கு பாராட்டி பாராட்டி பின்னூட்டம் போடனும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதே 2007ல் இளைய நக்கீரன் என்னும் பெரியரில் ஒரு பதிவர் என்னை திட்டி ஒரு பதிவு போடும் போது திட்டின்னா பயங்கரமா இல்லை ரொம்ப சாதாரணமா " அபிஅப்பா போன்ற பதிவர்கள் எடுக்கும் வாந்திகள் இணையத்தை நாறடிக்குது" என சொன்ன ஒரே வார்த்தைக்காக இதே சென்ஷி பொங்கி பொங்கி அவரை திட்டி எழுதிய பதிவும் எல்லோருக்கும் தெரியும். அந்த லிங் வேண்டுமா? அதே சென்ஷி தான் இதே சென்ஷியா? ஆக அவரது மனோநிலை மாறிவிட்டது அல்லது இரட்டை நிலை என்பதற்கெல்லாம் நான் பதில் சொல்லதான் ஆகவேண்டுமா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக சென்ஷி என்னை தனிமனித தாக்குதல் செய்வதால் தான் பெரிய ஆளாக நினைக்கும் பட்சத்தில் நான் அதற்கு மனப்பூர்வ அனுமதி அளிக்கின்றேன். தவறே இல்லை. எப்படியாவது "கவனிக்கப்படவேண்டும்" என்னும் உன் ஆர்வம் எனக்கு புரிகின்றது என்றே பொருள் கொள்கின்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக "இணையம் முழுக்க என எடுத்து கொண்டால் அந்த 20 பேரில் நீங்க கொடுத்த சிலர் தகுதி குறைவானவர்கள். தவிர என்னை தேர்ந்தெடுக்காதது தப்பு. அல்லது நீங்க அந்த 15 பேரை முன்னமே அறிவிக்காதது தவறு! இதான் என் முந்தைய பதிவின் சாரம்சம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்ப வாங்க! நான் இதற்கு முன்ன போட்ட பதிவுக்கு கூகிள் பஸ்ல லிங் கொடுத்தவங்க... அதுக்கு சென்ஷி போன்றவர்கள் கொடுத்த பதில்கள் அதுக்கு லைக் போட்டவங்க... அதுக்கு சரியான பதிலடி கொடுத்த மணிஜி போன்றவர்கள் எல்லாரும் வாங்க.... நான் இனி 3 நாட்கள் ஆன்லைன்ல இருப்பேன்... தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பேன்.... &lt;/div&gt;&lt;div&gt;குறிப்பு: நான் இன்னும் அந்த + எல்லாம் படிக்கலை. கேள்விப்பட்டது மாத்திரமே!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-2462189716965872089?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/2462189716965872089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/2462189716965872089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/2462189716965872089'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2012/01/blog-post.html' title='அடடே இந்த பதிவை இப்படி கூட எழுதலாம்!  ஈரோடு பதிவர் சங்கமம் - சில சங்கடங்கள்....'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4234246368280327645</id><published>2011-12-31T15:52:00.002+05:30</published><updated>2011-12-31T16:17:17.931+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.... சில சங்கடங்கள்!</title><content type='html'>அடடே! போனோம் வந்தோம் என இல்லை அது. அங்க போன  பின்ன தான் தெரிஞ்சுது சிலரை கூப்பிட்டு முக்கை அறுத்தது எல்லாம்.  என்னவோ சி பி செந்தில் குமார் ஒரு பதிவு எழுதின பின்ன தான் "டபார்"ம்மு எல்லாம் முழிச்சுகிட்டாங்கன்னு சொல்வது தப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இது முழுக்க முழுக்க ஈரோடு கதிர் மற்றும் பரிசல் ஆகியோர் சார்ந்த ஒரு அரசியல். இது என் அவதானிப்பு. கதிர் சொல்லலாம்.. அந்த மண்டபம் அடுத்த நாள் புக்குடுன்னு. இல்லை சத்தியமாக இல்லை. இல்லவே இல்லை. எங்க ஊர்ல ஒரு "ரோட்டரி பாஸ்கர்"ன்னு இருக்கான். அது போல ஊருக்கு ஒரு ரோட்டரி பாஸ்கர். அது தான் "லயன்ஸ் கதிர்".&lt;br /&gt;&lt;br /&gt;யோவ்!உம்ம எழவுக்காக சிறந்த பதிவர்கள்ன்னு என்னா மயிறுக்கு நீர் கொடுக்கனும். கூடினோமா கொண்டாடினோமான்னு இருக்கனும். அதை விடுத்து... உனாதானா... அடீங்... கிரியேட்டிவிட்டின்னா  என்னா தெரியுமா உமக்கு? காபி பேஸ்ட்க்கு நீ அடிமைன்னா உலகம் முழுக்க அதுக்கா அடிமை. நீர் நியாயமா பரிசு கொடுக்கனும்னா ஜூவில அந்த கட்டுரை எழுதின எங்க ஊர் மாயவரத்தானுக்கு  கொடுக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அதை விடும். சீனாதானாவுகு எதுக்கு கொடுத்தீர்? அவரு ரத்த தானம் செஞ்ச விஷயம் நல்லது. அப்படி பார்த்தா கூட என் பொண்டாட்டிக்கு தானே முதல்ல குடுக்கனும். நாங்க என்ன படம் போட்டு காமிக்கிறோமா?  "ராமசாமி இன்று  விடை பெறுகின்றார். குப்புசாமி இன்று ஆரம்பிக்கிறார்" என கருத்தாழமிக்க பதிவுகள் போடும் அவருக்கு கொடுத்து தருமி சாருக்கு கொடுக்கலைன்னா என்னா அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;படிக்க தெரிந்த  நாள் முதலாக வாசிப்பு அனுபவம் உள்ள வடகரை வேலன் அண்ணாச்சிக்கு கொடுத்து இருக்கலாம். சரிய்யா மூத்த பதிவர்ன்னா செந்தழல்ரவிக்கு கொடுத்து இருக்கலாம். பாலபாரதிக்கு கொடுக்கும் போது வாங்கும் அவருக்கே வெட்கமில்லை. கொடுக்கும் உங்களுக்கு என்ன வெட்கம் வந்து தொலைக்க போகுது? நான் ஓப்பனா கேட்கிறேன்.. பாலபாரதி "இனிமேலாவது எழுதி தொலையும்" என சொல்லி உள்குத்தோடு கொடுக்கப்பட்ட விருதா அது? சென்ஷிக்கு கொடுத்து தொலைக்கலாம். அவன் ஆரம்ப கால பதிவுகள் பார்த்த ஜெயமோகன் கூட அவனை தீண்டதகாதவன் பட்டியலில் போடுவார். ஆனால் "வாசிப்பனுபவம்" என்ற போர்வை காரணமாக அவனுக்கு கூட கொடுத்து தொலையலாம். ஆனா சீனாவுக்கு கொடுத்து யுவகிருஷ்ணா, அதிஷாவை எல்லாம் கேவலப்படுத்தியது "லயன்ஸ் கதிர்" வேலை தான் என அப்பட்டமாக தெரியும் போது இதை என்னால் எழுதமல் இருக்க முடியலை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே "பேஸ்புக்ல, கூகிள் பஸ்ல என சொல்லுவானுங்க. இல்லை அதல்லாம் ச்சும்மா.அப்படி பார்த்தா விந்தை மனிதன் ராஜாராமனுக்கும், மணீஜிக்கும்  கொடுக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தையும் விடும்யா! சீனாதானா... முடியலை... அவருக்கு என்ன தகுதி இருக்குன்னு ஒரு பட்டியல் போடுங்க பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்சென்ஸ் பெல்லோஸ்.....&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல கதிர்கிட்டே இருந்து அதை புடுங்க பாருங்க. பின்ன என்னை பின்னூட்டத்திலே புடுங்கலாம்.... ச்சே நான்சென்ஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-4234246368280327645?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/4234246368280327645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/12/blog-post_31.html#comment-form' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/4234246368280327645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/4234246368280327645'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/12/blog-post_31.html' title='ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.... சில சங்கடங்கள்!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4309587912009343379</id><published>2011-12-21T14:39:00.002+05:30</published><updated>2011-12-21T14:51:24.585+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈரோடு சங்கமம்'/><title type='text'>"அடடே! நீங்க தானே அபிஅப்பா!!!" - ஈரோடு சங்கமம் தொகுப்புகள்!</title><content type='html'>&lt;div&gt;ஈரோடு சங்கமம் நிகழ்சிக்கு போய் வந்ததை பற்றி அழகாக எழுத வேண்டும் என நினைத்தேன். எது எழுதுவதென்றாலும் எனக்கு எப்போதும் தயக்கம் இருந்ததில்லை. ஆனால் சங்கமம் நிகழ்வு ..... கொஞ்சம் யோசித்து தான் எழுத வேண்டும் எதை எழுதினாலும். ஏனனில் அங்கே கலந்து கொண்டது ஒரு 200 எழுத்தாளர்களுக்கும் மேலான ஒரு சங்கமம். மிகச்சமீபத்தில் ஒரே இடத்தில் இத்தனை எழுத்தாளர்கள் (அஃப்கோர்ஸ் இணையத்தில் எழுதினாலும் எழுத்தாளர்கள் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுத்தாளர்கள் என எழுதிவிட்டேன் நண்பர்களே) ஒருசேர கூடிய ஒரு மாபெரும் கூட்டம் அது. திரும்பிய பக்கம் எல்லாம் ஜாம்பவான்கள். எப்போதுமே என்னுடன் கூட இருக்கும் கூச்சத்துடன் கடைசி வரிசையில் இடம் தேட கிட்ட தட்ட எல்லோருமே துணைக்கு கூச்சத்தை கொண்டு வந்திருந்தனர். அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி அருகே போய் அமர்ந்து அமைதியாக விழாவினை கவனிக்க ஆரம்பித்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் அருகே லக்கி, அதிஷா (அது என்னப்பா லக்கின்னு எழுதினா அதிஷாவும் தானா டைப் ஆகுது) ஜாக்கி, மணிஜி, கே ஆர் பி செந்தில், உனாதானா, ஜீவ்ஸ், பிலாசபி பிரபாகரன், என எல்லோரும் அமர அழகாய் விழா தொடங்கியது. நாம இப்ப இங்க கட் பண்றோம். மாயவரத்தை காட்டுறோம்.&lt;/div&gt;&lt;div&gt;=================================================================&lt;/div&gt;&lt;div&gt;ஊகூம் இதல்லாம் சரிபட்டு வராதுடா அபிஅப்பா... ஒரே இழுவையா இருக்கு. எல்லாரும் பதிவு போட்டு முடிஞ்சாச்சு. நடையை மாத்து......&lt;/div&gt;&lt;div&gt;=================================================================&lt;/div&gt;&lt;div&gt; விந்தைமனிதன் ராஜாராம், அவரது தம்பி ஆகியோர் வெள்ளுடை வேந்தராகவும், அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி பட்டுவேட்டி மைனராகவும் (வார்த்தை உபயம் மணிஜி) வந்திருந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மலர்வனம் லெஷ்மி அவர்கள்   தல பாலபாரதியையும் இண்டக்ஷன் ஸ்டவ்வையும் அழைத்துக்கொண்டும் கூடவே கனிவமுதனை தூக்கிக்கொண்டும் வந்திருந்தாங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கனிவமுதனை ஐந்து நிமிடம் ஒரே இடத்தில் ஐந்து நிமிடம் சமாளிச்சு உட்கார வச்சா ஆயிரம் ரூபாய் பரிசு என தல அறிவிப்பு செய்தும் உயிரை கொடுத்து ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஆசை யாருக்கும் இல்லாமையால்  நைசாக கழண்டு கொண்டனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அரவிந்தன், தருமி சார்,ஜீவ்ஸ், வானம்பாடிகள் வாசு அண்ணன், சி பி செந்தில்குமார், பிலாசபி போன்றவர்களை முதல் முதலாக நான் பார்த்தேன் எனினும் என்னவோ பலகாலமாக பழகியது போல கூகிள் பஸ், +ல் விட்ட இடத்தில் இருந்தே பேச்சை தொடங்கிக்கொண்டோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்து அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது எனினும் வானம்பாடிகள் வாசு அண்ணன் போன்றவர்களை பின் பக்கத்தில் இருந்தே பார்த்து பலரும் அடையாளம் கண்டு கொண்டது கூகிள் பஸ்ஸின் தாக்கம் பரவலாக இந்திருப்பதை உணரச்செய்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விருது கொடுக்கும் முன்னம் விருது வாங்குபவர்கள் பற்றிய தொகுப்பை மேடையில் சொல்லிகொண்டு இருக்கும் போது "... இவர் +2 பொதுத்தேர்வில் தோல்வி கண்டவராயினும்.." என சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் "லக்கி லக்கி என ஆர்பரித்ததை அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் பார்த்திருப்பாரேயானால் "கிரேஸ் மார்க் போட்டாவது பாஸ் பண்ணி தொலைச்சி இருக்கலாம்" என நொந்து போயிருப்பார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"உங்களைப்பற்றிய பெருமைகளை எழுதித்தாருங்கள்" என விருது குழுவினர் லக்கியிடம் கேட்ட போது "+2 பெயில் என்பதை தவிர வேறு என்ன பெருமை என நான் தான் எழுதி கொடுத்தேன்" என சொன்ன போது "ங்கொயால"ன்னு யாரோ திட்டினாங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"இவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா..." என மேடையில் சொன்ன போதே கே ஆர் பி செந்திலை மேடைக்கு தள்ளி விட்டோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; அடுத்த பிட்டு பட போட்டிக்காக ,ஜீவ்ஸ் தன்னைப்போலவே முழ நீட்டு கேமிராவை வைத்துக்கொண்டு இருந்த இன்னும் ஏழெட்டு பேரிடம்முழு நிலவை எப்படி படம் எடுப்பது என  பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். வானம்பாடிகள் வாசு அண்ணன் "இதோ வந்துட்டேன்" என யாரிடமோ சொல்லிவிட்டு முன்பக்கம் வேகமாக சென்ற பின் அந்த பாடம் பாதியிலேயே நின்றுவிட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதிஷா மதுஒழிப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கண்டு திருந்தவும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கூட்ட அரங்கினில் உள்ளே நுழையும் முன்னே ஆளுக்கு ஒரு "பேட்ச்" கொடுத்து அதிலே அவங்க அவங்க புனைப்பெயரை எழுதி மாட்டிக்க சொன்னாங்க. மணிஜி "எனக்கு ஒரு ஐந்து பேட்ச் கொடுங்க" என கேட்க "ஒன்னு போதும் மணிஜி வாங்க" என விந்தைமனிதன் அவசரமாக இழுத்துக்கொண்டு உள்ளே போனார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என் கூட வந்த ஒரு புது பதிவர் தன் பேட்ஜில் "மயிலாடுதுறை புலி" என தன் புனைப்பெயரை எழுதி வைத்திருக்க அதை பார்த்த எல்லோரும் டீஃபால்டாக கேட்ட ஒரு கேள்வி அந்த புதுபதிவரை "இனியும் வலைப்பூ எழுதவேண்டுமா?" என யோசிக்க வைத்தது.:-)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோவைப்பதிவர் விஜியும், கோபியும் இலக்கியம் பேசியே ஆகவேண்டும் என ஒரே அடம். பாவம் சித்தூர் தமிழரசி தான். அனேகமாக 19ம் தேதி இலக்கியத்துக்கு பால் முடிந்திருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;டாக்டர் ரோகினி: பல் பற்றிய ஒரு அவேர்னஸ் பஸ்ஸில் "நீங்கள் கடைசியாக பிரஷ் மாற்றியது எப்போது?" என கேட்க நான் "மூன்று நாட்களுக்கு முன்பாக. என் மனைவி பிரஷ் கலரும் என் பிரஷ் கலரும் ஒரே கலர் என்பதால் அந்த தப்பு நடந்து போச்சு" என பின்னூட்டமிட்டேன். அப்போது "உங்க கிட்டே இனி பல் பத்தி பேசவே மாட்டேன்" என சொல்லிட்டாங்க. என்னை ஈரோடு சங்கமம் நிகழ்வில் பார்த்ததும் அது நியாபகம் வந்து தொலைத்திருக்கும் போலிருக்கு அவங்களுக்கு. அதனால் பல் பற்றி எதும் பேசக்கூடாது என இருந்து விட்டார்கள். ஆனாலும் பாருங்க விதி வலியது. மேடையில் ஒரு பெண் பொதிகையிலே செய்தி வாசிக்கும் பெண் பேசிக்கொண்டு இருந்தது. நான் டாக்டர் ரோகினியிடம் கொஞ்சம் ஜாலியாக  சொன்னேன். "சரியான வாயாடி போல" என. அதற்கு டாக்டர் "வாயாடலாம் தப்பில்லை. பல்லாடக்கூடாது" என சொல்லி என் கிட்டே மாட்டிகிட்டாங்க.# தொழில் பக்தி!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலையில் மண்டபம் உள்ளே நுழைந்ததும் காலை உணவை சாப்பிட்டு கொண்டு இருந்தாங்க தேனம்மை அவர்களும் லெஷ்மனன் அவர்களும். நான் "நீங்க தானே தேனம்மை" என கேட்டேன். பதிலுக்கு அவங்க "ஆமாம். நீங்க அபிஅப்பா தானே, நான் உங்க பதிவை எல்லாம் படிச்சுருக்கேன். நாம் மட்டும் அல்ல. எங்க வீட்டிலே எல்லாரும் படிச்சு இருக்காங்க. ஒரு ஆட்டோகிராப் போடுங்களேன்" என சொல்வாங்கன்னு  இதை படிக்கும் நீங்க யாராவது நினைச்சா.... சாரி ... நீங்க இன்னும் வளரனும். அவங்க "ஆமா நான் தான் தேனம்மை. நீங்க யாரு?"ன்னு கேட்டாங்க.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தோனி முடியை தடவிப்பார்த்த முஷரப்பு போல கிட்டத்தட்ட பிரபா ஒயின் ஷாப் ஓனர் பிலாசபி பிரபாகரன் முடியை தடவிப்பார்த்தனர். பையன் ஒரு 22 அல்லது 23 வயசு இருக்கும். ஆனால் என்றும் பதினாறு மார்தான்டேயன் மாதிரி இருந்தான் பையன். ஆனா அவனுக்குள் பல பதிவர்கள் ஒழிஞ்சு இருப்பதை கண்டு எல்லோரும் வியந்தோம். நைஸ் பாய்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் முதல் நாள் அரங்கினில் நுழையும் போதே ஈரோடு கதிரும், தாமோதரன் சந்துருவும் வரவேற்கும் போது தாமோதர் சந்துரு "நான் உங்களை ஃபாலோ பண்றேன்" என சொன்ன போது "வாழ்வியலிலா" என மனதில் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். என்னவோ மனசைப்படிச்ச மாதிரி அவசரமாக "ஃபேஸ்புக்கிலேங்க" என சொன்னார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"நீங்க தான் வானம்பாடிகள் வாசு சாரா" என கேட்டு தன் அருகில் வரும் பதிவர்களுக்கு அவர்களின் அடுத்த கேள்வியாக தன் பதிவுகளை பத்தி தான் கேட்பாங்க என நினைத்து பதில் சொல்ல எத்தனிக்க " சார் ஈரோட்டிலே இருந்து சென்னை போக எத்தனை மணிக்கு நல்ல ரயில் இருக்கு" என்ற வகையிலான கேள்விகளை கேட்க மனுஷன் முதன் முதலாக இரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். அதில் ஹைலைட் என்னான்னா  ஒருத்தர் வந்து "நான் இதே ஈரோடு தான். இந்த பழைய பாளையத்தில் இருந்து பஸ்டாண்டு போக எதுனா ரயில் இருக்கா" என கேட்டது தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாரோ ஒருவர் கேபிள் சங்கருக்கு போன் போட்டு "யோவ் எதுக்கிட்டே இருக்க? நீ பங்கஷனுக்கு வர்ர தானே?" என கேட்டார். கொழுப்பு... தட்ஸ் ஆல்... அனேகமாக ஈரோடு கதிருக்கும் இதே போல சென்னையில் இருந்து போன் வந்திருக்கலாம். யார் கண்டது?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விருது பெற்றவர்கள் நன்றி சொல்லும் போது தல பாலபாரதி சொன்ன டீச்சர் கதை, ஊக்குவித்தல் பற்றிய கதைக்கு எல்லோரும் கைதட்டும் போது மலர்வனம் லெஷ்மி கண்ணிலே மட்டும் கண்ணீர். ஆமாம் அப்போது தான் கனிவமுதன் லெஷ்மி காதை கடித்துவிட்டிருந்தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சாப்பாடு: பொதுவாக நான்- வெஜ் சாப்பாடுன்னா ஒரு பிரியானி, சிக்கன், மட்டன் இப்படி தான் இருக்கும். ஆனா இந்த சாப்பாடு வீட்டில் சமைப்பது போல நீர்த்த மட்டன் எலும்பு குழம்பு என ஆரம்பித்து நீண்ட பட்டியலாக இருந்தது. நான் கொஞ்சமும் கூச்சப்படாமல் வீட்டில் சாப்பிடுவது போல அனைத்து விரல் கொண்டும் பிசைந்து உருட்டி அடித்தேன். பாவம் எதிரே ஒரு பெண்... சபை மரியாதை நிமித்தமாக மூன்று விரல் கொண்டு நாசுக்காக சிரமப்பட்டது. அந்த புள்ளய்க்கு ஒரு எடுப்பு சாப்பாடு கேரியர்ல கட்டி கொடுத்தா  நடு ஹால்ல சம்மனம் போட்டு உட்காந்து ஈரோடு சங்கமம் நீடூடி வாழ்கன்னு சொல்லிகிட்டு முழங்கை வரை நக்கி அருமையா சாப்பிட்டு இருக்கும்:-)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டு இருந்த போது ஒரு ஆகிருதியான நண்பர் வந்து மணிஜியிடம் "நீங்க தானே மணிஜி"  என கேட்ட போது தாடியை தாண்டி மணிஜிக்கு வெட்கம் வழிந்தது. இருங்க வாசகர்களே, இந்த கூட்டம் முடிந்து நான் வீட்டுக்கு போய் சேரும் முன்னே யாராவது "நீங்க தானே அபிஅப்பா" என கேட்பாங்க. நானும் எழுதி பெருமைப்படத்தான் போறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வால்பையன்... ஒரு வெளிப்படையான மனுஷன். ஐ லைக் ஹிம். படபடன்னு பேச்சு. மனதில் நினைப்பதை படார்ன்னு பேசும் ஒரு குணம். ஐ லைக் ஹிம். மழைக்குழந்தைகள் நலமான்னு கேட்டேன். ரொம்ப நலம். நல்லா வாயாடுறாங்க பசங்கன்னு சொன்னார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சங்கவி: ஈரோட்டில் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நன்றாக கவனித்து கொண்டார் என கிட்ட தட்ட 250 பதிவர்களும் எழுதும் படியாக எல்லா இடத்திலும் வியாபித்து இருந்தார். என்ன ஒரு கனிவான கவனிப்பு. அருள்பாலிக்கும் முகம். பல பேர் வீட்டுக்கு வந்து ASL டைப் அடித்த காரணத்தால் விரலை நசுக்கியிருப்பர்:-) அதே போல பாலாசி... ஒரு கூட்ட ஒருங்கிணைப்புன்னா அதை ஈரோடு சங்கமம் குழுவினர் கிட்டே தான் கத்துக்கனும்யா...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தருமி சார்.... ஜிப்பா, கண்ணாடி எல்லாம் போட்டுகிட்டு ஜம்முன்னு வந்திருந்தார். பக்கத்தில் இருந்த பிரபல பதிவர் ஒருத்தர் கிட்டே "இது யார் தெரியுதா" என கேட்டேன். "ம்.. தெரியுமே சிங்கை மணற்கேணி விருது வாங்க போன போது என்னவோ குனிஞ்சு பார்த்து கிட்டு இருந்தாதே... தெரியாதா பின்ன"ன்னு சொன்னாரு. அட மகாபாவிங்களா, அவரு எத்தனை நல்ல பதிவு எழுதியிருக்காரு. அது எல்லாம் ஞாபகம் இல்லையாம். இது மாத்திரம் ஞாபகம் இருக்குதான். கெட்ட உலகமடா சாமீ:-)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மிகுந்த நன்றியோடு இரவு ஒரு மணி மைசூர் எக்ஸ்பிரஸ் பிடிச்சு மாயவரம் பயணமானோம். விந்தையும் அவர் தம்பியும் ஜங்சனில் இருந்து திருத்துரைப்பூண்டி நோக்கி பயணமாக நான் வீட்டுக்கு காலை 7 மணிக்கு வந்தேன். வாசலில் ஒரு பெண் நின்று கொண்டு காலிங் பெல் அடித்து கொண்டிருந்தாங்க. என்னைப்பார்த்ததும் "அடடே, நீங்க தான அபிஅப்பா" என கேட்டாங்க. ஜென்மசாபல்யம் ஆச்சுது. ஈரோட்டில் இருந்து துரத்தி வந்த ரசிகை போலிருக்கு!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;"ஆமாங்க நான் தான். என் பதிவு எல்லாம் படிச்சு இருக்கீங்களா? ரொம்ப நன்றிங்க" என சொன்ன போது அவங்க "ங்ஏ" ஆகி "என் பொண்ணு அபிகூட படிக்கிறா. அவ நோட்ஸ் காணாம போயிடுச்சு. அதான் அபிகிட்டே வாங்கிட்டு போகலாம்ன்னு வந்தேங்க"&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் இன்னும் வளரனும் தம்பி!!!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-4309587912009343379?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/4309587912009343379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/12/blog-post_21.html#comment-form' title='47 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/4309587912009343379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/4309587912009343379'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/12/blog-post_21.html' title='&quot;அடடே! நீங்க தானே அபிஅப்பா!!!&quot; - ஈரோடு சங்கமம் தொகுப்புகள்!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>47</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-7148954071911134240</id><published>2011-12-01T15:39:00.001+05:30</published><updated>2011-12-01T15:43:20.629+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூவர் தூக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச்சீமான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல் காமடி'/><title type='text'>கனிமொழி விடுதலையை நாங்கள் பார்த்து கொண்டோம்! மூவரின் விடுதலை என்ன ஆனது ச்ச்சீ'மானே?</title><content type='html'>&lt;div&gt;ராஜீவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை எதிர்நோக்கியிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் கண்டிப்பாக  தூக்கில்  தொங்க வேண்டும் என்பதில் சீமான் ஆசைப்படுவதாகவே நம்புகிறேன். ஏனனில் அந்த மூவருக்கும் 3 மாதம் முன்னதாக துக்கிலிட செய்யப்பட்ட முஸ்தீபுகளின் போது இலங்கையை சேர்ந்த முருகன் தன் உடலை சீமானிடம் கொடுக்க வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து இருந்தார். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமேயானால் சீமான் இன்னும் கொஞ்ச காலம் அந்த பிணத்தின் மீது நின்று "தமிழ், தமிழன் " என கூப்பாடு போட்டு அடிமட்ட அரசியல் செய்திருக்க முடியும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்த நேரத்தில் திமுகழகம்  "அதிமுக அரசு இந்த மூவரின் விடுதலைக்காக அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்து ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும். அப்படித்தான் நாங்கள் தியாகு, புலவர் கலியபெருமாள் ஆகியோரை காப்பாற்றினோம்" என சொன்னபோதும், திமுக தொண்டர்கள் கூட மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுத்த போதும் எங்கே தன் பிண அரசியல் இவர்களால் செல்லாக்காசாகிவிடுமோ என்று நினைத்த சீமான் "கருணாநிதியே கனிமொழியின் ஜாமீனை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள், மூவரின் விடுதலையை நாங்கள் பார்த்து கொள்கிறோம்" என கொக்கரித்தார். திமுகவின் தொண்டர்களும் "போடா வெண்ணை" என போய்விட்டனர். இதோ கனிமொழி ஜாமீனில் வெளியே கொண்டு வந்தாகிவிட்டது. நீங்கள் திமுக தொண்டர்கள் வாயை அடைக்க அப்போது போட்ட கொக்கரிப்பு என்ன ஆயிற்று? மூவரின் விடுதலைக்காக துறும்பையாவது கிள்ளிப்போட்டீங்களா? இல்லை... ஏன்? உங்கள் பிண அரசியல் அஸ்தமித்துவிடும் என்கிற மனோபாவம் தானே?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தமிழக அரசு மூவரின் விடுதலை சம்மந்தமாக  தீர்மானம் போட்ட போது அந்த தீர்மானம் ஒன்றும் அவர்களை காப்பாற்றிவிட முடியாது என தெரிந்து  "ஆகா ஓகோ" என சீமான் வகையறாக்கள் கூப்பாடு போட்டு பாராட்டு விழாவும் நடத்தின. ஆனால் அதே வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்த போது தமிழக அரசு "அந்த மூவரையும் தூக்கிலிட எந்த வித ஆட்சேபனையும் இல்லை, தீர்மானம் போட்டதெல்லாம் ஊலூலூலாய்க்கு" என சொல்லிவிட சீமான் கோஷ்டியினர் சீமான் வாயில் இருந்து உதிரும் முத்துகளுக்காக ஏங்கிய போது வாய்திறந்தார். என்னவென்று... தமிழகம் தழுவிய ......தமிழகம் தழுவிய ......தமிழகம் தழுவிய......... கோலப்போட்டி நடத்தப்படும் " என்று. இதை படிக்கும் நண்பர்கள் உடனே ஆவலாய் கேட்க இருக்கும் கேள்வி... ஏன் கலைஞர் அதை செய்து அந்த மூவரையும் விடுதலை செய்திருக்க கூடாது என்பதற்கு சக வலைப்பதிவர் நண்பர் யுவகிருஷ்ணா அழகான பதில் சொன்ன பின்னர் நான் அதை தாண்டி அழகாய் சொல்லிவிட ஏதும் இல்லை என்கிற காரணத்தால் அதையே கொடுக்கின்றேன் பதிலாக. \\ சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய நான்கு பேர் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டதோ, அதே குற்றம்தான் கலைஞர் மீதும் ஜெயின் கமிஷனால் சாட்டப்பட்டது. என்ன சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட முடியவில்லை என்பதுதான் வித்தியாசம். 91, மே 21 சம்பவத்தால் அதிகம் இழந்த இயக்கம் திமுகவே. இது வரலாறு. எவனாலும் மாற்றி எழுதிவிட முடியாது. “இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. விடுதலைப்புலிகளே காரணம்” என்று எந்த இக்கட்டான சூழலிலும் காட்டிக் கொடுக்காத நேர்மை கலைஞருக்கு இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு ஆயுள்தண்டனையாக தண்டனையை குறைத்தவர் கலைஞர். அவரே ஏற்கனவே சொன்னபடி, அவரால் எந்த நேரத்துக்கு எது முடியுமோ, அதை மட்டும்தான் செய்யமுடியும். கலைஞர் சூப்பர்மேனோ, கடவுளோ அல்ல. அவ்வாறு இருந்திருந்தால் அவரது மகள் 192 நாட்கள் திகார் சிறையில் வாட விட்டிருக்க மாட்டார் \\ இதுதான் உங்கள் ஆர்வ கேள்விக்கு பதில். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அய்யோ தவறான வழிகாட்டுதலில் நாம் நம் சக்தியை விரயமாக்கிவிட்டோமோ என நினைத்த நாம்தமிழர் இயக்க தொண்டர்கள் மெல்ல மெல்ல விலக தொடங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் சீமானோ  இண்ஸ்டண்ட் ஈழத்தாய் ஜெயாவின் அடாவடித்தனத்தை பற்றியோ,  ஈழம் பற்றி பேசினால் நடத்தப்படும் அடக்குமுறை பற்றியோ வாயை மட்டும் அல்ல எந்த துவாரத்தையும் திறக்கவில்லை. திறந்தால் நாடுதழுவிய கோலப்போட்டி நடத்திய அவரின் நாடா  தழுவிய கேஸ் தூசி தட்டப்படும் என தெரியும் அவருக்கு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நவம்பர் மாதம் பிரபாகரன் பிறந்தநாள் "மாவீரர் தினமாக" அனுஷ்டிக்கப்படும் என சினிமா வாய்பில்லாதபோது முழங்கிய சீமான் வகையறாக்கள் இப்போது அதிமுக அரசால் அந்த விழா தடை செய்யப்பட்ட போது "நாங்கள் ஒரு கதவடைத்த திருமண மண்டபத்திலாவது நடத்தி கொள்கிறோம்" என கெஞ்ச தான் முடிந்ததே தவிர  வேறு என்ன செய்ய முடிந்தது உங்களால்?இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஈழப்போர்வை போர்த்திக்கொண்டு அரசியல் செய்ய உத்தேசம்? அவர்கள் ஏமாறும் வரையிலா? அல்லது உங்களை நம்பி ஏமாந்த மிச்ச சொச்ச தமிழ் இளைஞர்கள் உங்கள் கூட ஒட்டிக்கொண்டு இருக்கும் வரையிலா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ச்சீ தூ வெட்கம்! இனி உங்களை சீமான் என்பதற்கு பதில் ச்சீமான் என்றே அழைத்து கொள்ளுங்கள்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-7148954071911134240?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/7148954071911134240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/7148954071911134240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/7148954071911134240'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/12/blog-post.html' title='கனிமொழி விடுதலையை நாங்கள் பார்த்து கொண்டோம்! மூவரின் விடுதலை என்ன ஆனது ச்ச்சீ&apos;மானே?'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5739928759242969536</id><published>2011-10-19T22:24:00.006+05:30</published><updated>2011-10-19T22:36:41.601+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மயிலாடுதுறை  தீவிபத்து!!!</title><content type='html'>&lt;div&gt;இன்று மாலை ஒரு 6.30 இருக்கும். மயிலாடுதுறை கொத்ததெரு தம்பிக்குநல்லான் பட்டிணம் வாக்குசாவடியில் வாக்குப்பதிவு எல்லாம் முடிந்து வாக்கு இயந்திரம் சீல் எல்லாம் வைத்து விட்டு அதை சேகரித்து போகும் லாரி வருகைக்காக எல்லா கட்சியினரும் காத்து கொண்டு இருந்தோம். எப்போது வண்டி வரும் என யாருக்கும் தெரியாது. ஒரு முறை இரவு 3 மணிக்கு கூட வந்து சேகரித்து சென்றது. அது வரை எல்லா கட்சியினரும் கட்சி பேதம் இன்றி ஒன்றாக டீ சாப்பிடுவதும், எத்தனை சதவீதம் பதிவு ஆனது என்கிற இன்ன பிற விஷயங்கள் பேசிக்கொள்வதுமாக இருப்பர். அதுவும் அந்த எங்கள் வார்டு கொஞ்சம் பதட்டம் வாய்ந்த வார்டு. . திமுக நகரசெயலர் குண்டாமணி என்கிற செல்வராஜும் அதே வார்டு வேட்பாளர். அதே போல அதிமுக நகர செயலர் செந்தமிழனும் அதே வார்டு . செந்தமிழனின் சகோதரி தான் நகர்மன்ற தலைவர் வேட்பாளர் அதிமுகவுக்கு. அதனால் எல்லோருமே அங்கே நின்று கொண்டு இருந்தனர். அப்போது தான் என் தம்பி செல்லிடபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கம்பனி ஆள் தான் பேசினான். "சார், நான் பெரியகடை தெருவில் தான் இருக்கேன். இங்கே ஜனதா ஃபுட்வேர் கடையில் தீ பிடித்து விட்டது, இப்ப தான் அதில் உள்ளே இருப்பவர்கள் வெளியே ஓடி வந்து கொண்டு இருக்கிறார்கள்" என சொன்ன போது அங்கிருந்த எல்லோருக்கும் கிட்ட தட்ட அதே நேரத்தில்  அதே போல அழைப்பு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மற்ற ஊர்களை போல அல்ல மயிலாடுதுறை. மிகப்பெரிய ஊர் எல்லாம் இல்லை. ஆனால் சுற்று வட்டார டெல்டா விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே டவுன் இது தான். கடைதெரு என பார்த்தால் இரண்டே தெரு தான். ஒட்டு மொத்த நெரிசலும் அங்கே தான் இருக்கும். அதே தெருவில் தான் மாயவரத்து மகா பெரிய ஜவுளி கடைகளும், உலகப்புகழ் பெற்ற ஏ.ஆர். சி நிறுவன நகைக்கடைகளும், பெரிய மளிகை கடைகளும் , ஹோட்டல்களும், இரும்பு கடைகளும், வெடிக்கடைகளும் என கலந்து கட்டி இருக்கும். சுற்று வட்டார எல்லா மக்களும் அங்கே தான் தீபாவளி வியாபாரம் செய்ய வந்திருப்பர். அதும் இன்று  நகரத்தில் தேர்தல் நாளாகியதால் காலையில் ஓட்டு போட்டு விட்டு அரசாங்க விடுமுறையை குடும்பத்துடன் உல்லாசமாக கழித்து தீபாவளி "பர்சேஸ்" முடித்து கொண்டு போகலாம் என கடைத்தெருவே ஒரே கூட்ட நெரிசல். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எள் போட்டால் எள் எடுக்க முடியாது என்பார்களே அப்படி ஒரு கூட்டம். நான் மதியம் அந்த பக்கம் போன போதே அப்படி ஒரு கூட்டம். அதும் தீப்பிடித்ததாக சொல்லப்படும் இந்த கட்டிடம் ஜனதா செருப்புகடை ஒரு மூன்று மாடி கட்டிடம். கேரளாவில் இருந்து பிழைப்புக்காக மாயவரம் வந்த இஸ்லாமிய சமூகத்து மக்கள். ஒரு சின்ன டீக்கடை ஆரம்பித்து இன்று இந்த அளவு முன்னேறி வருபவர்கள். நல்ல உழைப்பாளிகள். அதிலே தீப்பிடித்தால் என்ன ஆகும்? வரிசையாக கடைகள். அதும் பக்கத்து பக்கத்து கடைகள் எல்லாம்... நாகோடா ஜூவல்லரி, கல்யாணி கவரிங் என கடைகள், தவிர பெரியநாயகி மளிகை என்னும் பெரிய கடை, வாசன் காபி தூள் போன்ற கடைகள். அதன் இடது பக்கமோ மிகப்பெரிய "கறார் ஜவுளி கடை" . எதிர் வரிசையில் ஏ ஆர் சி கடைகள் என வரிசையாக கடைகள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடைகள் போகட்டும், அதில் உள்ளே இருக்கும் மக்கள் கதி என்ன என்ற பதட்டம் இங்கே பூத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசியவாதிகளையும் ஆட்டிவிட, ஓட்டு பெட்டியாவது ஒன்றாவது என போட்டு விட்டு எல்லோரும் அங்கே ஓடினர். நான் வீட்டுக்கு வந்து பின்னே அங்கே போகலாம் என நினைக்கும் போதே அமரிக்காவில் இருந்து மயிலாடுதுறை சிவாவின் தொலைபேசி. அடுத்து சீமாச்சு அண்ணன், அண்ணி என வரிசையாக தொலைபேசிகள். இவர்களுக்கு எப்படி அதற்குள் தெரியும் என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே பதிவர் மயில்ராவணனிடம் இருந்து தொலைபேசி. சரியென நினைத்து கலைஞர் செய்திகள் வைத்தால் அதில் பிளாஷ் நியூஸ் என ஓடுகின்றது. அதற்குள் குடந்தையில் இருந்து என் அக்கா விடம் இருந்து தொலைபேசி. கலைஞர் செய்திகளில் "மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மூன்றடுக்கு வணிக வளாகத்தில் தீ... உள்ளிருக்கும் மக்களின் ஓலம். ஒரு தீயணைப்பு வண்டி மட்டுமே இருப்பதால் தீயை அணைக்க சிரமம்...." இப்படியாக செய்தி ஓடுகின்றது. ஆன்லைனில் முகநூலில் இருந்த தோழர் அன்சாரி "அண்ணே எத்தனை சதம் ஓட்டு பதிவு ஆகியது, என கேட்க நான் இந்த விஷயத்தை சொன்னேன், அதற்கு அவர் "அப்படியா முதலில் அங்கே போங்க. உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ  அதை செய்யுங்க" என சொன்னார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் உடனே அங்கே போன போது பெரியகடை தெரு குஜ்னி பேப்பர் மார்ட் முன்பாகவே வண்டிகள் செல்ல முடியாத அளவு கூட்டம். கடைத்தெருவில் முழுக்க முழுக்க இருட்டு. கிட்ட தட்ட ஒரு பத்தாயிரம் மக்கள் கூட்டம். தீயணைப்பு வண்டிகள் ஒரு பத்து இருக்கும். இத்தனைக்கும் காவிரி ஒரு 200 மீட்டர் தூரம் தான். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. அதனால் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. வந்த எல்லா தீயணைப்பு வாகனத்திலும் போதுமான அளவு தண்ணீர் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் எந்த வண்டியும் உள்ளே செல்ல முடியா வண்ணம் பாழாய்ப்போன பார்வையாளர்கள். க்யூரியாசிட்டியின் உச்சம். எப்படி எரிகின்றது என பார்க்கும் ஆர்வமும், அதை தன் செல்போனில் படம் பிடித்து அதை நண்பர்களிடம் காட்டி மகிழ அல்லது ஏதோ ஒன்று.. பகிர்ந்துக்கனும் என்கிற ஆர்வம் தான் அதிகமாக தெரிந்தது. அந்த ஜனதா செருப்பு கடை முழுக்க எரிந்து போயிருந்தது. அதன் மேல் மாடி தகதகவென எரிந்து கொண்டிருக்க அதன் மேல்மாடியில் பற்றிய தீ வடக்கே (காவிரி இருக்கும் திசையில்) பரவி அதே தெருவின் முனையில் பெரியகடைதெரு அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி வரை வந்து விட்டது. அந்த அர்சனா வில் இருந்து நான்காவது கடையில் இருந்து வரிசையாக வெடிக்கடைகள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்கள் கூட்டம் அதிகம். தீபாவளி பர்சேஸ்க்காக வந்த மக்கள் அலறி ஓடிவிட, வேடிக்கை பார்க்க வந்த மக்கள் தான் மிக அதிக தொல்லை கொடுத்து கொண்டு இருந்தனர். "மேன் லிஃப்டர்" வாகனம் எதும் உள்ளே நுழைய முடியவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி தெருவிளக்கு போட பயன்படுத்தும் "மேன்லிஃப்டர்" வாகனம் அந்த எரியும் கடை முன்னே முதலிலேயே வந்தது கூட்டத்தின் உள்ளே மாட்டிக்கொண்டு நிற்க வந்த தீயணைப்பு வீரர்கள் அதிலே ஏறி அந்த கட்டிடத்தினை நெருங்கும் போது கூட்டம் விசில் அடித்தும் ஆரவாரித்தும் செய்த கூத்துகள் மகா அசிங்கம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு கட்டத்தில் திமுகவின் நகரசெயலர் குண்டாமணி, அதிமுக செந்தமிழன் ஆகியோர் கூட்டத்தினரை வேட்டியை மடித்து கட்டி கொண்டு ஒரு பெரிய கம்பை எடுத்து கொண்டு தள்ளி வழி ஏற்படுத்தி கொடுக்க ஒரு நான்கு தீயணைப்பு வாகனம் உள்ளே வந்தது. இத்தனைக்கும் எரியும் கடையின் லெதர் பொருட்கள் ஒருவித துர்நாற்ற புகையை கக்க சிலருக்கு மூச்சு முட்டி மயக்கம் வந்தது. பீய்ச்சி அடித்த தண்ணீரால் சாலைகள் ஒரு சாண் அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனாலும் அதை எல்லாம் யாரும் பொருட்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமெ குறியாக இருந்து தொலைத்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது ஓ.எஸ் மணியன்  அதிமுக எம் பி  வர அவர் பின்னால் ஒரு ஐம்பது பேர் வர ஒரு பாழாய் போனவன் வாழ்க கோஷம் போட அவர் அவனை "புட்ரா அவனை புட்ரா" என திட்ட அவன் ஓடிப்போக அவர் தன் கூட வந்தவர்களை வர வேண்டாம் என சொல்லிவிட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டு செந்தமிழன், குண்டாமணி ஆகியோர் இருந்த இடத்துக்கு  போய்கொண்டே தன் செல்லிட பேசியால் யாருக்கோ பேசிக்கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில்  அங்கே  ஒரு சுழல் விளக்கு காரில் டவாலி வர கூடவே நாகை ஆட்சியரும் வந்தார். அதற்குள் தேமுதிக எம் எல் ஏ பால அருள்செல்வன், பாஜகவின் நாஞ்சில்பாலு, திமுகவின் எஸ்கொயர் சாதிக், வர்தகர் சங்க பாண்டு, சீமாட்டி பாய் எல்லோரும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக கூட்டத்தை ஒழுங்கு செய்ய அதற்குள் அர்ச்சனா ஹோட்டல் மேல் மாடி பெரும் சத்தத்துடன் கொழுத்து விட்டு எரிய தொடங்கியது. அதற்குள் ஒரு நான்கு தீ வண்டிகள், எரிந்து கொண்டிருக்கும் கடைகளை விடுத்து எரியாத கடைகள் மேல் சுத்தமாக தண்ணீர் ஊற்றி நனைத்து விட்டது. அதனால் தீ பரவுவது முதலில் தடுக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர் தன் உயிரை பணயம் வைத்து இரு வீரர்கள் ஒரு வழியாக அந்த ஜனதா செருப்புகடை மாடிக்கு தாவி ஏறி (அதற்கு முன்னதாக தன்னை தானே தண்ணீரால் நனைத்து கொண்டனர்) நெருப்பை அணைக்க, அது வரை  தீயின் வெளிச்சத்தில் எரியும் இடமாவது தெரிந்து கொண்டிருந்தது போய் கும்மிருட்டில் ஒரே புகை மண்டலம் ஆகியது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதற்குள், ஓ எஸ் மணியன் போனில் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து தீ வண்டி வரவழைத்து விட , ஆட்சியர் வந்தவுடன் முதல் வேலையாக அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொன்னார். (நான்கு நாட்கள் பின்னர் மாலை 5 மணிக்கு தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது) பின்னர் காவிரியில் இருந்து எரியும் இடம் வரை அந்த தீ வண்டிகள் சகஜமாக போய் வரும் அளவு வசதியாக "பார்வையாளர்கள்" எவனும் இருக்காதபடி வழி ஏற்படுத்தி கொடுக்க திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, காங்கிரஸ் எல்லாம் கை கோர்த்து யாரையும் விடாமல் நிற்க, பின்னர் தான் தீயணைப்பு வீரர்கள் அங்கே பம்பரமாக சுழண்டு சுழண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நான் மெல்ல வெளியேறி வீட்டுக்கு வந்தேன். மணி இப்போது பத்து. ஆனால் இன்னனும் தீ நின்ற பாடில்லை. ஆனால் உயிரிழப்பு இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நிம்மதி. (திமுக குண்டாமணிக்கு சட்டையே காணும், அது போல எப்போதும் ஜவுளிக்கடை பொம்மை போல அசங்காமல் மொட மொட வெள்ளையில் உலாவரும் செந்தமிழன் மடித்து கட்டிய வேட்டியும் கசங்கிய கரிபிடித்த சட்டையுமாகவும், தேமுதிக அருள்செல்வம் எம் எல் ஏ அலங்கோலமாகவும், நாஞ்சில் பாலு கரிபடிந்த முகத்தோடும், கைகோர்த்து நிற்க....ஒரு இயற்கை பேரிடர் வந்தால் தான் நாங்கள் ஒற்றுமையாக இருந்து தொலைவோம் என நீங்கள் சொன்னால் எத்தனை பேரிடர்களையும் நாங்கள் தாங்குவோம் என நினைத்து கொண்டே வந்து சேர்ந்தேன். என்னைப்போலவே எல்லா மயிலாடுதுறையானும் நினைத்திருப்பான்  அதை காணும் போது என்றே நினைக்கிறேன்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-5739928759242969536?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/5739928759242969536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/10/blog-post_19.html#comment-form' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/5739928759242969536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/5739928759242969536'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/10/blog-post_19.html' title='மயிலாடுதுறை  தீவிபத்து!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-4440399972338453484</id><published>2011-10-09T20:45:00.003+05:30</published><updated>2011-10-09T20:52:38.637+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜின்னா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பன்னிரு  விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் !!!</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்று காலை  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் திமுக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரும் , தளபதி அவர்களின் உற்ற தோழருமான தோழர் திரு ஹசன் முகமது ஜின்னா என்னை தொலைபேசியில்  தொடர்பு கொண்டார். அவர் கூறிய அந்த வார்தைகளை நான் கேட்க கேட்க மகிழ்வின் உச்சத்துகே சென்றேன். அவர் சொன்னது இது தான். "நேற்று தலைவர் கலைஞர் அவர்களை அறிவலயத்தில் சந்தித்த போது முகநூலில் நீங்கள் எல்லோரும் எழுதியதை நகல் எடுத்து கொடுத்தேன். உங்கள் பதிவுகளை எல்லாம் தலைவர் படித்தார்.... என மேலும் மேலும் சொல்ல எனக்கு அதற்கு மேல் காதில் எதும் விழவில்லை. உடனே என் அம்மாவிடம் போனை கொடுத்தேன். அம்மாவிடமும் திரு.ஜின்னா அவர்கள் விஷயத்தை சொன்ன போது 'அந்த மவராசன் என் பையன் எழுதியதை படிச்சாராப்பா"  என நா தழுதழுக்க நான் உணர்சிக்குவியலாய் இருந்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர் ஒரு அரைமணி நேரம் கழித்து அவரே எனக்கு தொலைபேசி "நான் நடந்ததை அப்படியே என் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கேன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அங்கே இட்டுள்ளேன்" என கூறினார். அவரது முகநுலில் எழுதியதை இங்கே தருகின்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;=================================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நேற்று இரவு தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தேன், தினத்தோறும் தலைவர் கலைஞர் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் அவரை புதிதாக பார்க்கின்ற அனுபவத்தையே தலைவர் கலைஞர் ஒவ்வொருமுறையும் ஏற்படுத்துவார். என்னை குழந்தையாய் கையில் எடுத்து கொஞ்சியிருக்கிறார். சிறு வயது முதல் அவரை நான் பார்த்துவந்தாலும் என்றும் எனக்கு அவர் பிரமிப்புதான்.&lt;/div&gt;&lt;div&gt;தலைவர் கலைஞர் அவர்கள் அறைக்கு உள்ளெ சென்றவுடன் “என்ன? என்று பாசத்துடன் ஒரு வார்த்தை கேட்டார். ஃபேஸ்புக்கில் தலைவர் அவர்களை பற்றி இணையத்தினர் எழுதியுள்ள கருத்துகளை கொண்டுவந்திருக்கிறேன் எனச் சொல்லி கையிலிருந்த ப்ரிண்ட் அவுட்களை தலைவர் கையில் கொடுத்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;அறிவாலயத்திலிருந்து கிளம்புகின்ற அலர்ட் பி,எஸ்.ஓ கொடுத்துவிட்டதால் தலைவர் கையில் வாங்கி வீட்டில் போய் படிப்பார் என்று நினைத்தேன். கார் தயாராக நிற்கிறது. எல்லோரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். தலைவர் கையில் வாங்கியதை அப்படியே வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்றில்லாமல் அங்கேயே பிரித்து படிக்கத்தொடங்கினார். அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும் அருகிலிருந்து விளக்கினார். டி.கே.எஸ் அவர்களிடம் தலைவர் படிப்பதை அப்படியே வீடியோ எடுங்கள் ஃபேஸ்புக்கில் போடுவோம் , நண்பர்கள் மகிழ்வார்கள் என்று சொன்னவுடன் அவருடன் அதனை உடனே படம்பிடித்தார்.&lt;/div&gt;&lt;div&gt;இரண்டுபக்கம் தாண்டியவுடன் தலைவர் நிமிர்ந்து இனாமுல் யார் என்று கேட்டார். கழகத் தோழர் , தொடர்ந்து கழகத்திற்காக எழுதிக்கொண்டிருப்பவர் என்று சொன்னேன். தொல்காப்பியன் பக்கம் வந்தவுடன் மீண்டும் இன்னொரு முறை படிக்கத் தொடங்கினார். நான் உடனே சொன்னேன் மயிலாடுதுறையை சேர்ந்தவர், இணையத்தில் எங்கெல்லாம் கழகத்தை விமர்சிக்கிறார்களோ அங்கு இவர் , அப்துல்லா, யுவகிருஷ்ணா உள்ளிட்ட பல நண்பர்கள் பலர் பதிலடி கொடுக்கக்கூடியவர்கள் என்றேன். காதில் கேட்டுக்கொண்டே படிப்பதை தொடர்ந்தார். திடீரென்று வைரமுத்து தி.மு.க என்று ஒருவர் எழுதியிருக்கிறாரே என்றார், ஆம், இவரும் மதுரைக்கரார்தான் என்றேன். எல்லோருடைய பதிவுகளையும் நிதானமாக படித்தார். பலரும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் தலைவர் கலைஞர் அவர்களை பற்றி கலைஞ்சரிடம் கர்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று புத்தகம் எழுதிய கோவி.லெனின் கூட தன்னுடை பார்வையை பதிந்திருக்கிறார் என்றேன், ம்! பார்த்தேன் என்றார் தலைவர். அத்தனை குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் படித்துமுடித்துவிட்டு எழுதிய பெயர்களை நினைவும் வைத்துக்கொண்டு பார்த்தேன் என்று சொல்கிறாரே என்பதை வழக்கம்போல் வியந்தேன். &lt;/div&gt;&lt;div&gt;படித்துமுடித்துவிட்டு பேப்பரை நீட்டினார் நான் அதை வாங்க, என்னிடம் கொடுக்க மறுத்து தலைவருடய உதவியாளர் நண்பர் நித்யாவிடம் கொடுத்தார். காரனம் ஒருவேளை வீட்டிலும் போய் இன்னும் நிதானமாக படிக்கலாம் என்று நினைத்திருப்பார்.&lt;/div&gt;&lt;div&gt;நான் என் கையில் இருந்த என் ஐபோனை தலைவரிடம் நீட்டி ஃபேஸ்புக் பக்கத்தை காட்டி இதில் வந்திருப்பதைத்தான் தலைவர் படித்தீர்கள் என்றேன், ஐபோனையும் கையில் வாங்கி அதிலும் படித்தபோது என்ஃபீல்டர் பதிவு இருந்தது, நான் என்ஃபீல்டர் யார் என்பதை சொன்னவுடன் அப்படியா என்று வியந்து கேட்டார். &lt;/div&gt;&lt;div&gt;ஃபேஸ்புக்கில் இணையதள தி.மு.க, இனமான இணைய தி.மு.க இப்படி பல க்ரூப்களை இளைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னேன். மேலும் இணைய நண்பர்களை ஒருங்கினைத்து சமீபத்தில் பெரியார் திடலில் மெல்வின் என்கிற நண்பர் கூட்டம் நடத்தினார், தலைமை கழக பேச்சாளர்கள் ஒப்பிலாமணி, இளம்பரிதி போன்றவர்கள் கலந்து கொண்டு அவர்கள் பேச்சுக்கு இந்த பக்கங்களிலிருந்து பலவற்றை பயன்படுத்திகொள்கிறோம் என்று சொன்னார்கள் என்பதை சொல்லி 2011 தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு நண்பர் ”விக்கல் நிற்க விஷம் குடித்த தமிழக மக்கள்” என்று பதிவு செய்திருந்தார் என்பதை கேட்டவுடன் என்னது? என்று மீண்டும் கேட்டு நன் சொன்னதற்கு வாய் விட்டு சிரித்தார். கலைஞர் ஆட்சியில் நடந்த திருமணங்கள் ரத்து கணவன்கள் கொண்டாட்டம், மனைவிகள் திண்டாட்டம் என்ற பதிவையும் சொன்னவுடன் மிகவும் ரசித்தார் தலைவர் கலைஞர். நம் நண்பர்களின் அனைத்து பதிவுகளையும் தலைவர் படித்தார் என்ற திருப்தியுடன் தலைவரிடம் சொல்லிவிட்டு வெளிவந்தேன். அதன்பிறகு தலைவர் அந்த அறையைவிட்டு காருக்கு செல்ல நண்பர் வினோத் அழைத்துக்கொண்டு வந்தார். தலைவர் காரில் ஏறுகிற நேரத்தில் என்னை பார்த்து வருகிறேன் என்று சொல்லி மெதுவாய் சிரித்தார். அந்த சிரிப்பில் என் உழைப்பை இன்றைய இளையதலைமுறையும் அறிந்திருக்கிறார்கள், என் உழைப்பு வீன்போகவில்லை என்கிற பெருமிதம் தெரிந்தது&lt;/div&gt;&lt;div&gt;===================================================&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேலே இருக்கும் வரிகள் தான் அவரது முகநூலில் எழுதிய வாசங்கள். அவரது முகநூல் ஐடி http://www.facebook.com/profile.php?id=100000241241891  அதிலே வீடியோவும் காணக்கிடைக்கும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த ஒரு சின்ன அங்கீகாரம் போதும். நாங்கள் திராவிடமுன்னேற்ற கழகம் என்பது ஒரு பேரியக்கம். ஒன்னரை கோடி உறுப்பினர்கள். நான் கடைசி தொண்டன். என் எழுத்தை படிக்கும் என் தலைவன். இதை  உலகில் எந்த ஜனநாயக கட்சியில் காணமுடியும்? சொல்லுங்கள் தோழர்களே! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள நெருக்கம் , பாசம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் திமுகவை விட்டால் வேறு ஏது கட்சி இருக்கின்றது இந்த உலகில்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இரண்டு வருடம் முன்னே ஒரு ஜூன் மாதம் இரண்டாம் தேதி, மயிலாடுதுறையின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் மிசா. அ. செங்குட்டுவன் மரணப்படுக்கையில் இருக்கின்றார். வாழ் நாள்வரை பெரியார் வழியில், அண்ணா வழியில், கலைஞர் வழியில் வாழ்ந்த அக்மார்க் நாத்திகன். எல்லா கட்சி உறுப்பினர்களும் போய் பார்கின்றனர். அவர் கண்களில் இருந்து கண்ணீர். "அண்ணே ரொம்ப வலிக்குதா" எனக்கேட்ட ஒருவரிடம் "இல்லை நான் மிசாவை பார்த்தவன். எனக்கு உடல் உபாதை வலிக்கும் போதெல்லாம் என் தம்பி ஸ்டாலின் மிசாவில் பூட்ஸ்காலால் மிதிபட்ட போது இது போல வலித்து இருக்குமா, அல்லது இதை விட அதிகமாக வலித்து இருக்குமா என எனக்கு நானே பட்டிமன்றம் நடத்திப்பேன்" என சொல்கிறார். கேட்டவர்கள் கலங்கி போனார்கள். ஒரு கட்டத்தில் அவர் கண்களில் கண்ணீர். "அண்ணே, ஏன் அழுற?" என கேட்டோம். "இல்லடா தம்பிங்களா, நான் கடவுள் இல்லைன்னு கடைசி வரை இருந்துட்டேன். இப்ப இருந்தா நல்ல இருக்கும்னு தோணுது"  ( மக்களே தசாவதாரத்தில் மட்டும் கமல் குழப்பியது போல) . அதுக்கு ஒரு உடன்பிறப்பு " அண்ணே, சரி சரி வா வா எதுனா கோவிலுக்கு" என கூப்பிட்ட போது " போடா போட பொறம் போக்கு, நான் உசிரோட இன்னும் ஒரு நாள் இருக்கனும்னு நினைச்சது வேற காரணம். நான் இன்னிக்கு செத்தா திமுக கொடி எல்லாம்  மாயவரத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும், அது கூடாது. ஏன்னா விடிஞ்சா என் தலைவன் பிறந்த நாள். ஜூன் 3. அன்னிக்கு நான் பார்த்து பார்த்து ஏத்துன கொடி எல்லாம் அரைக்கம்பத்தில் இருக்க எனக்கு மனசு வரலை. அதனால தான் சொன்னேன். கடவுள்ன்னு எவனாவது இருந்த சொல்லி அனுப்பு. நான் ஜூன் 3 அன்னிக்கு வர்ரேன்ன்னு" என சொன்னார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் அவர் உயிர் பிரிந்தது. மயிலாடுதுறை நகரகழகம் தலைவர் பிறந்த நாள் காரணமாக சென்னை செல்வதா அல்லது என்ன செய்வது என தெரியவில்லை. தளபதியிடம் இருந்து செய்தி வருகின்றது. "அண்ணன் மிசா. அ. செங்குட்டுவன் உடல் அடக்கம் நடக்கும் வரை அங்கிருந்து யாரும் இங்கே வரக்கூடாது. நான் என்னால் இயன்ற வரை வருகிறேன்" என. பின்னர் பேராசிரியர் அன்பழகனார் முரசொலியில் கட்டம் போட்டுட்டார். அதாவது மயிலாடுதுறையில் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது தான் திமுக! ஒரு தலைவனுக்கும் ஒரு தொண்டனுக்கும் இடையேயான ஒரு பாசப்பிணைப்பு!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாழ்க திமுக! வாழ்க கலைஞர்! வாழ்க தளபதி! &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-4440399972338453484?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/4440399972338453484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/4440399972338453484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/4440399972338453484'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/10/blog-post.html' title='பன்னிரு  விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் !!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-5946851109898219119</id><published>2011-09-22T14:44:00.000+05:30</published><updated>2011-09-22T14:47:36.154+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்/ நகைச்சுவை மாதிரி'/><title type='text'>அய்யோ பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!</title><content type='html'>&lt;div&gt;இந்த பதிவு அடிக்க என்னவோ பத்து நிமிஷம் தான் ஆச்சு. ஆனால் தலைப்பு வைக்க தான் நீண்ட நேரம் ஆனது. "நானும் பேயும்" என முதலில் தலைப்பு வைத்தேன். அப்படி வைத்தால் "இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" என பின்னூட்டம் போடுவாங்க. சரின்னு "நான் பேயை பார்த்தேன்" என தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன்.  "பெல்ஜியம் மிரர் வாங்கினதுக்கு எல்லாம் பதிவா?" என பின்னூட்டம் வரும். எது வந்தாலும் சரின்னு தான் என் அமானுஷ்ய அனுபவத்தை பதிவிட்டு உங்களை பயம் காட்டலாம்  என  முடிவுக்கே வந்துவிட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாயவரத்தில் இருந்து கிழக்கே பூம்புகார் போவதற்கு இரு வழிகள் உண்டு, பூம்புகார் சாலை, அடுத்து செம்பனார்கோவில் சாலை. இரண்டுமே ஒரே முக்கூட்டில் சந்தித்து பின்னர் திருவெண்காடு  அருகே சந்தித்து ஒரே சாலையாக ஆகும் பூம்புகார் செல்ல.அந்த இரு சாலைகளுக்கும் நடுவே தான் காவிரி ஓடும். அதன் இரு கரைகளும் பச்சை பசேல் என இருக்கும். கரையோர கிராமங்களின் எல்லையில் காவிரிகரையில் இடுகாடுகள் இருக்கும். இரு பக்க கிராமங்களை இணைக்கும் வகையில் சின்ன சின்ன ஒரு மீட்டர் அகலத்தில் மூங்கில் பாலங்களோ கான்கிரீட் பாலங்களோ இருக்கும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் அப்போது படித்து முடித்து விட்டு தற்காலிகமாக வி கே ஆர் பப்ளிகேஷன் என்னும் கம்பனியில் விற்பனை வேலை. உயிரியல் பாடத்துக்கு செய்முறை புத்தகங்களை இரு கட்டை பையில் எடுத்து கொண்டு திருவெண்காடு சீனிவாசா பள்ளிக்கு சென்றிருந்தேன். மதியம் 12 மணிக்கு எல்லாம் வேலை முடிந்தது. திரும்ப மாயவரம் வரும் போது கொஞ்ச தூரத்திலேயே பஸ் டயர் வெடித்து நின்று விட்டது. பேருந்தில் வந்தவர்கள் வேறு வேறு பேருந்தில் ஏறிவிட நான் மட்டும் கொஞ்சம் நடந்து காவிரிக்கரையை அடைந்து அக்கரையில் இருக்கும் திருச்சம்பள்ளி என்னும் கிராமம் வழியே செம்பனார்கோவில் போகலாம் என நினைத்து புத்தக பைகளை (இரு கையிலும் இரு பைகள், ஒவ்வொன்றும் இருபது கிலோ எடை இருக்கும்) எடுத்து கொண்டு நடக்க தொடங்கினேன். காரணம் என் நண்பன் அப்சராகார்த்தி அப்போது திருச்சம்பள்ளியில் இருக்கும் இந்திய உணவு கழகத்தின் (FCI)  நெல் அரைவை நிலையமும் அதன் இணைப்பாக தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலையும் இருந்தது ..அதிலே தற்காலிகமாக "கெமிஸ்ட்" வேலை செய்து கொண்டிருந்தான். அவனையும் பார்த்து விட்டு செம்பனார்கோவில் "சம்மந்தம் மேல் நிலைபள்ளி"க்கு போகலாம் என நினைத்து நடக்க தொடங்கினேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கிட்ட தட்ட காவிரி கரையை அடையும் போதே அந்த கிராமத்தின் இடுகாட்டில் இரு பிணங்கள் எரிந்து கொண்டு இருந்தது. அதே போல பாலத்துக்கு அந்த பக்கம் ஒரு பிணம் எரிந்து கொண்டு இருந்தது. அப்போது மதியம் ஒரு மணி ஆகியது. பொதுவாக சின்ன வயதில் விடுமுறை நாட்களில் அது போல மதியம் விளையாட கிளம்பினால் பாட்டி "டேய் இது உருமநேரம் பேய் நடமாடும் நேரம். போகாதீங்க" என மிரட்டுவது ஏனோ ஞாபகம் வந்து தொலைந்தது. ஆனாலும் தைரியம் வரவழைத்து கொண்டு நடக்க தொடங்கினேன். வெள்ளை உடையில் யாராவது கண்ணில் தென்படுகின்றனரா என பார்த்தால் அங்கே பிணங்களை தவிர யாரும் இல்லை. அது கொஞ்சம் பயமாக இருந்தாலும், யாருமே இல்லை என்கிற போது பேயும் இல்லைதானே என ஆசுவாசப்படுத்தி கொண்டு நடந்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு வயதான ஒருவர் , காஸ்ட்யூம்னு பார்த்தா ஒரு கோவணம். கோவணம் மட்டுமே தான். ஆனால் அந்த கோவணத்தை விட பெரியதாக ஒரு வேட்டியை தலையில் முண்டாசாக கட்டியிருந்தார். காதில் ஒரு பீடி. பற்கள் வெற்றிலை காவி. "எழவு அந்த தலையில் கட்டியிருப்பதை எடுத்து இடுப்பில் கட்டிகிட்டா என்ன?" என கேட்க நினைத்து கேட்கவில்லை. ஏனனில் கிராமத்து குசும்பு எதுனா எடக்கு மடக்கா பதில் வரும். அவர் நேரே என்னை நோக்கி தான் வந்தார். கொஞ்சம் பயம் அதிகமாகியது. மிக அருகே வந்து "தம்பி பீடிக்கு நெருப்பு இருக்குமா?" என கேட்டார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனனில் இதே போல சமிஞ்கைகள் தான் எல்லா சினிமாவிலும் அமானுஷ்ய சீன்களில் வரும். "அது என்ன, யாராவாது செத்துட்டா டாக்டர் கண்ணாடி கழட்டிட்டு 'சாரி'ன்னு சுரத்தே இல்லாமல் சொல்லுவாரு, போலீஸ் அசூசையாக தொப்பியை கழட்டுவார், அதே போல சுடுகாடு காமிச்சா பீடிக்கு நெருப்பு கேட்டு ஒருவர் வருவாரு. பின்னே பார்த்தா அவருக்கு வேட்டிக்கு கீழே காலே இருக்காது. "நான் செத்து ரெண்டு வருஷம் ஆச்சேன்னு கத்திகிட்டே மறைந்து விடுவார். ச்சே இந்த தமிழ்படங்களே இப்படித்தான். இனி நான் ஈரான் படம் மட்டுமே பார்க்க போறேன்" என நெஞ்சு நிமிர்த்தி வசனம் பேசிக்கொண்டு திரிந்த காலம் அது. என்கிட்டயே சுடுகாட்டில் இப்படி ஒரு பேய் நெருப்பு கேட்கும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மெதுவா வேட்டிக்கு கீழே கால் இருக்கான்னு பார்த்தேன். அவரு மூஞ்சி தான் இருந்தது. ஏன்னா அவரு தான் வேட்டிய தலையிலே கட்டியிருந்தாரே! கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை இறக்கி கீழே பார்த்தேன். கால் இருந்தது. கொஞ்சம் நிம்மதி ஆகியது. கோவமும் வந்தது. என்னை பார்த்து பீடிக்கு நெருப்பு கேட்டாரேன்னு. நானே அப்போது பீடி மாதிரி தான் இருப்பேன். தவிர அப்போதெல்லாம் எனக்கு லாகிரிவஸ்துக்கள் அத்தனை ஒரு பரிட்சயம் ஆகாத நேரம். அதிகபட்சமாக புளிப்பு மிட்டாய் வாங்கி வாயில்  போட்டுப்பேன். (ஆமாம் புளிப்பு மிட்டாயே லாகிரிவஸ்துவாக நான் நினைத்து கொண்டிருந்த காலம். எத்தனை ஒரு நல்ல பையன் நான் என்பதை வாசகர்களின் யூகத்துகே விடுகின்றேன்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவரிடம் "இல்லை" என சொன்னபோது அவரும் "சரி தம்பி பார்த்து போங்க" என சொல்லிவிட்டு கடந்து போனார். அவர் சும்மா போயிருக்கலாம். பார்த்து போங்க என சொன்னது தான் பயமாக இருந்தது. "அப்படின்னா இங்க பேய்கள் நடமாட்டம் கொஞ்சம் அதிகம் தான் போலிருக்கு" என நினைத்து கொண்டேன். எரியும் சிதையை பார்த்தேன். பிணம் எரியும் போது எழுந்து டான்ஸ் ஆடும் என சின்ன வயசில் பெருஞ்சேரி நடராசன் கதை விடுவான். அப்போது வெட்டியான் அதை அடிப்பான் எனவும் சொல்லியிருக்கான். ஆமாவா என நினைத்து சிதையை பார்த்தேன். மூன்று பிணங்களும் சமர்தாக எரிந்து கொண்டிருந்தது. 'அடக்கமான' பெண்கள் போலிருக்கு என நினைத்து கொண்டேன். எங்கேயோ ஒரு பறவை கத்தி பீதியை கிளப்பியது. ஆந்தை போலிருக்கு. ஆந்தை இரவில் தானே வரும். ஓவர்டைம் பார்க்குது போலிருக்கு. பொன்னியின் செல்வன் கோடியக்கரை காடு, கொள்ளிவாய் பிசாசு எல்லாம் ஞாபகம் வந்தது. பூங்குழலி ரொம்ப அழகு தான் என மனசில் ஓடியது. ச்சே அவளுக்கு இருக்கும் வீரம் எனக்கு இல்லையே. மெதுவாக பாலத்தின் அருகே வந்தேன். இந்த பயத்தின் காரணமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றியது. முட்டிக்கொண்டு வந்தது. சரி பாலத்தை கடந்து அந்த பக்கம் போய் அங்கே எரியும் அந்த பிணத்தையும் தாண்டி விட்டு திருச்சம்பள்ளி ஒத்தை அடி பாதையில் சுத்தமான இடம் பார்த்து அசுத்தம் செய்யலாம் என நடக்க தொடங்கினேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கை இரண்டும் குடைந்தது. பாலத்தின் மீது அதை வைத்து விட்டு சிம்ரன் போல சோம்பல் முறித்தேன். பின்னர் திரும்பி பார்த்தேன். என்னை கடந்து போன தாத்தா தூரத்தில் போவது தெரிந்தது. கால் இருந்தது. நிச்சயமாய் அவர் பேய் இல்லை என நிம்மதியாக இருந்தது. பின்னர் பையை தூக்கிக்கொண்டு பாலத்தில் ஒரு பாதி தூரம் வந்து விட்டேன். இன்னும் பாதி பாலம் தான் பாக்கி இருக்கு. ஒரு வழியாக இரு பிணங்களின் கிட்டே இருந்தும் தப்பித்து விட்டேன். மீதி பாதி பாலம் கடந்தால் அந்த மீதி ஒரு பிணத்தையும் தாண்டி விடலாம். பின்னர் ஒத்தையடி பாதையில் ஒரே ஓட்டம் ஓடிடலாம். எங்கே இருந்து ஓடுவது.நானே நாற்பது கிலோ இருப்பேன். தனியா ஓடினா ஓடிடலாம். கையில் வேறு 40 கிலோ இருக்கு. ஓடல்லாம் முடியாது. காக்க காக்க கனகவேல் காக்கன்னு ஷஷ்டி கவசம் சொல்லிகிட்டே நடக்க வேண்டியது தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது தான் நான் பேயை பார்த்தேன். இந்த பதிவின் கதாநாயகியாகிய பேயை பார்த்தேன். (மனம் இளகியவர்களும், கர்ப்பினி பெண்களும், என் பழைய பதிவுகளை எல்லாம் ஏற்கனவே படித்து தைரியமானவர்களும் மேலே தைரியமா படிங்க.. ஒன்னும் ஆகாது. ஏதாவது ஆனா எனக்கு மெயில் செய்யவும். நானும் தெரிஞ்சுக்கறேன்). &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பேய்னா அப்படி ஒரு பேய். அது ஒரு பெண் பேய். (பெண்ணை பேய் என சொல்கிறேன் என சமூகநீதிகாத்த சங்கிலிக்கருப்பன்கள் கோவப்படவேண்டாம்) நெசமாகவே அது ஒரு பெண். வெறும் எலும்பு மட்டுமே. எலும்புக்கூடு மட்டுமே. தலை முடி எல்லாம் எரிந்து போய் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. உடலில் ஒட்டு துணி இல்லை. தொடைப்பகுதிகளில் கொஞ்சம் சதைகள் கூழாக இருந்தது. பற்கள் இருந்தது. எனக்கு உதறல் அதிகம் ஆகிவிட்டது. திரும்பவும் ஓடிவிடலாமா என நினைத்த போது வந்த பக்கம் இரண்டு பிணங்களும் ஆக்ரோஷமாக எரிந்து கொண்டு இருக்கின்றது. தவிர நான் முக்கால்வாசி இந்த பாலத்தில் வந்துவிட்டேன். திரும்பவும் தைரியம் கூட்டிக்கொண்டு அதை பார்த்தேன். சிரித்தது. இரு கையையும் நீட்டி என்னை அழைத்தது. எனக்கு முதுகுதண்டு ஜில்லிட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாய்விட்டு கத்தி யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என நினைத்த போது யாருமே இல்லை அந்த பகுதிகளில். என்னை கடந்து போன அந்த தாத்தாவும் மறைந்து விட்டார். அனிச்சையாக நான் ரம் குடித்த குதிரை போல முன்னால் போகின்றேன். கிட்ட தட்ட அதன் அருகே வந்து விட்டேன். அந்த ஒரு மீட்டர் அகல பாலத்தின் ஒரு முனையில் அந்த கைப்பிடியில் உட்காந்து இருந்த அது கீழே குதித்தது. நான் இரு கையிலும் பை வைத்து கொண்டு அதை கடந்து அந்த பக்கம் போவது என்பது அதை உரசாமல் இயலாது.  கந்தசஷ்டியும் ஞாபகம் வரலை எந்த ஷஷ்டியும் உதவவில்லை. சரி என் வாழ்க்கை அவ்வளவு தான். அது என்னை அடித்து விடும். நானும் மரித்துப்போய் பேயாக ஆகிவிடுவேன். அப்படியே ஆனாலும் நம்ம ஏரியா சுடுகாட்டுக்கு போய்டனும். இங்க எல்லா பேயும் புதுசு. பழக நாளெடுக்கும். அங்கன்னா நமக்கு தெரிந்த பேயா இருக்கும். பின்னே வரக்கூடிய பேய்களும் நமக்கு தெரிஞ்ச பேயாகத்தான் இருக்கும். மியூச்சுவல் ட்ரான்ஸ்பர் எதுனா நம்ம ஏரியா சுடுகாட்டுக்கு கிடைச்சா நல்லா இருக்கும். இந்த சுடுகாட்டிலே நமக்கு தெரிஞ்ச பேய் யாராவது இருக்காங்களா என நினைத்த போது தான் திமுக எக்ஸ் எம் எல் ஏ விளநகர் கனேசன் அந்த ஏரியா என்பது நியாபகம் வந்தது.ஒரு வருஷம் முன்ன தான் அவர் இறந்து போயிருந்தார். நம்ம கட்சிகாரர், எப்படியும் ட்ரான்ஸ்பர் வாங்கி அனுப்பிடுவார். அய்யோ உறுப்பினர் கார்டு நம்பர் கூட மறந்து போச்சே.. எனக்கு தலையே சுற்றியது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்படி அதை கடந்து இந்த பக்கம் வந்தேன் என எனக்கு இப்போதும் ஞாபகம் வரவில்லை. ஆனால் அந்த ஒத்தையடி பாதைக்கு வந்துவிட்டேன். அது என்னை நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தது. நான் சுத்தமான இடம் பார்த்து உச்சா போகவேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்ததெல்லாம் வேஸ்ட். என் பேண்ட் தான் அதை விட சுத்தமான இடம் என அதுவே தீர்மானித்து விட்டது. எல்லாம் தானாக நடந்து விட்டது. என் இஷ்டத்துக்கா எல்லாம் நடக்குது. அந்த ஒத்தையடி பாதையை தாண்டி அந்த இந்திய உணவு கழகம் வந்து சேர்ந்து கார்தியிடம் விஷயம் எதும் சொல்லும் முன்னே "என்னடா பேயடிச்ச மாதிரி இருக்கே" என கேட்டான். அவன் சுத்த நாத்திகம். (இப்பவும் தான்) விஷயம் சொன்னேன். சிரித்தான். அப்பவும் அவன் நம்பவில்லை. என் பைகளை அவன் லேப்ல வச்சுட்டு என்னை ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாலம் நோக்கி மிதித்தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவன் இருக்கும் தைரியம் எனக்கு. இருந்தாலும் பயம் இன்னும் போகலை. அங்கே போனால் அந்து பாலத்தின் மீது உட்காந்து இருந்தது. "ஒ இதுவா, நமக்கு தெரிஞ்சது தான். இரு நான் போய் பேசிட்டு வர்ரேன்" என சொன்ன போது எனக்கு அழுகையும் பெருமையும் ஒரு சேர வந்தது. ஒரு சாதாரன மாயவரம் டவுன்ல நம்ம கூட ஒன்னடி மன்னடியா பழகிய கார்த்தி இன்னிக்கு ஒரு பெரிய குக்கிராமத்துல ஒரு மாபெரும் சுடுகாட்டிலே பேய்கிட்டே எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தும் அளவு பெரியாளா ஆகிட்டானே என்கிற பெருமையும் கூடவே அதுகிட்டே இவனுக்கு என்ன பேச்சு வேண்டிகிடக்கு என்று அழுகையும் வந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது கிட்டே பேசினான். திரும்ப வந்தான். "டேய் பாவம்டா அது பேர் சுந்தரி. இந்த கிராமத்து பொண்ணு தான். கட்டி கொடுத்து புருசன் சரியில்லைன்னு முதல் நாளே மண்ணெண்ணய் ஊத்தி கொளுத்திகிச்சு. அத்தோட மனநிலையும் சரியில்லாம போச்சு. ஆஸ்பத்திரிலயும் வச்சுக்கலை. ஓடி வந்துடுச்து. அத்தோட இங்க சுடுகாட்டுக்கு பக்கத்திலே வந்து உட்காந்துக்குது.பாவம் டா.. " என சொன்ன போது எனக்கு அதன் மீது பயம் போய் இரக்கம் வந்தது. அத்தோடு கூடவே ஜுரமும் வந்தது. பின்னர் ஒருவாரம் எனக்கு செம ஜுரம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதாங்க என் பேய்கதை. அதன் பிறகும் கொஞ்ச காலம் எனக்கு பேய் பற்றிய பயம் இருந்துச்சு. பின்னே கடந்த பதினாறு வருஷமா பயம் விட்டுப்போச்சு:-)) இப்பல்லாம் நான் பயப்படுவது இல்லை:-))&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-5946851109898219119?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/5946851109898219119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/09/blog-post_22.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/5946851109898219119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/5946851109898219119'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/09/blog-post_22.html' title='அய்யோ பேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-2656921578632615273</id><published>2011-09-17T23:05:00.003+05:30</published><updated>2011-09-19T13:17:32.992+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>Ms./ M.S.ராமூர்த்தி அய்யர் இரும்பு கடை!!!</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மன்னிக்கவும்! திரு. நேசமித்ரன் ஒரு எழுத்துப்பிழை சுட்டிகாட்டி இருந்தார். அதை சரி செய்யும் போது தவறுதலாக இந்த பதிவை அழித்து விட்டேன். அதிலே 22 பின்னூட்டங்களும் சேர்ந்து போய்விட்டது. அதனால் மீண்டும் பதிகின்றேன். மன்னிகவும்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;***********************************&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;என் நான்கு வயதில் என் குறும்புக்கார மாமா ஒருவர் "உனக்கு பனந்தோப்பில்  ஒரு அடக்கமான பெண் பார்திருக்கேன். அவங்க உனக்கு ராமூர்த்தி அய்யர் ஜூவல்லரியிலே மொத்தமான சங்கிலி போடுவதா சொல்லியிருக்காங்க. வரும் அமாவாசையிலே திம்மநாயக்கன் படித்துறை மண்டபத்திலே கல்யாணம்" என சொல்லுவது வழக்கம். நானும் ஏதோ எனக்கு பெரிய அளவில் கல்யாணம் நடக்க போவதாக நினைத்து சந்தோஷப்படுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் காலம் போகப்போகத்தான் தெரிந்தது. பனந்தோப்பு பகுதி என்பது சுடுகாடு என்பதும் அவர் சொன்னது "அடக்கமான" பெண் என்பதும், திம்மநாயகன் படித்துறை மண்டபம் என்பது இறந்தபின்னர் காரியம் செய்யும் இடம் என்றும்.  ராமூர்த்தி அய்யர் ஜுவல்லரி என்பது ராமூர்த்தி அய்யர் இரும்புகடை என்றும் அங்கே இரும்பு சங்கிலி தான் கிடைக்கும் என்பதும் தெரிந்து சிரித்து கொண்டேன். அப்படித்தான் ராமூர்த்தி அய்யர் இரும்புகடை எனக்கு அறிமுகம் ஆனது. ஆமாம் இந்த பதிவின் கதாநாயன் அந்த "M.S.ராமூர்த்தி அய்யர் ஹார்டுவேர்ஸ்" தான். மயிலாடுதுறையின் மைந்தர்கள் என்றால் அந்த கடைக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்க முடியவே முடியாது. கடை என்று சொன்னா ஏதோ அப்படி இப்படி கடை இல்லை. அது ஆச்சு அதை தொடங்கி ஒரு எண்பது வருடங்கள். அந்த ராமூர்த்தி அய்யர், அதன் பின்னே அவரது மகன் M.R. கண்ணப்பன், பின்னர் அவரது இரு மகன்கள் அதிலே தற்போது உரிமையாளராக இருக்கும் அவரது இளைய மகன் M.R.K.கீர்த்திவாசன் அண்ணன். எனக்கு நினைவு தெரிந்து நான் ராமூர்த்தி அய்யரை பார்த்தது இல்லை. ஆனால் M.R. கண்ணப்பன் அவர்கள் தான் அதன் முதலாளி நான் சிறு வயதாக இருக்கும் முதலே. தவிர அவர் எங்கள் பள்ளி தி.ப.தி.அர.தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஆட்சிமன்ற குழுவின் முக்கிய உறுப்பினரும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கடையில் கட்டுமான பொருட்கள் சிமெண்ட், கம்பிகள்,பெயிண்ட் வகையறாக்கள் உட்பட எல்லாமே கிடைக்கும். இப்போதும் அந்த நிறுவனத்தை நான் கடை கடை என்று சொல்வதால் அதன் விஸ்தீரனம் என்ன என்பது உங்களுக்கு புரியவில்லை தானே? இருங்கள். அந்த கடையில் ஒரு நாளைக்கு விற்பனை ஆகும் சிமெண்ட் மூட்டை மட்டும் சுமார் 5000 முதல் 8000 வரை. கம்பிகள் நூற்றுக்கணக்கான டன்கள். இருக்கும் இடமோ மயிலாடுதுறையின் மைய பகுதியான மணிக்கூண்டு க்கு பக்கத்தில். அகலம் ஒரு என்பது அடியும் நீளம் ஒரு 250 அடியும் இருக்கும் சுமாராக. குடோன் என்பது காவிரி கரையில் இருக்கின்றது. அந்த கடையின் உள்ளே ஒரு லாரி போய் வருவது பெரியகோவில் உள்ளே ஒருவன் சைக்கிளில் போய் வரும் போது எப்படி இருக்கும், அது போல லாரி அந்த கடையின் உள்ளெ  போய் ஒரு ரவுண்டு அடித்து திரும்பும் என்றால் மயிலாடுதுறையின் இதய பகுதி கடைத்தெருவில் அந்த இடம் எவ்வளவு பெரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இத்தனைக்கும் குடோன் தனி இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்படி என்ன அந்த கடையின் விஷேஷம்? ஏன் அப்படி அங்கே மட்டும் அத்தனை பரந்துபட்ட வியாபாரம்? விலை அங்கே குறைவா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் அதல்லாம் எதும் இல்லை. ஒன்றே ஒன்று தான். நேர்மை. அவர்களின் நேர்மை. பில் இல்லாத வியாபாரம் கிடையாது. நிங்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக அரசு விதிக்கும் வரிகள் கண்டிப்பாக நம்மிடம் வசூல் செய்யப்படும். அது மிகச்சரியாக அரசுக்கு செலுத்தப்படும். தரமான பொருட்கள் மட்டுமே வியாபாரம் செய்யப்படும். எடை சரியாக இருக்கும். அங்கு இருக்கும் விற்பனையாளர்களுக்கு நான் டிப்ஸ் எதும் கொடுக்க தேவையும் இல்லை கொடுத்தாலும் அதை மறுதளிக்கும் அளவுக்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதே போல நாம் சிமெண்ட் வாங்கினாலும் சரி கம்பிகள் வாங்கினாலும் சரி கொத்தனார், இஞினியர் ஆகியோருக்கு எந்த கமிஷனும் அவர்களுக்கு அந்த நிறுவனத்தில் இருந்து கொடுக்கவும் மாட்டார்கள். அது போல கடன் கிடையாது. கையிலே காசு வாயிலே சிமெண்ட் பாலிசி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வீடு கட்ட ஆரம்பித்ததும் மேஸ்திரியோ இஞினியரோ "ராமூர்த்தி அய்யர் கடை வேண்டாம். அதை விட சூப்பரா ஒரு மூட்டைக்கு 20 ரூபா கம்மியா நான் வேற கடையிலே வாங்கி தருகின்றேன் என்பது தான் முதல் டீலிங் ஆக இருக்கும். அதை எல்லாம் மீறி மக்கள் ராமூர்த்தி அய்யர் கடைக்கு தான் படையெடுப்பார்கள். அந்த கண்ணப்பன் அய்யரோ, கீர்த்திவாசன் அண்ணனோ மிகப்பெரிய ஆன்மீக பற்றாளர்கள் என்றேல்லாம் சொல்ல இயலாது. கடையில் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாமி படங்களுக்கு பைனான்ஸ் கம்பனியில் போடுவது போல சரம் சரமாக மல்லிகைப்பூவும், வாசனை பத்திகளும் படைக்கப்பெறாது. அவர்களுக்கு செய்யும் தொழிலே முதல் தெய்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்து அந்த கடை ஒரு மிகப்பெரிய ஓட்டு வீடு போன்ற கட்டிடம் தான். அந்த கடைத்தெருவின் அனைத்து கடைகளும் (எதிரே இருக்கும் ஏ ஆர் சி ஜுவல்லரிகள்) கண்ணாடி மாளிகையாக ஆன பின்னரும் இது ஒரு ஓடு வேய்ந்த கடை தான். முதலாளிக்கும், அவரது மகன்கள் இருவர், பின்னே ஒரு கணக்கர் ஆகியோருக்கு வரிசையாக நான்கு குழி அதாவது பள்ளம் இருக்கும் அதன் முன்பக்கம் ஒரு பெரிய மர டெஸ்க், இவர்கள் சென்று அந்த குழியில் காலை தொங்கவிட்டு அமர்ந்து டெஸ்கில் பெரிய பெரிய தோல் பைண்டிங் செய்த  லெட்ஜர்  பிரித்து வைத்து கொண்டு தலைக்கு மேலே ஒரு அந்த கால ஜி ஈ சி  மண்டை சீலிங் ஃபேன் போட்டுக்கொண்டு உட்காந்து கொண்டு முதலாளிக்கு மாத்திரம் எக்ஸ்ட்ரா காற்றுக்காக ஒரு இங்கிலாந்து ராலி பேன் சத்தமில்லாமல் ஓடும் அதை வைத்து கொண்டு கருமமே கண்ணாய்இருப்பர். கண்ணப்பன் அய்யர் கடைக்கு வந்ததும் சட்டையை கழட்டி பின்னால் இருக்கும் ஆணியில் மாட்டிவிட்டு மல் துணியில் தைக்கப்பட்ட ஒரு கை வைத்த பனியனோடு பில் போடுவார். ஒரு கருப்பு கலர் அந்த கால கிரகாம்பெல் காலத்து விரல் வைத்து நம்பர் சுற்றும் போன் ஒரு கொலாப்ஸ் ஸ்டாண்ட் ல் இருக்கும். முதலாளி, அவரது மகன்கள், கணக்கர் இதிலே யார் பேச வேண்டுமோ அவர்களுக்கு அந்த போன் நகர்த்தி வைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பழமை மாறாமல் இருந்த அந்த வணிக வளாகம் இன்னும் சொல்ல போனால்  இந்த ஊரில் இருந்த மாட மாளிகை எல்லாம் அவர்கள் விற்ற சிமெண்ட், கம்பிகளால் உயர்ந்து நிற்க அந்த கடை மட்டும் அப்படியே இருந்தது. அவர்களின் சிமெண்ட் குடோனில் ஒரு நாளைக்கு கீழே சிந்தி கிடக்கும் சிமெண்டை  ஒரு வாரத்துக்கு திரட்டினால் கூட இவர்கள் மாயவரத்தில் மணிக்கூண்டுக்கு நிகரான உயரத்தில் ஒரு கட்டிடம் எழுப்ப முடியும் என கேலி பேசியவர்கள் உண்டு. அதே போல கண்ணப்பன் அய்யர் சைக்கிளில் தன் வீடு முதல் கடைக்கு வந்து போவதை கூட கேலியும் கிண்டலும் செய்தவர்களை நான் பார்த்தது உண்டு. ஆனால் அதல்லாம் அவர்கள் கவனத்துக்கே போகாது. ஏனனில் அவர்களது கவனம் வியாபாரம். அது நல்ல விதமா நடந்தா சரி என்கிற போக்கில் தான் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை திரு. கண்ணப்பன் அவர்கள் எங்கள் பள்ளி விழாவில் பேசிய போது " பெருசா நான் எதும் செஞ்சுடலை. நான் ஒரு போஸ்ட்மேன். போஸ்ட்மேன் வியாபாரி. நான் ஒரு பொருளை வாங்கி அவா "நீ இத்தன தான் லாபம் வச்சு விக்கலாம்"ன்னு சொல்லும் அதே லாபத்தை தான் வச்சி விக்கிறேன். அதுல கவர்மெண்ட் "நீ இத்தன சம்பாரிச்ச, அதுக்கு நேக்கு இத்தன பர்சண்டேஜ் டேக்ஸ் பே பண்ணிடு"ன்னு சொல்றா, அதை டான்னு கொடுத்துடுறேன். அதே போல அந்த கமாடிட்டீஸ்க்கு இத்தன டேக்ஸ் உன்னாண்ட அதாவது  வாங்குறவா கிட்டேர்ந்து வசூலிச்சு கட்டிடு"ன்னும் சொல்றா. அதையும் உங்களான்ட  இருந்து வாங்கி டான்னு கட்டிடுறேன். தான் சூட்சுமம். நாம வரி கொடுக்கலைன்னா அரசாங்கம் எப்படி நடத்துவா? என் தோப்பனார் இங்லீஷ் காரன் காலத்திலே இருந்து அவா சொன்ன  வரியை கட்டிண்டு வந்தா. நேக்கு அந்த  மன உறுத்தல் இல்லை. நம்ம நாட்டுக்கு கட்டிண்டு வர்ரேன். அவா ரோடு போடுறா, பெரிய ஆஸ்பத்திரிலே ஏழகளுக்கு ஃப்ரீயா மருந்து கொடுக்கறா, குடிதண்ணீர் தர்ரா,எல்லாமே எல்லாமே செய்யறா, நான் போய் இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? நீங்க போய் தனித்தனியா இதல்லாம் செஞ்சுண்டு இருக்க முடியுமா? முடியாதோன்னோ, நாம வரி கொடுக்கலைன்னா அவ பணத்துக்கு எங்க போவா? அவா கிட்டே தான் நாசிக்ல பிரஸ் இருக்குன்னு பிரிண்ட் பண்ணிக்க முடியுமா? டபார்ன்னு அதல்லாம் செஞ்சுட முடியாது. நாம கொடுக்கும் வரியை வச்சுண்டு தான் செய்ய முடியும். நாம ஒழுங்கா கொடுத்தா அவா செய்வா. "நேக்கு பத்தலை. நீ இன்னும் கொஞ்சம் வசதி செஞ்சு கொடு"ன்னு கேளுங்கோ அதுக்கு  எல்லா உரிமையும் உங்களுக்கு எந்தளவுக்கு இருக்கோ அந்த அளவு அவாளுக்கு நாம செலுத்த வேண்டிய வரியையும் செலுத்திடனும் கேட்டேளா" என கலோக்கியலா பேசியது அன்றைக்கு எல்லார் மனதிலும் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு கடையில் கணக்கு எல்லாம் முடிந்து கண்ணப்பன் சார் ஒரு தோல் பையில் தான் எல்லா பணத்தையும் எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு சைக்கிளில் போவார். பட்டமங்கல தெருவில் இருந்து அரசாங்க மகளிர் பள்ளிகூடம் தாண்டி இருக்கும் சந்து வழியே நூர்காலனி வழியே (கோ ஆபரேடிவ் பேங் வழியே) எங்கள் பள்ளிக்கூடம் பக்கத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு போவார். இதை கவனித்து கொண்டு இருந்த ஒரு திருடன் ஒரு நாள் அந்த பேங் சந்தில் வைத்து இவரை கத்தியால் குத்தி பணத்தை பிடுங்கிட்டான். அடுத்த நாள் காலை செய்தி தெரிந்ததும் நான் வழக்கம் போல என் நண்பன் ராதாவிடம் விஷயத்தை சொல்ல "அய்யோ என்ன ஆச்சு .... அந்த  திருடனுக்கு?" என கேட்டான். அவன் அப்படி கேட்டதற்கு காரணம் உண்டு. ஏனனில் திரு.கண்ணப்பன் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். கெட்ட பழக்கம் எதும் கிடையாது. உடல் திடகாத்திரமானது. பாவம் திருடன். இவரை கத்தியால் குத்தினாலும் இவர் விடாப்பிடியாக அவனை பிடித்து அவன் யாரிடமோ திருடி வச்சிருந்த ஆயிரம் ரூபாய் சொச்சத்தையும் சேர்த்து பிடுங்கி விட்டார். அவனை போலீசிலும் பிடித்து கொடுத்துவிட்டார். பாவம் திருடனுக்கு ஆயிரத்து சொச்சம் நஷ்டம்:-)) அப்படி எதற்கும் அசையாத திட மனது கண்ணப்பன் சாரைக்கூட விதி விட்டு வைக்கவில்லை. அவரது பெரிய மகன் ஆன்மீக சுற்றுப்பயணம் வடநாட்டுக்கு போன போது ஹரித்வாரில் மரணம் அடைந்து விட அந் நிகழ்சி இவரை ரொம்ப ஆட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவரது இளைய மகன் கீர்த்திவாசன் அண்ணன் அவர்கள் கடையின் எல்லா பொறுப்புகளையும் பார்த்து கொண்டார். கடை ஓட்டு கட்டடத்தில் இருந்து மிகப்பெரிய கட்டிடமாக மாறியது. குழியில் டெஸ்க் போட்டு உட்காந்த நிலை மாற்றப்பட்டு அதிநவீன பர்னிச்சர்கள், கம்பியூட்டர் என சமகாலத்துக்கு மாறிவிட்டது. பெரிய மகனின் மனைவி, குழந்தைகள் எல்லாரும் சென்னையில் செட்டில் ஆகிவிட சின்னவர் கீர்த்திவாசன் அண்ணனின் குழந்தைகளுக்கு மாயவாம் புழுதிகளும், வெய்யிலும், அழுக்கான காவிரியும் ஏனோ ஒரு ஒட்டுதல் இல்லாமல் சென்னை வாழ்க்கை பிடித்து போக பெரிய பையன் மரணத்தில் இருந்து மனது வெளியே வராமல் கண்ணப்பன் சாரும் போய் சேர்ந்துவிட்டார். ஆனாலும் சின்னவர் கீர்த்தி அண்ணன் அதே தாத்தா, தந்தையார், அண்ணன் காட்டிய அதே வழியில் கடையை திறம்பட நடத்தி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு பத்து நாட்கள் முன்னதாக அவர் கடைக்கு போன போது ஒருவர் சிமெண்ட் வாங்க வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கஸ்டமர்: சார் நான் பெரிய அளவிலே ஒரு கட்டிடம் கட்டனும்.கவலையே படாதீங்க. உங்க கடையிலே தான் எல்லாம் எடுக்க போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தி அண்ணன்: சரி கவலைப்படலை. சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கஸ்டமர்: அல்ட்ராடெக் ஒரு மூட்டை என்ன விலை?&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தி அண்ணன்: 315&lt;br /&gt;&lt;br /&gt;கஸ்டமர்: சரி, எனக்கு ஒரு ஆயிரம் மூட்டை வேண்டும். அடுத்து அடுத்து வரிசையா கட்ட போறேன். இன்னும் அதிக லெவல்ல தேவைப்படும். எனக்கு பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். உடனே  கை மேலே கேஷ் சுடச்சுட தருவேன். என்கிட்டே லாரி இருக்கு. டோர் டெலிவரில்லாம் வேண்டாம். திரும்பவும் சொல்றேன். பில்லு கில்லு எல்லாம் வேண்டாம். இப்ப சொல்லுங்க என்ன விலை ஒரு மூட்டை?&lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தி அண்ணன்: 315&lt;br /&gt;வந்தவர்  பேயறைந்து போன மாதிரி ஆனார். எனக்கு விவேக் மற்றும் டாக்டர் மாத்ருபூதம் காமடி தான் ஞாபகம் வந்தது. "சார் ஊசி போட போறீங்களா? நான் வேண்டுமானா பேண்டை கழட்டிடட்டுமா? என விவேக் கேட்க அதற்கு டாக்டர் "அது உன் இஷ்டம், ஆனா நான் கையிலே தான் போடப்போறேன்" என்பார். நீ பில்லை வாங்கு வாங்காம போ, அல்லது வாங்கி கிழிச்சு போடு. அது பத்தி எனக்கென்ன கவலை என்கிற  அதே கண்ணப்பன் சாரின் குணம்.  மயிலாடுதுறையில் அதிகபட்சம் விற்பனை வரி கட்டும் நிறுவனம் அது. இப்பவும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நான் ஏன் இத்தனை நீட்டி முழங்குகிறேன் அந்த ராமூர்த்தி அய்யர் இரும்புகடை பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கடை விற்பனை ஆகிவிட்டது. ஆமாம், கீர்த்தி அண்ணனால் கவனிக்க முடியவில்லை. பசங்க சென்னையிலே செட்டில் ஆக விருப்பம். இவருக்கு வாரம் ஒரு முறை சென்னை சென்று வர முடியவில்லை. வீடும் மிகப்பெரிய பங்களா. தனி ஆளாக இவர் மாத்திரம் இருக்க வேண்டும். சொத்துபத்துக்கு எதும் குறைவில்லை. சென்னையில் அண்ணாசாலையில் கால்வாசி கிடக்கு, ஊட்டி கொடைக்கானலில் இருக்கு. இன்னும் சிமெண்ட் கம்பனிகளில் அதிக  விற்பனைக்காக கொடுக்கப்படும் ஊக்கத்தொகை கூட இவங்க நிறுவனம் பல ஆண்டுகளாக வாங்காமல் இருப்பதே பல கோடிகள் தாண்டும். ஆனால் இவரால் கடையை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி திடீரென விற்றுவிட்டார். கடையில் இருந்த இடம் முதல் உள்ளே இருந்த சரக்குகள், லாரிகள், வேலையாட்கள் உட்பட. ஒரு ஆணி கூட தன் கூட எடுத்துக்கொள்ளவில்லை. விரைவில நூற்றாண்டு காணப்போகும் ஒரு நிறுவனம். விற்பப்பட்டுவிட்டது. இன்னும் மயிலாடுதுறையில் பலருக்கு இவ்விஷயம் சென்றடையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கியவர் திரு. ஏ.டி. தமிழ்செல்வன். அவரும் ஒரு சிறந்த தொழிலதிபர். உழைப்பால் முன்னுக்கு வந்தவர். அவரைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் உடனே "எனக்கு தெரிஞ்சு அவரு தாஜ்மகால் பீடியை கடைக்கு கடை கொண்டு சைக்கிளில் போட்டு வியாபாரம் செஞ்சவர் தானே" என வயிறு எரியும் வியாபாரிகள் பேசுவர். கருனாநிதி மஞ்சள் பையுடன் திருவாரூரில் இருந்து சென்னைக்கு வந்தார் என கண்ணதாசன் வனவாசம் புத்தகத்தில் சொன்ன மாதிரியான வயிறு புகைச்சல் தான். ஆனால் ஏ.டி எஸ் ஒரு சிறந்த உழைப்பாளி என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். அவர் இந்த நிறுவனத்துக்க்கு இத்தனை கோடி கொடுத்தார் என யூகங்களாக அடுத்த அடுத்த நாட்களில் பேசும் யாருமே 'அவரு ஒயிட்ல இத்தனை கோடி கொடுத்தார், பிளாக்ல இத்தனை கோடி கொடுத்தார்" என பல்லுமேல நாக்கு போட்டு பேச மாட்டார்கள். ஏனனில் எம். எஸ் ராமூர்த்தி அய்யர் நிறுவனம் என்பது கருப்பு பணத்துக்கு அப்பாற்பட்டது என்பது ஊருக்கே தெரியும். நேர்மைன்னா இப்படி தான் இருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.டி. எஸ் கூட கடையின் பெயரை மாற்ற போவது இல்லியாம். ஆனாம் அந்த சிமெண்ட்ம், கம்பியும் அல்ல அதன் மதிப்பு. அவர் கொடுக்கும் பணம் எல்லாமே 'ராமூர்த்தி அய்யர் இரும்புகடை" என்னும் பிராண்ட்க்கு கொடுக்கும் பணம் தான் என்பதை ஒரு நல்ல வியாபாரியான திரு. ஏ டி எஸ். தமிழ்செல்வனும் நன்கு உணர்ந்தவர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க ராமூர்த்தி அய்யர் நிறுவனம், வாழ்க கீர்த்திவாசன் அண்ணன், வாழ்த்துக்கள் ஏ.டி.எஸ். தமிழ்செல்வன் சார்!  கீர்த்தி அண்ணன், உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் நம் பள்ளியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர். நம் பள்ளி உங்கள் பள்ளி. எப்போதும் நீங்களும் உங்க பரம்பரையும் அதே பழைய நினைப்புடன் அதே பதவிகளை பள்ளியில் தொடர்ந்து இருந்து பள்ளியை மென் மேலும் வளரவைக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-2656921578632615273?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/2656921578632615273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/09/ms-ms.html#comment-form' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/2656921578632615273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/2656921578632615273'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/09/ms-ms.html' title='Ms./ M.S.ராமூர்த்தி அய்யர் இரும்பு கடை!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-6275879831796255660</id><published>2011-09-16T22:17:00.019+05:30</published><updated>2011-09-17T19:48:30.598+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திமுகவின் வெற்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமச்சீர் கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மயிலாடுதுறையில் சிறை சென்ற சிங்கங்கள்!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-Fsw473qQBZI/TnSnsP8swjI/AAAAAAAABUM/DSK3kVXUe6s/s1600/DSC_0109.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-Fsw473qQBZI/TnSnsP8swjI/AAAAAAAABUM/DSK3kVXUe6s/s400/DSC_0109.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653327810894021170" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;போராட்ட வீரர்  திரு . வெற்றிச்செழியன் அவர்கள் "சமச்சீர்" வெற்றிச்செழியன் ஆகின்றார்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PNMZ7bTQvu4/TnOWh1AcoeI/AAAAAAAABUE/4rUTOL3_tiY/s1600/DSC_0079.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-PNMZ7bTQvu4/TnOWh1AcoeI/AAAAAAAABUE/4rUTOL3_tiY/s400/DSC_0079.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653027465188909538" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;நகர்மன்ற தலைவர் லிங்கராஜனுக்கு சமச்சீர் விருது வழங்குபவர் மாவட்ட செயலர் ஏ கே எஸ் விஜயன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;நடுவே கைதட்டி கொண்டு இருப்பது தான் ரங்கன்மாமா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Q6k8kry-CZk/TnOUKvhmiwI/AAAAAAAABT8/F9eD0pUfFYQ/s1600/DSC_0078.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-Q6k8kry-CZk/TnOUKvhmiwI/AAAAAAAABT8/F9eD0pUfFYQ/s400/DSC_0078.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653024869557111554" /&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;நகர செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ் சமச்சீர் விருது வாங்குகின்றார். அருகில் சீர்காழி மு.ச.ம.உ வக்கீல் பன்னீர்செல்வம்&lt;/b&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-wqEX5crxtkc/TnOStowynpI/AAAAAAAABT0/dB88fUQt_wQ/s1600/DSC_0085.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-wqEX5crxtkc/TnOStowynpI/AAAAAAAABT0/dB88fUQt_wQ/s400/DSC_0085.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653023270013935250" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;வக்கீல் சேயோன் அவர்களுக்கு சமச்சீர் விருது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-JJa_5qHDxF8/TnOOqx6VHFI/AAAAAAAABTs/cxgwgdGPflU/s1600/DSC_0093.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/-JJa_5qHDxF8/TnOOqx6VHFI/AAAAAAAABTs/cxgwgdGPflU/s400/DSC_0093.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653018822883744850" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியனுக்கு சமச்சீர் விருது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-L14uTrNE1Cw/TnOJZBk1qdI/AAAAAAAABTk/hhcKW70NKwI/s1600/DSC_0110.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-L14uTrNE1Cw/TnOJZBk1qdI/AAAAAAAABTk/hhcKW70NKwI/s400/DSC_0110.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653013020292786642" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;தம்பி சத்யாவுக்கு (நகர் மன்ற து. தலைவர்) சமச்சீர் விருது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-lllEEO7MoD0/TnOG8yxYKNI/AAAAAAAABTc/QbA8vIzVJtI/s1600/DSC_0086.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/-lllEEO7MoD0/TnOG8yxYKNI/AAAAAAAABTc/QbA8vIzVJtI/s400/DSC_0086.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653010336259254482" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;நா.முருகதாஸ் அவர்களுக்கு சமச்சீர் விருது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-blZ1CR18fAo/TnOEg_UjoJI/AAAAAAAABTU/w1-hzMl2LG0/s1600/DSC_0112.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/-blZ1CR18fAo/TnOEg_UjoJI/AAAAAAAABTU/w1-hzMl2LG0/s400/DSC_0112.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653007659568439442" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;செந்தில் என்கிற சண்முகம் (33வது வார்டு பிரதிநிதி) சமச்சீர் விருது வாங்கிகுகின்றார்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-EjMeFe6Hx5A/TnOA8rMTyyI/AAAAAAAABTM/2NZ4qYvnQ70/s1600/DSC_0100.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-EjMeFe6Hx5A/TnOA8rMTyyI/AAAAAAAABTM/2NZ4qYvnQ70/s400/DSC_0100.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5653003737154964258" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;நகர்மன்ற உறுப்பினர் ஆர். கே. சங்கர் அவர்கள் விருது வாங்கும் போது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/b&gt;&lt;div&gt;சமீபத்தில் நடந்த சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது கிட்ட தட்ட எல்லா ஊர்களிலும் கைது செய்து ஒரு கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்து விட்டுட்டாங்க. ஆனால் எங்க மயிலாடுதுறையில் மாத்திரம் அங்கு போராடிய அத்தனை பேரையும் கைது செய்து அட்மாஸ் திருமண மண்டபத்தில் அடைத்த போது எண்ணிக்கை கிட்ட தட்ட ஆயிரத்தை தாண்டிவிட்டது. கிட்டதட்ட எல்லோருமே ஒரு மஞ்சள் பையில் மூன்று செட் வேட்டி சட்டை துண்டு, உள்ளாடைகள், ஒரு ரப்பர் ஸ்லிப்பர் (சிறையில் தண்ணீர் தொட்டிகள் புழங்க வேண்டுமே அதற்காக) ஒரு சைபால் டப்பா (இதும் முன்னெச்சரிக்கை தான். அங்கே கூட்டம் அதிகம் இருக்கும். இரவில் ஒரே செல்லில் நாற்பது பேர் வரை படுக்க வேண்டி இருக்கும், அங்கே ஒரு டாய்லெட் இருக்கும், அதை ஒரு மண் சட்டி கொண்டு மூடி இருப்பாங்க. இரவு இந்த நாற்பது பேரில் யாருக்காவது "அவசரம்" எனில் ஒரு அதிலே தான் போக வேண்டும். அதை மீதி 39 பேரும் வேடிக்கை பார்ப்பாங்க என்னும் நினைப்பிலேயே வெட்கத்திலேயே வந்ததும் உள்ளே போயிடும். அந்த தொல்லைக்காகவே ஒரு  துண்டு எடுத்து தன் இரு கைகளாலும் மறைப்பு (விதை மறை காய் மறைவாங்க:-)) கட்டிக்கொண்டு போக வேண்டும். அந்த துர்நாற்றம் மீதி இருக்கும் 39 பேரின் தூக்கத்தையும் கெடுத்து விடும். அதனால் மாலை 5  மணிக்கு கொடுக்கப்படும் அச்சடித்த சோறு பட்டையையும் முள்ளங்கி சாம்பாரில் முள்ளங்கியை தூக்கி  எறிந்துவிட்டும் சாப்பிட்டு தட்டை கழுவி நம் செலில் வைத்துவிட்டு உடனே பொதுக்கழிப்பிடம் போய் முக்கி முக்கி வந்தவரை ஏதோலாபம் என போய்விட்டு தான் "ரோல்கால்" பக்கம் ஓட வேண்டும்.  முள்ளங்கி சாப்பிட்டாம் இரவு ஒன்னுக்கு வந்து தொலையும். அதே போல மாலை 4 மணிக்கு கொடுக்கும் கடலை உருண்டை அல்லது வ்ந்த கடலை ஆகியவற்றை மடித்த்து வைத்து கொண்டால் இரவு பசிக்கும் போது சாப்பிடலாம், அல்லது அங்கே மிசா கதைகள் பேசுக்கொண்டே சாப்பிடலாம். ரோல்கால் முடிந்து மாலை ஆறு மணிக்கு செல்லின் உள்ளே போனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தான் அந்த கதவு திறக்கப்படும். இப்படியாக ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் அடக்கி வச்சு அடக்கி வச்சு கான்ஸ்டிபேஷன் வந்து அது எல்லாம் முற்றி மூலவியாதி வருபவர்களும் உண்டு. அதே போல கழிப்பிடம் சுத்தமின்மையால் படை சொறி போன்றவைகளும் நூறு சத உத்தரவாதம். அதனால் தான் சைபால் டப்பா.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மேற்படி விஷயம் எல்லாம் ரங்கன் மாமா போன்ற போராட்ட பழங்கள் எல்லாம் சொல்ல சொல்ல சின்ன வயது போராளிகள்  குறித்து கொண்டனர். ஆனால் மதியம் இரண்டு மணி வாக்கில் "எல்லா ஊர்களிலும் வெளியே விட்டுகிட்டு இருக்காங்கப்பா" என தகவல் வர சிலர் அட்மாஸ் திருமண மண்டபத்தை விட்டு வெளியே வந்துவிட, மற்றவர்கள் " ஏய் மாப்ள கொஞ்சம் நில்லு. என் பையை வீட்டிலே கொடுத்துடு. அதான் நாங்க சாயந்திரம் வந்திடுவோம்ல" என சொல்லி  பையை கொடுத்தனுப்பிவிட்டனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் மால ஆறு மணி ஏழு மணி எட்டு மணி ஆனதும் ஒரு சப் இண்பெக்டர் வந்து ஒரு 45 பெயர்களை  படிச்சு, "நான் படிச்ச லிஸ்டுல இருக்குறவங்க மாத்திரம் இங்க இருங்க, மீதி எல்லாரும் ஓடுங்க" என சொல்ல ஒரே குழப்பம் அங்கே. இந்த 45 பேருக்கும் ஓரளவு புரிந்து போனது. "இங்க பாருங்கப்பா, இந்த 45 பேரும் உங்க செல் போனை எல்லாம் கொண்டு வந்து மேசை மேல வையுங்கப்பா என சொல்ல உடனே வக்கீல் சேயோன் அவரை நோக்கி " என்ன சார் விஷயம் என்னான்னு சொல்லுங்க" என கேட்க அவர் அதற்கு "உங்க 45 பேர் மேல வழக்கு போட்டிருக்கோம், அடிதடி, கொலைமுயற்சி, அரசாங்க ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்தல், அத்து மீறி கல்விக்கூடங்கள் மேல் நுழைந்ததும் இல்லாமல் மாணவர்களை தாக்கியும் பள்ளி சொத்தை சேதப்படுத்தியும்..." என அவர் அடுக்கி கொண்டே போக வக்கீல் சேயோன்... "சரி மொத்தம் எத்தனை செக்ஷன்? அதை சட்டுபுட்டுன்னு சொல்லுங்க. மாஜிஸ்ட்ரேட் கிட்டே எப்போ கொண்டு போகப்போறீங்க? அதுக்கு முன்ன நாங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு போன் செய்யனும்" என சொல்ல அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எல்லார் வீட்டிலிருந்தும் அதே மஞ்சள் பை வந்தது. அதற்குள் திமுக சீனியர் வக்கீல் முருகு. மாணிக்கம் அண்ணனுக்கு தகவல் போய் அவரும் வந்தார். "யார் உங்களுக்கு புகார் கொடுத்தது? யாரை கொலை செய்ய இவங்க முயற்சி செஞ்சாங்க? என வரிசையாக கேட்க "அதிமுக நகர செயலர் செந்தமிழன் கொடுத்த புகார்" என சொல்லப்பட்டது. இரவு உணவு போலீஸ் கொடுக்க தயாராக இருந்ததா இல்லையா என தெரியாது, ஆனால் நகர திமுக சார்பாக 5 இட்லி கொண்ட பொட்டலம் கொடுக்கப்பட்டது. இரவு இரண்டு மணி வரை பேச்சும், குழப்பமுமாக இருக்க ஒரு பஸ் கொண்டு வந்து எல்லோரும் ஏற்றப்பட்டனர். எங்கே போகிறோம் எதற்காக போகிறோம் என யாருக்கும் எதும் புரியவில்லை. இரவு இரண்டு மணிக்கு அந்த வாகனம் புழுதி கிளப்பி போகும் போது அந்த 45 பேரில் பலர் 24 மணி நேரம் முன்பாக அதே சாலையில் திமுக கொடிகள் கட்டிக்கொண்டும் , சுவர் விளம்பரம் செய்து கொண்டும் அடுத்த நாள் நடக்க இருக்கும் போராட்டம் பற்றி அதை வென்றெடுக்க வேண்டும் என்கிற வெறியுடன் வேலை செய்து விட்டு "உன்னிடம் காசு இருக்கா? என் கிட்டே 20 ரூபா இருக்கு, பத்து டீ வாங்கியாயேன்" என பகிர்ந்து குடித்த டீ ஞாபகம் வர வைத்தா டீக்கடை கடந்து போனது இவர்கள் பேருந்து. இரவு முழுக்க அப்படி கண் விழித்து விட்டு காலை 5 மணிக்கு போய் படுத்து 8 மணிக்கு போராட்டத்துக்கு வந்து இதோ இந்த இரவு 2 மணிக்கு எங்கே போகிறோம், எத்தனை நாள் சிறைவாசம் என தெரியாமல் போய் கொண்டு இருந்த அந்த திமுக தொண்டனுக்கு முகம் தான் சோர்வாக இருந்ததே தவிர இதயம் சிரித்து கொண்டு இருந்தது. தலைவனின் கட்டளையை போராட்டத்தை வெற்றியாக்கிய மமதை மனதில் எக்காளமிட்டு கொண்டிருந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பேருந்து போய் நின்ற இடம் ஒரு பெண் நீதிபதி வீடு. அவங்க வரிசையாக பெயரை படித்து விட்டு நீங்க இன்னன்ன குற்றம் செஞ்சு இருக்கீங்கன்னு புகார். இது சம்மந்தமா எதும் சொல்றீங்களா? என கேட்க வக்கீல் சேயோன் "கேஸ் ஆடுறோம்மா. ஏன்னா நாங்க எந்த குத்தமும் செய்யலை" என சொல்ல அதற்கு நீதிபதி அம்மையார் "அப்படின்னா உங்க எல்லாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கிறேன்" என சொல்ல டப்பு டுப்புன்னு எழுதிய பழுப்பு அரசாங்க காகிதம் மதிப்பிற்குரிய காகிதமாக ஆகி, அரசாங்க முத்திரை, பச்சை கையெழுத்து என அரசாங்க ஆவணம் ஆகியது. அதற்கு ஐந்து நிமிடம் வரை சாதாரண காகிதம் இப்போது ஒரு 45 பேரை சிறையில் அடைக்கும்  கொடிய வஸ்துவானது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பேருந்து திருச்சி மத்திய  சிறை நோக்கி போனது. காலை 6 மணிக்கு திருச்சி மத்திய சிறை. வரிசையாக பெயர்கள், அப்பா பெயர், அம்மா பெயர், சாதி, வீட்டு விலாசம், உட்பட சகல குறிப்பும் எடுக்கப்பட்டு கைரேகை உருட்டப்பட்டு, அரைஞான் கயிறு அறுக்கபட்டு, கையிலே போட்டிருந்த மோதிரம், கடிகாரம் கழட்டப்பட்டு, மூக்கு கண்ணாடி மட்டும் அணிந்த, வேட்டி சட்டை கட்டிய  அம்மண மனிதனாக உள்ளே போயினர் அந்த 45 உடன்பிறப்புகளும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு வாரம் பின்னர் ஜாமீனில் வெளியே வந்து இப்போது வழக்கு நடக்கின்றது. கடந்த 07/09/2011 அன்று அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் மாவட்ட செயலர் ஏ கே எஸ் விஜயன் தலைமையில் சிறை சென்ற சமச்சீர் தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும் கேடயமும் வழங்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நகரச்செயலர் குண்டாமணி என்கிற செல்வராஜ், நகர்மன்ற தலைவர் லிங்கராஜன், துணைத்தலைவர் தம்பி சத்யா, முன்னாள் ச.ம.உ ஜெகவீரபாண்டியன், நா. முருகதாஸ். ஆர்.கே.சங்கர்,  செந்தில் என்கிற ப. சண்முகம், நகர அவைத்தலைவர் டி எஸ் கே , வக்கீல் சேயோன், செட்டியார் சீனுவாசன், தங்கபாண்டியன், செந்தில் என எல்லோர் முகத்திலும் சிறைக்கு சென்று வந்த கவலை எதும் இல்லை. இனி அவர்களின் பெயர் முன்னே "சமச்சீர்" என்னும் பட்டம் தானாக ஒட்டிக்கொண்டது. யாரும் கொடுக்கவில்லை. தானாக வந்து ஒட்டிக்கொண்டது அந்த "சமச்சீர்" பட்டம்! வாழ்க அந்த உடன்பிறப்புகள்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-6275879831796255660?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/6275879831796255660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/09/blog-post_16.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/6275879831796255660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/6275879831796255660'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/09/blog-post_16.html' title='மயிலாடுதுறையில் சிறை சென்ற சிங்கங்கள்!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Fsw473qQBZI/TnSnsP8swjI/AAAAAAAABUM/DSK3kVXUe6s/s72-c/DSC_0109.JPG' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-8688119937112017599</id><published>2011-09-13T12:57:00.007+05:30</published><updated>2011-09-13T13:12:59.106+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வி.வி.கிரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜனாதிபதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆளுமை'/><title type='text'>திரும்பிப்பார்!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-EL2lbtQOkpA/Tm8Id51eMxI/AAAAAAAABTE/uhdpR6GZU_Y/s1600/20080801251503302.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 209px;" src="http://3.bp.blogspot.com/-EL2lbtQOkpA/Tm8Id51eMxI/AAAAAAAABTE/uhdpR6GZU_Y/s400/20080801251503302.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5651745367207588626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குடியரசுதலைவர் - ஜனாதிபதி தேர்தலுக்கு அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கூட ஓட்டு போட வேண்டும் என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரிந்திருக்கும் அளவுக்கு சில அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அப்பாடக்கர்களுக்கு ஏனோ தெரிவதில்லை, அல்லது தெரியாதது போல இருக்கின்றனர். ஏனனில் கலைஞரின் ஆதிக்கம் என்பது தமிழக மற்றும் இந்திய அரசியலில் தன் கணக்கை துவங்கிய வருடம் 1957. ஆம் 1957 முதலே சட்டமன்ற உறுப்பினர் இந்தியாவின் இந்த மூத்த பழுத்த அரசியல்வாதி. அதை சொன்னால் ஏனோ எட்டிக்காயாய் இருக்கின்றது சிலருக்கு. சமீப காலமாக கலைஞரை பற்றிய வசவுகள் இணைய ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் போது இப்போது கலைஞரின் பெருமைகள் அடங்கிய ஒரு எஸ் எம் எஸ் சுற்றி வருவது கலைஞர் எதிர்ப்பாளர்களுக்கு எரிச்சலை உண்டு செய்துள்ளது. சமகால அரசியல் நிகழ்வுகளையே அரைத்து கொண்டிருப்பவர்களிடம் நான் சொல்கிறேன், அதே கலைஞரின் வார்த்தைகளில் .... திரும்பிப்பார்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல  வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின்  தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில்  ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும்  நேருவுக்கு நேரவில்லை அப்போது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி  முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு  இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர்  ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதோ இந்த பதிவிற்கு காரணமாக இருந்த   எஸ் எம் எஸ் செய்தி!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;\\கோடிக்கணக்கான ரசிகர்கள்&lt;/div&gt;&lt;div&gt;70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்&lt;/div&gt;&lt;div&gt;80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்&lt;/div&gt;&lt;div&gt;1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்&lt;/div&gt;&lt;div&gt;1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்&lt;/div&gt;&lt;div&gt;500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்&lt;/div&gt;&lt;div&gt;75 திரைப்படங்கள்&lt;/div&gt;&lt;div&gt;72 ஆண்டுகால பொது வாழ்க்கை &lt;/div&gt;&lt;div&gt;70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்&lt;/div&gt;&lt;div&gt;65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு&lt;/div&gt;&lt;div&gt;60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி&lt;/div&gt;&lt;div&gt;50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்&lt;/div&gt;&lt;div&gt;18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர் &lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை&lt;/div&gt;&lt;div&gt;3 தமிழின் நாயகன்&lt;/div&gt;&lt;div&gt;என்றும் தமிழினத்தின் தலைவர்&lt;/div&gt;&lt;div&gt;ஒரே கலைஞர் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது ஆரம்பித்த கலைஞரின் ஆளுமை,  குடியரசு தலைவர் தேர்தலில் இன்று வரை தொடர்கின்றதே, அது பற்றியும் இந்த பதிவிலே சொல்ல ஆசை தான். பதிவின் நீளம் கருதி அதை எல்லாம் தனிப்பதிவாக இட இருக்கின்றேன்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றி: திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 ஆசிரியர் ஆர். முத்துக்குமார் மற்றும் பழகிய பழைய திமுக பெரியவர்கள்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-8688119937112017599?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/8688119937112017599/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/8688119937112017599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/8688119937112017599'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/09/blog-post.html' title='திரும்பிப்பார்!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-EL2lbtQOkpA/Tm8Id51eMxI/AAAAAAAABTE/uhdpR6GZU_Y/s72-c/20080801251503302.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-1431176594082483591</id><published>2011-08-07T09:32:00.003+05:30</published><updated>2011-08-07T09:47:19.019+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அகங்காரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிய தலைமை செயலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயா'/><title type='text'>புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-ubn9IxezGEE/Tj4Q__1HEiI/AAAAAAAABR0/OIvS8iUQfPM/s1600/07_TH_SECRETARIAT_746276f.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 245px;" src="http://3.bp.blogspot.com/-ubn9IxezGEE/Tj4Q__1HEiI/AAAAAAAABR0/OIvS8iUQfPM/s400/07_TH_SECRETARIAT_746276f.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5637962475166437922" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;(நன்றி: தி ஹிண்டு, எஸ். ஆர். ரகுநந்தன், தி ஹிண்டு 7.8.2011&lt;/span&gt;)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இன்றைய "தி ஹிண்டு" நாளிதழில் ஒரு அருமையான போட்டோ இட்டு ஒரு கட்டுரை வந்துள்ளது. &lt;a href="http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2331534.ece?homepage=true"&gt;அதன் லிங் போக இங்கே அமுக்கவும்.&lt;/a&gt; அதாவது திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், சென்னை மத்தியில் ஒரு முக்கியமான இடத்தில் எபடி இப்போது சீரழிந்து வருகின்றது என்பதற்கு சாட்சியாக அந்த கட்டுரை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நேற்று நம் சக பதிவரான சக்தி செல்வி அவர்கள் கூட இது சம்மந்தமான ஒரு விஷயம் கூகிள் பஸ்ல்  பகிர்ந்து கொண்டார்கள். &lt;a href="https://plus.google.com/103562574710899518021/posts/D8vp74M4dGH"&gt;அதன் சுட்டிக்கு செல்ல இங்கே அழுத்தவும். &lt;/a&gt;அந்த புதிய தலைமை செயலகத்தின் சிறப்புகள் பற்றி முன்பே ஒரு சக பதிவர் திரு. கீதப்பிரியன்  எழுதிய &lt;a href="http://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_17.html"&gt;ஒரு லிங் போக இங்கே அழுத்தவும்.&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;புதிதாக அமைந்த அதிமுக அரசு மாணவர்கள் மீது அதன் பெற்றோர்கள் மீது தன் ஈகோவை  செலுத்துவது  ஒரு பக்கம் இருக்கட்டும்.பரவலாக எல்லா நடுநிலைவாதிகளாலும் இது இப்போது இந்த சமச்சீர் கல்வி விஷயத்தில் தெரிந்து விட்டது. ஆனால்  அதே போலவே தான் மற்ற எல்லா விஷயங்களிலும் நடந்து கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு சாதாரண வீடு கூட ஒரு வாரம் பூட்டிவிட்டு வெளியூர்  சென்றார்களேயானால் அங்கே வெளிச்சமோ, ஆள் நடமாட்டமோ இல்லையெனில் பெருச்சாளி புகுந்து நாசம் செய்யும்.  அதுவும் அந்த கட்டிடத்தின் உள்ளே  இருக்கும் மீன் தொட்டி மீன்கள் எல்லாம் இன்னேரம் பூனை சாப்பிட்டிருக்கும். ரொம்ப மனசுக்கு கஷ்டமான ஒரு விஷயம். எது எதுக்கோ போராட்டம் நடத்தும் திமுக இதற்காக நடத்தாமல் இருப்பது ஏன் என்று  தெரியவில்லை. அந்த கட்டிடம் இருட்டாக இருட்டாக அந்தம்மாவின் அகங்காரம் வெளிச்சம் போடப்படுது மக்கள் மனதிலே, அதனால அப்படியே போகட்டும்னு விட்டுட்டாங்க போலிருக்கு:-(  ஒரு பொதுவான நடுநிலைவாதிகளும், அதிமுக ஆட்சியை தாங்கிப்பிடிக்கும் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும் கூட  இந்த விஷயத்தில் இப்படி வேதனைப்படுவது என்றால் அந்த கட்டிடத்தின் நிலை என்ன இப்போது என நன்றாக உணர முடிகின்றது:-(&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு தலைமைச்செயலக கட்டிடத்தை தன் சொந்த ஈகோவால் இப்படி பாழ் செய்யும் அந்த கட்டிடத்தை "வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் " என ஆலோசனை கேட்டு "தி ஹிண்டு" அறிவிக்கும் அளவு நம் வரிப்பணம் என்பது நாதியற்றுப்போனதை நினைத்து வேறு வழியில்லை... அமைதியாக அழத்தான் முடியும்.... தலைமைச்செயலக மீன் தொட்டியில் இருக்கும் மீன்களைப்போல. தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நேற்று திருவாரூர் பொதுகூட்டத்திலே துரைமுருகன் பேசிய பேச்சு:&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;\\ அந்த புதிய தலைமை செயலகம் கட்டும் போது ஒரு நாள் கலைஞர் எங்களிடம் "தினம் தினம் என் ரூமையே கொண்டு வந்து காட்டுகின்றீர்களே, அந்தம்மா ஜெயலலிதா - எதிர்கட்சி தலைவர் ரூமை கொண்டு போய் காட்டுங்கய்யான்னு சொல்ல அந்த சர்க்கர நாற்காலி அங்கே திருப்பப்பட்டது. அந்த ரூமுக்கு வெளியே "கோ க மணி அறைக்கு போகும் வழி" என ஒரு அம்புக்குறி போடப்பட்டு அந்த அம்பு இந்த அம்மையார் ரூமை சுட்டிகாட்டுவது போல அம்புபாய்வது போல இருந்தது, உடனே இவர் "முதலில் அந்த அம்புக்குறியை அகற்றிவிட்டு ஜெ.ஜெயலலிதா என்ற போர்டை மாட்டுங்கப்பா என உத்தரவிட்டுவிட்டு உள்ளே போய் பார்த்து விட்டு "இது போதாது, இன்ன்னும் ரெண்டு ரூம் போடுங்க, என் அறை முதல்வர் அறை எப்படி இருக்கோ அதே போலத்தான் அந்தம்மா அறையும் இருக்க வேண்டும்" என உத்தரவிட்டார்...\\ ஊடகங்கள் நேற்று திருவாரூரில் அதே கூட்டத்தில்  கலைஞர் சொன்னது போல "கோந்து" போட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கின்றன. ஹூம்... வாழ்க ஜனநாயகம்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  &gt;புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!&lt;/span&gt;&lt;/b&gt;!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-1431176594082483591?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/1431176594082483591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/1431176594082483591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/1431176594082483591'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/08/blog-post.html' title='புதிய தலைமை செயலகத்தின் இருட்டு ஜெயாவின் அகங்காரத்துக்கு போடப்பட்டுக் கொள்ளப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்பு!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ubn9IxezGEE/Tj4Q__1HEiI/AAAAAAAABR0/OIvS8iUQfPM/s72-c/07_TH_SECRETARIAT_746276f.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-905734490757906570</id><published>2011-07-18T02:27:00.009+05:30</published><updated>2011-07-18T14:46:28.719+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமச்சீர்கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தளபதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுழல்நிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டாலின்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சுழல்நிதி (வருங்கால முதல்வர்) S/o கருணாநிதி (முன்னாள் முதல்வர்) - ரங்கன் மாமா அதிரடி பேட்டி!!!</title><content type='html'>&lt;div&gt;தேர்தல் ரிசல்ட் வந்த பின்னே ரங்கன் மாமாவை பார்த்தது. நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என நினைத்து கொண்டிருந்த போதே "என்ன மாப்ள? புது ஆட்சி எப்படி இருக்கு?" என கேட்டபடி வந்தாரு. "அடடே என்ன மாமா நானே உன் கிட்டே கேட்க இருந்தேன். அதை நீ என்கிட்டே கேக்குறியே. சரி திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கு? திமுகவின் தலைமைக்கு அடுத்தது யாரு? திமுக மேலே கேஸ் எல்லாம் எப்படி போகுது? சமச்சீர் கல்வி பத்தி உன் கருத்து என்ன மாமா? என கேட்டதும், "என்ன மாப்ள, என்னை கைரேகை பார்ப்பவன் ரேஞ்சுக்கு ஆக்கிட்ட. சரி உனக்கு என்ன என்ன கேட்கனுமே வரிசையா கேளு. தெரிஞ்சா சொல்றேன்" என சொல்ல வரிசையா கேட்க ஆரம்பிச்சேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா:&lt;/span&gt;&lt;/b&gt; போன ஆட்சில கலைஞர் ஆட்சியிலே சிறந்த திட்டம் எது மாமா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;ரங்கன்:&lt;/b&gt;&lt;/span&gt; ஒரு ரூபாய் அரிசி திட்டம் தான் மாப்ள! இனி உலகில் யாராலும் ஒரு ரூபாய்க்கு அரிசி போட முடியாது. உலகிலேயே கலைஞர் மட்டுமே திரும்பவும் சொல்றேன் உலகிலேயே  மிகக்குறைந்த விலையில் அரிசி இனி எவனாலும் வியாபாரம் செய்ய முடியாது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;அபிஅப்பா:&lt;/b&gt;&lt;/span&gt; ஹி ஹி மாமா முதல் கேள்வியிலேயே நீங்க அவுட் மாமா. அதான் இந்தம்மா அதை சும்மாவே போடுதே. பின்னே என்ன ரொம்ப பெருசா அலட்டிகிறீங்க?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்&lt;/span&gt;&lt;/b&gt;: மாப்ள! நான் சொல்றதை நல்லா கவனி. அந்தம்மா போடுவது இலவச அரிசி. அது ஏற்கனவே இருந்த ஒரு திட்டம். அனாதை அரிசி திட்டம். அனாதைகளுக்கு ஓ ஏ பி திட்ட அரிசி என மாதம் பத்து கிலோ இலவசம் உண்டு. இந்தம்மா செஞ்சது அந்த திட்டத்தின் விரிவாக்கம் மட்டுமே. இப்ப மதிய உணவு கொண்டு வந்தது யாரு? காமராசர். அதை இன்னும் விரிவா செயல்படுத்தியது பாரு? எம் ஜி ஆர். அதை முட்டை, வாழைப்பழம் என சத்துணவா ஆக்கினது கலைஞர். அதாவது காமராசர் கொண்டு வந்த ஒரு திட்டத்தின் விரிவாக்கம் தான் அது. அதே போல ஓ ஏ பி அனாதை அரிசி திட்டத்தின் விரிவாக்கம் தான் இது.ஆகவே அதன் கிரடிட் முன்னாள் முதல்வருக்கு மட்டுமே போகும். மத்தபடி நான் மேலே சொல்லியிருப்பதை கவனி. குறைந்த விலையில் ஒரு ரூபாய்க்கு அரிசி &lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;'விற்பனை&lt;/span&gt;&lt;/b&gt;" செய்தது கலைஞர் மட்டுமே. இனி அந்தம்மா வந்து நான் 50 பைசாவுக்கு போடுகிறேன் என சொன்னாலும் செல்லாது. ஏன்னா 50 பைசாவே இனி செல்லாது என்கிற போது அந்த 50 பைசாவுக்கு ஒரு கிலோ என்று சட்டப்படி கொண்டு வர முடியாது:-))&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு ரூபாய்க்கு அரிசி என்ற போது புழுத்து போன அரிசியை ஒரு ரூபாய்க்கு விற்று அதையும்வாங்கி தின்னும் அளவு மக்களை ஏழைகளாக வைத்திருப்பவர் கருணாநிதி என மேடையில் முழங்கிய சீமான்கள் இப்போது "அனாதைகளை அதிகமாக்கிய அம்மா வாழ்க" என முழங்கினாலும் ஆச்சர்யம் இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா:&lt;/span&gt;&lt;/b&gt; இப்படில்லாமா எடக்கு மடக்கா சிந்திப்பீங்க? சரி விடுங்க. மாமா, திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? திமுகவின் அடுத்த தலைமை எப்படி அல்லது யார்? எதிர் வரும் பொதுக்குழுவிலே எதுனா காரசாரமா இருக்குமா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்:&lt;/span&gt;&lt;/b&gt; திமுகவின் எதிர் காலம் எப்படி இருக்கும் என இப்ப நேத்து இல்ல. 1957  முதலே கேட்டுகிட்டு தான் இருக்காங்க. 1957 முதன் முதலாக திமுக தேர்தலை சந்தித்தது. அப்போ திமுக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை தெரியுமா? சொன்னா நம்ப மாட்ட. இதோ இப்ப போட்டியிட்டோமே 124 தொகுதிகள்... அதே நம்பர் தான். திமுக முதன் முதலாக போட்டியிட்ட தொகுதி 124. அதிலே ஜெயிச்சது 15, அப்போ பார்லிமெண்ட்க்கு 11 தொகுதில நின்னு 2 தொகுதில ஜெயிச்சோம். அப்போ காங்கிரஸ்காரன் எல்லாம் திமுகவின் எதிர்காலம் என்ன? என கேட்ட தொணிக்கும் இப்போ அதே போல 124 தொகுதில நின்னு 24 ஜெயிச்ச போது நீ திமுகவின் எதிர்காலம் என்ன என்று கேட்கும் தொணிக்கும் வித்யாசம் இருக்கு. அப்போ திமுகவின் அசுர வளர்ச்சியால் கேட்டாங்க மத்தவங்க. இப்ப திமுகவின் மீதான ஒரு சலிப்பினால் நீ கேட்கிறாய் திமுகவின் எதிர்காலம் என்ன என்று. நான் உறுதியா சொல்றேன் கேளு. திமுக தன் அடுத்த தலைவனை தானே தேர்ந்தெடுத்து கொண்டு விட்டது. அவன் தலைமையிலே பீடு நடை போடத்தொடங்கியாச்சு. திமுகவுக்கு அழிவு என்பதே இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தேர்தல் போரில் "தளபதி"யாக இருந்த நம் ஸ்டாலின் இன்று படைக்கு தலைமை ஏற்கும் நிலைக்கு தானாகவே வந்தாகிவிட்டது. மலை குலைந்தாலும் நிலை குலையாத என் தலைவன் எந்த தேர்தல் தோல்வியிலேயும் அடுத்த நாள் புள்ளி விபரம் கொடுத்து தொண்டனை துவளச்செய்யாத தலைவன் அமைதி காக்கும் நேரம்... என்ன செய்வது என தொண்டன் குழம்பிய நேரம் தளபதி ஸ்டாலின் தன் தொகுதி மக்களை காண நன்றி சொல்ல எப்போ துண்டை முறுக்கி தோளிள் போட்டு கொண்டு கிளம்பினானோ அந்த நேரம் மிகச்சரியாக குறிப்பிட்டால் அந்த நேரம்  அவன் எம் தலைவனாகிவிட்டான். "ராஜா வீட்டு கன்னுக்குட்டி எஜமான் ராஜாவாக இருக்கும் போது மட்டும்  துள்ளும், ஆனால் நான்  காயம் பட்ட தலைவனின் தளபதி.. இப்போது அதிகமாக என் கடமையை செய்வேன் என சீறிக்கிளம்பினானோ.. எம் கட்சிக்கு அடுத்த தலைவன் உண்டாகிவிட்டான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தனக்கு கட்சிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட போதும் சரி, ஆட்சிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட போதும் சரி தனக்கான பதவியை அலங்கார நாற்காலியாக பயன் படுத்தாமல் முள்கிரீடமாக அணிந்து சுற்றி சுழண்டு வந்தானே  இதோ என் அடுத்த தலைவன் தயாராகிவிட்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாப்ள! உனக்கு ஒரு சேதி தெரியுமா? தெஷ்ணாமூர்த்தி கருணாநிதி ஆனார். ஆனால் அவரை தவிர அவர் பெற்ற பிள்ளைகளுக்கு நிதி விகுதி இல்லை. முத்து,அழகிரி, ஸ்டாலின், தமிழரசு... இவைகள் தான் பெயர். ஆனால் தன் பேரப்பசங்க எல்லாருக்கும் நிதி விகுதி உண்டு. கலைஞரே தன் மகன்களுக்கு நிதி விகுதி கொடுக்காவிட்டால் என்ன, நாங்கள் தருகிறோம் நிதி விகுதி என நினைச்சாங்க .. யார் திமுக தொண்டர்களா? இல்லை... தமிழக பெண்கள். ஆமாம் எப்போ அவர் 385 மணி நேரம் நின்று கொண்டே தமிழக தாய்குலங்களுக்கு "சுழல் நிதி"  கொடுத்தாரோ அன்றே அவர் நிதி விகுதிக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். ஆமாம் இனியும் அவர் நமக்கு தளபதி இல்லை. &lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;"தலைவன் சுழல்நிதி(எதிர்கால முதல்வர் ) S/o கருணாநிதி( முன்னாள் முதல்வர்)"&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா&lt;/span&gt;&lt;/b&gt;: என்ன மாமா திடீர்ன்னு பட்டம் எல்லாம் குடுத்துட்டீங்க? சுழல்நிதி கொடுத்தாரு. அது ஒரு அரசு திட்டத்தின் ஒரு செயல்பாடு அத்தனையே. அதுக்கு ஏன் அத்தனை ஒரு முக்கியத்துவம்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்:&lt;/span&gt;&lt;/b&gt; மாப்ள! பட்டம் என்பது ஒரு பேப்பரில் அச்சடித்து கண்ணாடி சட்டம் போட்டு சால்வை போர்த்தி கையிலே கொடுப்பது மட்டும் இல்லை. ஒரு ஸ்பார்க். ஒரு பொறி தான். அதுவே பட்டமாக ஆகும் வரலாறு திமுகவில் நிறையவே உண்டு. "நடமாடும் பல்கலைகழகம்" என அண்ணா ஒரு மேடையில் சொன்னார் எங்கள் நெஞ்செழியனை பார்த்து. அது பட்டமாகிப்போனது. அது போலவே "நாவலர்". அதே போல ஒரு முறை மனோகரனை " வாய்யா நாஞ்சிலாரே" என அழைத்த போது அன்று முதல் அவர் நாஞ்சிலார் ஆனார். இது போல இப்போது கூட கலைஞர் ஒரு மேடையில் பெரியசாமியை "இவர் என் முரட்டு பக்தர்" என சொன்னது பட்டமாகி போனது. இதே தளபதி ஒரு பொதுக்கூட்டத்தில் அய்யா பெரியார், அண்ணாதுரை ஆகிய பெயர்களை கலந்து எனக்கு அய்யாதுரை என முதலில் பெயர் சூட்டினார் தலைவர் என பேசப்போக அது கூட இப்போது தளபதிக்கு பட்டமாகிப்போனது. நான் இப்போது சொல்கிறேன். தலைவர் சுழல்நிதி, தலைவர் சுழல்நிதி, தலைவர் சுழல்நிதி வாழ்க வாழ்க வாழ்க!&lt;/div&gt;&lt;div&gt;மாப்ள! நீ சொல்வது போல சுழல்நிதி என்பது மகளிர் சுய உதவிக்குழுவின் ஒரு சாதாரண செயல்பாடு தான். ஆனால் அதையே அசாதாரணம் ஆக்கியது தலைவர் சுழல்நிதி அவர்கள்!நல்லா நினைச்சுப்பாரு. என் தலைவன் சுழல்நிதி 385 மணி நேரம் நின்று கொண்டே அந்த நிதி ஒரு ஒரு பெண்ணுக்கும் சுய உதவி குழு பெண்ணுக்கும் வழங்குகிறார். அப்படின்னா எத்தனை தொகை வழங்கி இருப்பாரு சொல்லு பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;அபிஅப்பா&lt;/b&gt;&lt;/span&gt;: தெரியலையே மாமா. எத்தனை கோடி இருக்கும்? அப்படி எத்தனை பெண்களுக்கு குடுத்து இருப்பாரு. ம்ம் டேட்டா கலக்ட் பண்ணிட்டு சொல்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்:&lt;/span&gt;&lt;/b&gt; மாப்ள! நாம என்ன இந்தியாவோட பட்ஜெட்டா போடப்போறோம் நம்ம அப்பச்சி மாதிரி. பக்கத்துல இருக்கும் பி ஏவை கேட்கனுமா இதுக்கு? இப்படித்தான் பாரதியாரு ஒரு தெருக்கூத்து பார்த்துகிட்டு இருந்தாரு. அப்போ மகாராஜா மந்திரியை பார்த்து " மந்திரி மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என கேட்க கூட்டத்தில் இருந்த பாரதி " அந்த எழவு கூட தெரியாம நீ என்னத்துக்கு நாட்டை ஆண்டுகிட்டு இருக்கே"ன்னு சத்தம் போட்டு கத்திகிட்டே எந்திரிச்சு போயிட்டாரு. அது போல நாம திமுககாரன்!  தானே கணக்கு போட்டுக்கனும். அப்பச்சி வாயால கணக்கு போடுறாருன்னா நாம கண்ணால கணக்கு போடனும் மாப்ள. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்ப தலைவர் சுழல்நிதி 385 மணி நேரம் நின்னுகிட்டே சுழல்நிதி தலா பத்தாயிரம் கொடுத்தாரு. இது மேட்டரு. 385 மணி நேரம்ன்னா 23000 நிமிஷம் ஆச்சு. அதாவது கிட்ட தட்ட 14 லட்சம் வினாடி ஆகுது. ஒரு துணை முதல்வர் ஒரு பெண்மணிக்கு நேரிடையா நிதி கொடுக்க 3 வினாடிக்கு மேல அதிகாரிங்க விட மாட்டாங்க தானே. அப்படின்னா நாலே முக்கால் லட்சம் பெண்களுக்கு கொடுத்திருக்காரு. அதாவது அதையும் தாண்டி பயனாளிகள் இருக்கலாம். ஆனா அவரு நேரிடையா கொடுத்த பெண்கள் 5 லட்சம் ஆகுது. ஒருத்தருக்கு பத்தாயிரம்னா 500 கோடி ரூபாய் வருது மாப்ள! அதாவது 5 லட்சம் குடும்ப பெண்கள் இது வரை 2 ரவுண்டு வாங்கி திருப்பி குடுத்தாச்சு. அப்படின்னா 1500 கோடி ரூபாய் சுத்தி வந்துடுச்சு. 1500 கோடி ரூபாய் பணப்புழக்கம் தமிழகத்துல இருந்துச்சுன்னா.. அதும் குடிக்காத அதாவது மதுஅருந்தாத பெண் இனத்து வசம் 1500 கோடி சுத்துச்சுன்னா..... இப்ப சொல்லு மாப்ள... நம்ம தலைவர் சுழல்நிதி தானே? மாசத்துக்கு 30 நாள். அவர் பொண்டாட்டி புள்ளய்ங்க கூட இருப்பது 4 நாள். மீதி நாள் எல்லாம் தமிழகத்தில் மூலை முடுக்கு எல்லாம் சுற்றி சுழண்ட சுழல்நிதி தானே அவரு? இப்ப சொல்லு.. தவிர எனக்கு தெரிஞ்சு எத்தனை பெண்கள் ஒயர் கூடை பின்றாங்க, முறுக்கு சுட்டு விக்கிறாங்க, கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு போய் புளிசாதம் பொட்டலம் 10 ரூபாய்க்கு விற்கும் பெண்கள் எனக்கு தெரியும். அத்தனை ஏன்? யாரோ சொன்ன மாதிரி "வெறும் கை என்பது கோழைத்தனம்.. விரல்களே மூலதனம்"ன்னு சொன்ன மாதிரி ஒரு மாற்றுத்திறனாளி பொண்ணு இந்த போன் கார்டு எல்லாம் 5 மொபைல் போன் வாங்கி வச்சுகிட்டு அதுக்கு போன் செஞ்சா போதும் ராத்திரி ஆனாலும் சரி "ஈசி" பண்ணிட்டு (அடுத்த நாள்  அதுவே வந்து காசு வாங்கிக்கும்) தினத்துக்கு 250 ரூவா சம்பாதிக்குது. அதுக்கு போன், விரல்... சுழல்நிதி இதான் மூலதனம்.. தான் வாழ எவனையும் நம்பலை அது!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா:&lt;/span&gt;&lt;/b&gt; வாவ்... மாமா ஒரு திட்டத்தின் மதிப்பீட்டு தொகையை இப்படிக்கூட மதிப்பீடு செய்யலாமா? அதல்லாம் சரி மாமா. சுழல்நிதி என்பது எல்லாம் சரி தான். இந்தம்மா நாளைக்கே சும்மா இருக்காது. எதுனா கேஸ் போடும் .உள்ள வைக்கும். அப்ப வலையுலகம் வலையுலகம்னு ஒன்னு இருக்கு. அதுல மணீஜி மணீஜின்னு ஒருத்தர் இருக்காரு. மாயவரத்தான்னு நம்ம ஊர்காரரு இருக்காரு. உடனே சுழல்நிதி இப்போ புழல்நிதி ன்னு ட்விட்டுவாங்க. உடனே அதை ஆனந்தவிகடன்ல போட்டு ஆனந்தப்படுவாங்களே மாமா!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்&lt;/span&gt;&lt;/b&gt;: படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதினவன் ஏட்டை கெடுத்தான். எனக்கு உங்க உலகம் எல்லாம் தெரியாது. ஆனா ஒன்னு! தப்பு செஞ்சா தண்ணி குடிக்கனும். வைக்கோவை சைக்கோன்னு சொன்னீங்கதானே! அப்ப சிரிச்சோம் தானே ரைமிங்கா இருக்கேன்னு. அப்படின்னா இதையும் எதிர்கொள்ளனும் தான். அதை விட நாங்க பாளையங்கோட்டை இருக்கும் திசை நாங்கள் வணங்கும் இடம் என பாசிட்டிவா ஆக்கினோம்ல.  அது போல எதுனா போராட்டத்துலே தலைவன் புழலுக்கு போனா நீ முதல்ல போஸ்டர் அடிச்சு ஒட்டு  "தாய்குலத்தின் சுழல்நிதியே, கருணாநிதி பெற்றெடுத்த புழல்நிதியே"ன்னு அடிச்சு ஒட்டு. அதை பாசிட்டிவா ஆக்கு! தேர்தலில் தோற்றோம் என என்றைக்காவது நாம சொல்லியிருக்கோமா? வெற்றி வாய்ப்பை இழந்தோம்னு தானே சொல்ல நமக்கு அண்ணா கத்து கொடுத்திருக்காரு!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா:&lt;/span&gt;&lt;/b&gt; சரி மாமா! இந்த சமச்சீர் கல்வி பத்தி...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்&lt;/span&gt;&lt;/b&gt;: மாப்ள! இந்த சமச்சீர் கல்வி இருக்கே. அது பத்தி நிறைய பேசலாம். யார் வேணா பேசலாம். ஏன்னா இப்போ கேஸ் கோர்ட்டிலே இருக்கு. கேஸ் கோர்டிலே இருக்கும் போது அதுசம்மந்தமா பேசக்கூடாது என சொல்ல நான் என்ன அப்பச்சியா?இல்லாட்டி அர்ஜூன் சம்பத்தா? இல்லை அப்படி பேசினா கண்டம்டு ஆஃப் கோர்டுன்னு ஜெயலலிதாவை பிடிச்சு உள்ள போட்டுச்சா கோர்ட்டு. இல்லாட்டி நித்யானந்தாவை பிடிச்சு உள்ள போட்டுச்சா கோர்ட்டு. அதானால பேசுவோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல்ல சமச்சீர் கல்வின்னா என்னான்னு பார்க்கனும். ஒரு நாலு வருஷம் கல்வியாளர்கள் வச்சுகிட்டு இப்ப நம்ம ஸ்டேட் போர்டு பசங்க படிக்கும் படிப்பும், மெட்ரிக் பசங்க படிக்கும் படிப்பும் ஒன்னா இருக்குதா? அது போல சி பி எஸ் சி படிப்பு எப்படி இருக்கு? சரி சி பி எஸ் சி படிப்பு நமக்கு இப்போ கணக்கிலே எடுத்துக்க வேண்டாம். ஏன்னா ஏற்கனவே நாம நவோதயா பள்ளி எல்லாம் உள்ளே விடலை . அதை இப்போ விட்டுடுவோம்.அந்த கச்சேரி தனியா வச்சுப்போம். தனியார் மெட்ரிக் பள்ளியிலே படிக்கும் மாணவனும் நம்ம ஸ்டேட் போர்டு மாணவனும் ஒரே படிப்பை படிச்சுட்டு பொது தேர்வு +2 எழுதுறாங்களா? இதிலே கிராமத்தில் இருந்து படிச்சுட்டு வரும் நம்ம மாணவன் பின் தங்கி போறானா? என்பதை எல்லாம் விடு மாப்ள! ஆனா படிப்பின் தரம் என்ன என்பது தான் இந்த சமச்சீர் கல்வியிலே முதல் ஆய்வா எடுத்துகிட்டாங்கன்னு சொல்றாங்க. எல் கே ஜியிலேயே பத்து புத்தகம் 6 வது படிக்கும் மெட்ரிக் மாணவனுக்கு ஸ்டேட் போர்டிலே படிக்கும் 11 வது படிக்கும் மாணவனுக்கு இருக்கும் பாடம் எல்லாம் வருது என்பது முதல்ல பசங்களுக்கு படிப்பின் மீது ஒரு வித அயற்சியை தான் கொடுக்குதுன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. அதனால அவனுக்கு குறைச்சிடு. இவனுக்கு கொஞ்சம் தூக்கிடு. எல்லாம் ஒரே பாடம் படிக்கட்டும். அப்போ நீ படிக்கும் போது 3வது படிக்கும் போது தான் ஏ, பி, சி, டி படிச்சே. இப்போ எல் கே ஜி யிலே படிக்க சொல்றாங்க. ஏன் அப்போ படிச்சவனுக்கு அறிவில்லாம போச்சா? இல்லை. நாங்க தமிழின் 247 எழுத்தும் எழுதுவோம். படிப்போம். ற, ர உச்சரிப்பு பயிற்சி பெற்றோம். முதல்ல நம்ம மொழி படிச்சோம். ஒரு குழந்தை தன் தாய்மொழியிலே 247 எழுத்தும் படிச்சு முடிக்கும் போது அதன் மூளை மடிப்பு ஆழம் அதிகமாச்சு. பின்னே நாங்க ஆங்கில எழுத்து 26 படிக்கும் போது அது சுலபமா இருந்துச்சு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; பாடத்திட்டம் அதிகப்படுத்துவதால மட்டும் மூளையின் மடிப்பு ஆழத்தை அதிகப்படுத்தி விட முடியாது. முடியவே முடியாது. மூளையின் மடிப்பின் ஆழம் அதிகமாக்க அதிக சுமை கொடுத்து அவனை அயற்சியாக்குவதை விட அவன் அந்த குழந்தையின் மூளை எத்தனை சக்தி தாங்கும் என அறிந்து அதை "விளையாட்டாக" சொல்லி கொடுக்கனும். தனியார் பள்ளியும் அரசாங்க பள்ளியும் ஒரே பாடமா படிக்கனும். அதே நேரம் கல்வியின் தரம் முன்பை விட அதிகமா இருக்கனும். இதல்லாம் கணக்கில் வச்சு தான் அந்த பாடத்திட்டம் தயாராச்சு. அதுக்கு மசோதா,சட்டம் போன்ற சடங்கு சம்பிரதாயம் எல்லாம் செஞ்சு பின்னே உயர்நீதி மன்றம் போய் பின்னே அது சரி என அவங்களும் சொல்லி எல்லாம் முடிஞ்சு 200 கோடிக்கு புத்தகமும் அடிச்சாச்சு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்போ இந்த அரசாங்கம் வந்து எல்லாம் சரியில்லைன்னு ஒரு 24 மணி நேரத்தில் முடிவெடுத்து இப்போ உச்சநீதிமன்றம் போய் அவங்க தமிழக அரசை "ஒரு குழு அமைச்சு அந்த பாடதிட்டம் எல்லாம் சரியான்னு ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுக்க சொல்லுங்க.அதும் ரெண்டு வாரத்திலே. அதாவது நாலு வருஷம் செஞ்ச ஆராய்சியை 2 வாரத்தில்... பின்னே ஒரு வாரம் தினமும் இதை விசாரிச்சு 22 வது நாள் தீர்ப்பு சொல்லனும். அதும் இங்க வரக்கூடாது. எங்க இதன் ஆரம்ப சடங்கு சம்பிரதாயம் எல்லாம் நடந்துச்சோ அங்க தான் வச்சுக்கனும் கச்சேரியைன்னு சொல்லியிருக்கு. சரி ஒத்துக்கறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடனே என்ன செஞ்சு இருக்கனும் தமிழக அரசு. கல்வியாளர் குழு அமைச்சுது. யாரை? திருமதி ஒய்.ஜி பி அம்மையாரையும் இன்னும் ஒரு தனியார் பள்ளி ஓனரையும். இவங்க கல்வியாளர் குழுவா? அவங்க பள்ளியில் படிச்சவங்க வேண்டுமானா கல்வியாளராக இருக்கலாம். அவங்க கல்வியாளரா? வாதி, பிரதிவாதி என இருவர் இருக்கும் போது பஞ்சாயத்துக்கு வாதி தரப்பை நியமிச்சது எப்படி ஒத்துப்பது? சரிய்யா... பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகி அவங்க. அவங்க பள்ளியிலே இத்தனை வருஷம் தனியாக ஒரு பாடத்திட்டம் வச்சு அதன் படி பசங்க படிச்சு பெரிய படிப்பு எல்லாம் படிச்சாங்களா? இல்லியே... அவங்களும் மத்த  மெட்ரிக் ஸ்கூல் படிக்கும் புத்தகம் தானே அவங்க பள்ளியிலே வச்சிருந்தாங்க. சரி மீதி நான்குபேரும் ஐ ஏ எஸ் அதிகாரிங்க. அவங்க கள்வியாளர்களா என்று நான் கேட்க முடியாது. அது கூடவும் கூடாது. ஏன்னா இங்க கல்வியாளர் என்றால் அளவு கோலே அவங்க பல பட்டம் வாங்கினவங்களா என்பதில் தான் இருக்கு. இது தப்பு என்பது தான் என் கருத்து. இன்னும் சொல்ல போனா ஆரம்ப பள்ளி பாடங்களுக்கு குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா வே என்னை பொருத்தவரை கல்வியாளர். ஏன்னா அவருக்கு குழந்தை மொழி தெரியுது. நல்லா புரியுது. அவரை கூப்பிட்டு அந்த வயசு குழந்தைகளுக்கு எப்படி பாடம் அமைக்கலாம் என கூட கேட்டிருக்கலாம். இல்லாட்டி இது போன்ற குழுவில் இடம் கொடுத்து இருக்கலாம். அது போல சில ஐ ஏ எஸ் ஆபீசர்ஸ் இருக்காங்க. நம்ம தாய்மொழியிலே ஆர்வமும் அக்கரையும் கொண்டவங்க. உதாரணத்துக்கு இறையன்பு இருக்காரு. ஏன்? உமாசங்கர் காத்திருப்புல இருக்காரு. அவங்களை கூட நியமிச்சு இருக்கலாம். மாட்டாங்க, ஏன்னா அரசாங்கம் முன்முடிவோட இருக்கு. இந்த திட்டம் செயல்படுத்த கூடாதுன்னு. உமாசங்கர் ஏற்கனவே ஒரு ஜூவி பேட்டியிலே "திமுக அரசின் சாதனை சமச்சீர் கல்வி தான் என பேட்டி குடுத்துட்டாருல்ல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அந்தம்மா அறிக்கையிலே பாடத்திட்டம் சிலபஸ் ரொம்ப கம்மியா இருக்கு. இது உலக அளவில் நம்ம கல்வித்தரத்தை கம்பேர் செய்யும் போது ரொம்ப கம்மின்னு சொல்லுது. சரி இதே இஞ்சினியரிங் படிக்கும் ஒரு பையனின் முதல் வருடம் பாடத்தை எடுத்து ஆறாம் வகுப்பு பையன் கிட்டே இன்னிக்கு முதல் இதாண்டா உன் பாடம்னு சொல்லிட்டு உலக லெவல்ல கொண்டு போய் காமிச்சா "ஆகா இந்தியாவிலே ஆறாம்பு படிக்கும் பையன் பாடம் இஞினியரிங் சிலபஸ்ப்பா. சூப்பர்"ன்னு சொல்லிட்டு போவான். ஆனா பையன் இங்க படிக்க முடியாம செத்துடுவான். இல்லாட்டி கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போவான். அவன் மூளை அளவு என்னவோ அதான் தரனும். சும்மா ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சித்திரை வெய்யில்ல வெஸ்டர்ன் கல்ச்சர்ன்னு சொல்லிகிட்டு கேட்டு சூட்டு போட்டுப்பதுக்கும், பெண்கள் ஒரு முழ வெள்ளி ஜரிகை வச்ச பட்டுப்புடவை கட்டிக்கிட்டு போவதுக்கும் இதுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி பள்ளிக்கூடம் வச்சு நடத்தும் ஆட்கள் தான் கல்வியாளர் என நீங்க அளவுகோல் வச்சா சொன்னா சிரிக்க கூடாது... ஜேப்பியாரும் உங்க அளவுகோலின் படி கல்வியாளர் தானே. அவரை நியமிச்சா எப்படியோ அதே போலத்தான் திருமதி ஒய் ஜி பி அம்மையாரும். இதான் என் கருத்து...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா: &lt;/span&gt;&lt;/b&gt;அய்யோ மாமா.. அதை எல்லாம் விடுங்க.. கேஸ் என்ன ஆகும்? சமச்சீர் கல்வி புத்தகத்தில் திமுக பத்தி அதிகம் இருக்குதாம். கலைஞர் எழுதிய கவிதை இருக்குதாமே?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;ரங்கன்&lt;/b&gt;&lt;/span&gt;: அதாவது மாப்ள! ஒரு கரும்பலகை இருக்கு. அதிலே ஒரு ஆப்பிள் படம் இருக்கு. அதுக்கு ஒரு பையனை கூப்பிட்டு கலர் அடிக்க சொல்றே. அவன் சிவப்பு கலர் அடிக்கிறான். பார்க்க அது திக கொடி மாதிரி இருக்குதாம். அதான் ஒரு புத்தகத்தில் ஒரு கருப்பு போர்டு அதிலே ஆப்பில் படம் அவுட்லைன் இருக்கு. அதிலே கலர் அடிக்க சொல்லி இருக்கு. அந்த பக்கம் இப்போ கிழிச்சு கிட்டு இருக்காங்க. தாடி வச்சவன் எல்லாம் பெரியார்ன்னு பயந்த காலம் ரிப்பீட்டு ஆகுது மாப்ளே ரிப்பீட்டு ஆகுது வேற ஒன்னும் இல்ல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;அபிஅப்பா&lt;/b&gt;&lt;/span&gt;: சரி மாமா! கலைஞர் கவிதை இருக்காமே? கனிமொழியின் சங்கமம் பத்தி இருக்காமே?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்&lt;/span&gt;&lt;/b&gt;: கலைஞர் கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைகழகம், தமிழ் பல்கலைகழகம் போன்ற தமிழ் பிரிவுகளிலேயே எம் ஜி ஆர் காலத்தில் இருந்தே பாடத்திட்டமாக இருக்குதே. அவர் கவிதை இப்போ சமச்சீர் கல்வி பாடட்ட்இல்லை. செம்மொழி மாநாட்டு பாடல் கலைஞரின் கவிதைன்னு கூட சொல்ல முடியாது. அது பழந் தமிழின் உயரிய  வரிகளின் தொகுப்பு என்றே கொள்ள வேண்டும். அதில் செம்மொழி மாநாட்டு இலட்சினை வருது. அதிலே கலைஞரின் எழுத்தினால் ஆன பழந்தமிழ் வரி இரண்டு வார்த்தை இருக்கு. அது தவறு என்றால்... எடுக்கட்டும் என கலைஞரே சொல்லியாகிவிட்டது. அது போல கனிமொழி முன்னின்று நடத்திய சங்கமம் பற்றி வருவதை எடுக்கட்டும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா: &lt;/span&gt;&lt;/b&gt;கனிமொழி இப்போ திகார்ல இருக்காங்க. ஒரு ஊழல் குற்றச்சாட்டிலே.. அப்படி இருக்க எப்படி மாமா இதை ஏத்துக்க முடியும்?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்:&lt;/span&gt;&lt;/b&gt; மாப்ள! அப்படிப்பார்த்தா காந்தி மேலயே குற்றம் இருப்பதாக ஆர் எஸ் எஸ் காரங்க சொன்னாங்க. சொல்றாங்க. அவர் படம் ரூபாய் நோட்டில் இருக்கு. பாடத்திட்டத்தில் இருக்கு. ஏன் இந்திரா, ராஜீவ் இவங்க மேலயும் தான் ஊழல் குற்றச்சாட்டு இருக்கு. அத்தனை ஏன்? இதோ நம்மை ஆளும் ஜெயலலிதா ஒரு அக்யூஸ்ட் என கன்விக்ட் ஆகி இருக்கு. நல்லா புரிஞ்சுக்கனும். கன்விக்ட் ஆகியது டான்சி வழக்கில். தண்டனை மட்டுமே இல்லை. நல்லா புரிஞ்சுக்கனும். நீதிபதி "அரசாங்க சொத்து வாங்கியது தவறு" என சொன்னார். 'அப்படின்னா திருப்பி தர்ரோம்"ன்னு கொடுத்தாங்க. அதான் நடந்துச்சு. தவிர அப்போ நீதிபதி "தான் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என சொன்னது தவறு"ன்னும் சுட்டி காட்டினாங்க. ஆனால் தண்டனை இல்லை. மன்னிப்பு கொடுக்கப்பட்டதே தவிர கன்விக்ட் தான் ஜெயலலிதா அம்மையார். அவங்க இதோ 27ம் தேதி ஆயிரம் கோடி அளவு சொத்து சேர்த்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும். அவங்க நம்மை ஆள நம்ம சட்டமும், மக்களின் பெருந்தன்மையும் அனுமதி அளிக்கும் போது கனிமொழி இன்னும் முழுமையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத வழக்கின் காரணமாக சிறையில் இருப்பது ஒன்றும் பஞ்சமா பாதகம் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா&lt;/span&gt;&lt;/b&gt;: மாமா! என்ன அளந்துகிட்டே போறீங்க? அது 66 கோடி ரூபாய் வழக்கு. போபார்சை விட ஜஸ்ட் ஆறு கோடி மட்டுமே அதிகம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்:&lt;/span&gt;&lt;/b&gt; மாப்ள! அது 15 வருஷம் முன்னே 66 கோடி ரூபாய். வச்ச இடத்திலே அப்படியே இருக்க அது என்ன பத்மனாபன் கோவில் பாதாள அறையா?அதன் பின்னே சம்பள கமிஷனே ரெண்டு தபா சம்பளம் ஏத்தியாச்சு. ரியல் எஸ்டேட் பலமடங்கு கூடிப்போச்சு. தங்கம் அப்போ பவுன் 2000 ரூபா. இப்போ 17000 ரூபாய். கூட்டி கழிச்சு பாரு மாப்ள எல்லாம் சரியா வரும்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிஅப்பா&lt;/span&gt;&lt;/b&gt;: மாமா சமச்சீர் கல்வி பத்தி ஆரம்பிச்சி எங்கயோ போகுது பேச்சு. சரி திமுக பொதுக்குழு கூடுது கோவையிலே... அது பத்தி அதுல மாவட்ட செயலர்க்கு பவர் பிடுங்கும் பேச்சு பத்தி என்ன நினைக்குறீங்க?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரங்கன்&lt;/span&gt;&lt;/b&gt;: மாப்ள என்னால இன்னிக்கு இவ்ளோவ் தான் முடியும். நான் துக்ளக் படிக்கனும் ஆளை விடு!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4725337119936999730-905734490757906570?l=abiappa.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://abiappa.blogspot.com/feeds/905734490757906570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/07/so.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/905734490757906570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4725337119936999730/posts/default/905734490757906570'/><link rel='alternate' type='text/html' href='http://abiappa.blogspot.com/2011/07/so.html' title='சுழல்நிதி (வருங்கால முதல்வர்) S/o கருணாநிதி (முன்னாள் முதல்வர்) - ரங்கன் மாமா அதிரடி பேட்டி!!!'/><author><name>அபி அப்பா</name><uri>http://www.blogger.com/profile/14263111725766945786</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_A8cQc3fnFWo/SVJuaXbeXwI/AAAAAAAAAaY/_GAACYXWzjI/S220/Nattu+Krishna+Latest.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4725337119936999730.post-3141160531352599785</id><published>2011-07-15T02:06:00.002+05:30</published><updated>2011-07-15T02:15:40.220+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவைமாதிரி\அனுபவம்'/><title type='text'>லேவாதேவியும் ரமாதேவியும்!!!</title><content type='html'>&lt;div&gt;அப்பா அந்த முன்னூத்தி சொச்சம் பணம் தீபவளி போனசாக வாங்கி கொண்டு வீட்டில் நுழைந்ததும் எங்களுக்கு உற்சாகம் தாங்கலை. ஏன்னா அதன் பின்னே தான் ட்ரஸ் எல்லாம் வாங்கனும். பலகாரம், வெடி எல்லாமே அதன் பின்னர் தான். அப்போது நாங்கள் அதாவது அக்கா ரெண்டு பேர் நான் என் தம்பி எல்லாருமே குழந்தைகள். அப்போ முன்னூறு ரூபாய் எதேஷ்டம் ஒரு தீபாவளியை நல்ல படியா அனுப்பி வைக்க. அதை கொண்டு வந்து சாமி படம் முன்னே வைத்து விட்டு அப்பா கொஞ்சம் ஆசுவாசமாய் உட்காந்து இருக்கும் போது தான் அந்த எலிக்குட்டி மாமா வந்தார். அப்பாவோடு ஆபீசில் வேலை பார்ப்பவர். ஜெகஜ்ஜால கில்லாடி. தான் எதும் செய்யாமல் தன் வியாபார அபிலாஷை எல்லாம் மத்தவங்களை தூண்டி விட்டு அது சரியானால் தான் அவர் இறங்குவார் அதிலே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எலிக்குட்டிமாமா அப்பாவிடம் "என்ன வைத்தா முள்ளங்கி பத்தை மாதிரி பணத்தை யாரோ நரகாசுரன் செத்ததுக்கா வேஸ்ட் பண்ணனும். இதை 3 வட்டிக்கு விட்டா மாசம் 9 ரூவா வட்டி வரும். மாசத்துக்கு விறகு கடை அக்கவுண்ட் சரிபண்ணிடலாமே. இல்லாட்டி அதை சேர்த்து வச்சா அதையும் கொஞ்சம் கொஞ்சமா வட்டிக்கு விட்டு ஒரு பெரிய பைனான்ஸ் ஆரம்பிக்கலாமே" என ஆசை காட்ட ஆரம்பத்தில் ஒத்துக்காத அப்பா "பைனான்ஸ் தொழிலதிபர்" ஆகும் ஆசையில் எங்களை கூப்பிட்டு 'நீங்க எல்லாம் ஒத்துழைச்சா அதாவது தீபாவளிக்கு ட்ரஸ் எதும் எடுத்துக்காம இருந்தா ஒரு ரெண்டரை வருஷத்துல இந்த பணம் அப்படியே இருக்கும். போட்ட காசு வட்டியாவே வந்துடும். பின்னே அதையும் விட்டா நாம ஓகோன்னு எங்கயோ போய்டலாம்" என சொல்ல எங்கம்மாவும் எழுத்தாளர் பைரவன் தங்கவேலு பொண்டாட்டி மாதிரி "ஆமாங்க எனக்கும் தொழிலதிபர் பொண்டாட்டின்னு சொல்லிக்க ஆசை தானே" என தாளம் போட சரின்னு நாங்களும் தொழிலதிபர் வாரிசாக ஆக ஆசைப்பட்டு ஒத்து கொண்டோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதல்லாம் சரி தான். தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்கூல் போகும் போது புது ட்ரஸ் எங்கேன்னு கேட்பாங்களே என்கிற மாபெரும் கவலை மட்டுமே எனக்கு இருந்தது. அதற்கு என் சின்ன அக்கா "டேய் கவலையை விடுடா. சின்ன தாத்தா செத்துட்டாங்க. அதனால தீவாளி இல்லைன்னு சொல்லிடலாம்" என சொல்ல எனக்கு தாத்தாவை தனியே  சாகடிக்க மனம் இல்லாததால் பாட்டியும் உடன்கட்டை ஏறிட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம் என நினைத்து அப்பா தொழிலதிபர் ஆக ஓட்டு போட்டுவிட்டோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாய்வழி செய்தியாக அப்பா வட்டிக்கு பணம் கொடுக்க இருக்கும் செய்தி எலிக்குட்டி மாமாவால் பரப்பப்பட்டது. ஆனாலும் ஒருத்தன் கூட பணம் கேட்டு வரலை. அதுக்குள்ள வீட்டில் பைனான்ஸ்க்கு என்ன பெயர் வைப்பது என்கிற சர்ச்சை ஆரம்பம் ஆகிடுச்சு.  அதுக்குள்ள என் பாட்டி "குடுத்து வாங்குற தொழில் தானே. அதுக்கு எதுக்கு பேர் எல்லாம் வைக்கனும்" என எக்குதப்பாய் கேட்க ஒட்டு மொத்த குடும்பமும் பாட்டியிடம் சண்டை. பைனான்ஸ்ன்னு அழகா  டீசண்டா இங்கிலிசுல சொல்றத விட்டுட்டு குடுத்து வாங்குறதாம்ல குடுத்து வாங்குறது. ஒரு வழியா நம்ம மாயூரநாதர் பெயரிலே வச்சுடுவோம். வட்டி வாங்கின பாவம் எதுனா வந்துச்சுன்னா அந்த பாவம் அவருக்கே போகட்டும் என நினைத்து மாயூரம் பைனான்ஸ் என வைத்த போது தான் எலிக்குட்டி மாமா ஏற்கனவே ஒரு மாயூரம் பைனான்ஸ் பிரபல்யமாக இருக்குதுன்னும் சட்ட சிக்கல் வரும் என சொல்ல உடனே அவயாம்பாள் பைனான்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு கஸ்டமருக்காக காத்திருக்க தொடங்கினோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வீட்டுக்கு  எவன் வந்தாலும் அவன் வட்டிக்கு பணம் வாங்க தான் வந்திருக்கான் என காபி உபச்சாரம் எல்லாம் முடிந்து அவன் கிளம்பும் போது அப்பா "வேற எதுனா கேட்கனும்னு வந்தீங்க போல" என ஞாபகப்படுத்தியும் எவனும் பணம் கேட்பதாக இல்லை. ஒரு வழியாக எலிக்குட்டி மாமாவே ஒரு கஷ்டமரோடு வந்தாரு. அவரு கஷ்ட்டமர் இல்லை கஷ்டம் மட்டுமே என எங்களுக்கு அப்போ புரியவே இல்லை. வந்தவரு பக்தி பழமா இருந்தாரு. எலிக்குட்டி மாமா " வைத்தா இவரு பேரு முருகேசன். நம்ம தெற்கு வீதி தான். இவரு வீட்டு பத்திரம் எடுத்து வந்திருக்காரு அடமானமா" என சொல்லிய போது அப்பாவுக்கு படபடன்னு ஆகிடுச்சு. "என்னது வீட்டு பத்திரமெல்லாம் வேண்டாம்" என படபடக்க எலிக்குட்டி மாமா விட்டாலும் முருகேசன் விடுவதாக இல்லை. "இல்லீங்க நீங்க இதை கண்டிப்பா வச்சுகிட்டு தான் பணம் தரனும். ஆனா எனக்கு அவசர மொடை. ஒரு 500 ரூபா குடுத்தா வாங்கிப்பேன். இல்லாட்டி நான் நவநீதம் நாயுடு கிட்டே போய் பத்திரம் குடுத்துட்டு வாங்கிக்கறேன்" என சொல்ல அப்பா "அட அப்படில்லாம் சொல்ல கூடாது கொஞ்சம் இருங்க" என சொல்லி அம்மா வளையலை கழட்டி வாங்கிகிட்டு சைக்கிள் எடுத்துகிட்டு அதே நவநீத நாயுடு கிட்டே போய் இருநூறு வாங்கி வந்து முருகேசனிடம்  ஐநூறு கொடுத்து விட்டு " மாசா மாசம் நான் பசங்க கிட்டே நோட்டு குடுத்து விடுறேன். நீங்க 15 ரூவா குடுத்துட்டு அதுல வரவு வச்சி குடுங்க" என கம்பேனி ரூல்ஸ் எல்லாம் சொல்லி அனுப்பி வச்சோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆச்சு. முருகேசன் பணம் வாங்கிகிட்டு போயாச்சு. நாங்களும் தீபாவளியை தாத்தாவும் பாட்டியும் செத்ததா கணக்கு காட்டி சமாளிச்சாச்சு. அப்பா அந்த முருகேசனை எந்த கல்யாண வீட்டில் பார்த்தாலும் திரும்பிப்பதும், கூடுமான வரையில் அவர் இருக்கும் தெரு பக்கம் போகாமலும் இருந்தாங்க. பின்னே அவர் எதுனா கல்யாண வீட்டில் கல்ந்துகிட்டா அவரு சைக்கிளை எடுத்துட்டு போன பின்னே தான் அப்பா போவாங்க. அதாவது  கலைஞரும்,எம் ஜி ஆரும் பொதுவான மபொசி வீட்டு கல்யாணத்துக்கு போவது போல. ஏன் இப்படின்னு அப்பா கிட்டே கேட்டப்ப அவங்க சொன்ன வியாக்யானம் அவங்க லேவாதேவிக்கு லாயக்கு இல்லை என்பதற்கான அறிகுறிகள் என்பது எங்க யாருக்கும் அப்ப புரியவில்லை. அதாவது இவங்களை பார்த்துட்டா "அய்யோ கடன் காரன் வந்துட்டானே" என அந்த முருகேசன் மனசு படாத பாடு படுமாம். பாவம் அதை தவிர்க்க தான் அப்பா முருகேசனை கண்டு ஒழிவதன் அர்த்தம். வெளங்கிடும்:-)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் மாசம் பெரியக்காவும் சின்னக்காவும் ஒரு சின்ன நோட்டு எடுத்துகிட்டு வட்டி வசூலுக்கு போய் நோட்டை மாத்திரம் ஜாக்கிரதையா எடுத்து வந்தாங்க. இப்படியாக மாசா மாசம் போய் வெறும் கையோட வந்தாங்க. பின்னே பெரிய அக்கா ஸ்கர்ட்ல இருந்து பாவாடைக்கு மாறினதும் சின்ன அக்காவுக்கு என்னை ஜோடி சேர்த்து அனுப்பினாங்க. பின்னே சின்ன அக்கா ஸ்கர்டில் இருந்து பாவாடைக்கு மாறினதும் அது வரை தவழ்து கிட்டு இருந்த என் தம்பியை எனக்கு ஜோடியாக ஆக்கி நோட்டை குடுத்து அனுப்பினாங்க. இப்படியாக சுட்டி குழந்தையாக இருந்த நாங்க வளர்ந்து கிட்டே இருந்தோமே தவிர வட்டி குழந்தை எட்டி கூட பார்கலை. அந்த நோட்டு மாத்திரம் வாசனை மாறாம புதுசாவே இருந்துச்சு. ஒரு மாசம் கூட எண்ட்ரி போடலை அந்த முருகேசன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நானும் என் தம்பியும் நோட்டு எடுத்துகிட்டு போனா அந்த முருகேசனுக்கு பத்திகிட்டு வரும். அப்ப தான் அவரு பொண்ணு ரமாதேவிக்கு கணக்கு பாடம் சொல்லி குடுப்பாரு எங்களை நிக்க வச்சுகிட்டே. " ஒருத்தன் 500 ரூவா மூணு வட்டிக்கு வாங்கினா மாசம் எவ்வளவு வட்டி"ன்னு கேட்பாரு. அது திரு திருன்னு முழிக்கும். நான் மட்டும் மனசிலே  "எண்ட்ரி போடாத வெறும் நோட்டு தான்" என நினைச்சுப்பேன். பின்னே எங்களை பார்த்து "போ போ " என அதட்டுவாரு. நான் அவரிடம் "அப்பா நோட்டிலே எண்ட்ரி போட்டு வாங்கியார சொன்னாங்க" என்பேன். அதை வாங்கி கிறுக்கி குடுப்பாரு. ஆசையாய் பிரித்து பார்ப்பேன். பாமாவிஜயம் நாகேஷ் மாதிரி "இல்லை மன்னிக்கவும்"ன்னு எழுதுவாரு. பின்னர் அந்த மன்னிக்கவும் எல்லாம் போய் "இல்லை" என எழுத ஆரம்பிச்சாரு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னே நான் ரமாதேவி மேல இருந்த கரிசனத்தால் அவங்க வீட்டுக்கு நோட்டு எடுத்து கிட்டு போகாமலே அவர் சொல்லும் அதே பதிலை அப்பா கிட்டே சொல்ல ஆரம்பிச்சேன். நாட்கள் ஓடிடுச்சுன்னு சொல்வதை விட வருஷங்கள் ஓடிடுச்சு. ஒரு நாள் எலிக்குட்டி மாமா வந்து " வைத்தா வட்டி எல்லாம் ஒழுங்கா வருதா?" என கேட்க வரலைன்னு சொன்னா அசிங்கமா போயிடுமேன்னு அப்பா "பின்னே பிரமாதமா வருது. முருகேசன் ஒன்னாம் நம்பர் யோக்கியன்" என "அ"வை ம்யூட் செஞ்சு குடுக்காத காசுக்கும் மேலே கூவ எலிக்குட்டி மாமா தலையை ஆட்டிகிட்டே போனாரு. ஒரு கட்டத்துக்கு மேலே அப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. ஊரான் வீட்டு பத்திரத்தை நாம வச்சுகிட்டு இருக்கோமேன்னு. பத்திரத்தை ஒரு மஞ்ச பையிலே போட்டு கிட்டு முருகேசனை தேடி போனாங்க. எப்படி சுத்தியும் முருகேசன் அப்பா கண்ணுல மாட்டலை. கிட்ட தட்ட ஆறுமாசம் அப்பா மஞ்சள் பை சகிதமா அலைய ஆரம்பிச்சாங்க. எல்லா நேரமும் கையில மஞ்ச பையோடவே இருந்தாங்க. எப்படி காந்தி சிலை அடையாளம் தெரிய கையிலே ஒரு கம்பு இருக்குமோ அப்படி அப்பாவுக்கு சிலை செஞ
